Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 3



தடக்காற்று கடுமையாய் வீசியதால், ஆற்றுத்துறைமுகத்தில் அம்மாவை படகில் ஏற சம்மதிக்க செய்ய நான் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மாவிடம் நியாயமில்லாமலும் அல்ல. நியு ஓர்லியன்சிலிருந்து வரும் நீராவிப் படகுகளின் குறுகிய மாதிரி வடிவமான இந்த படகுகளின் கேசொலின் எந்திரம் ஜுர நடுக்கத்தை படகின் மேலுள்ள எல்லாவற்றின் மேலும் கடத்தி விடக் கூடியவை.
 அங்கிருந்த வரவேற்பறையில் ஊஞ்சற் படுக்கைகள் மாட்டுவதற்கான கொக்கிகள் வெவ்வேறு உயரங்களில் இருந்தன; மேலும், நீள்-மர இருக்கைகளில் இடம் பிடிக்க மக்கள் தங்கள் எல்லா பயண மூட்டைகள், சரக்குப் பொட்டலங்கள், கோழிக்கூடைகள் மட்டுமில்லாமல் உயிருள்ள பன்றிகளையும் வேறு எடுத்தவாறு முட்டி மோதிப் போயினர்.

அங்கு மூச்சுத் திணறடிக்கும் சில சிற்றறைகள் உண்டு; ஒவ்வொன்றும் பயணத்தின் போதும், அவசர கால சேவைகள் வழங்கும், நைந்து நூலாய்ப் போன, இளம் வேசிகளால் அவை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். அவை இரு ராணுவப் படுக்கைகள் கொண்டவை. எந்த சிற்றறையிலும் இடமில்லாததால், நானும் அம்மாவும் இரு இரும்பு இருக்கைகளை அதிரடியாய் ஆக்கிரமித்தோம்; மேலும் அங்கேயே இரவைக் கழிப்பதற்கு தயாரானோம். முகத்துவாரத்திற்கு மிக அருகே சமுத்திர குணம் கொள்ளும் மெக்டலீனா ஆற்றை கடந்ததும், நாங்கள் பயந்தது போலவே கடுங்காற்று முன்னேற்பாடுகள் அற்ற அந்த கப்பலை திடீரென்று தாக்கியது. துறைமுகத்திலிருந்து நான் கறுப்புப் புகைலிலையாலும், சிப்பம் கட்ட பயன்படுத்தப்படும் மலிவான காகிதத்தாலும் செய்யப்பட்ட மிகவும் விலைகுறைவான சிகரெட்டுகளை நிறைய வாங்கி வைத்திருந்தேன்; ஆகஸ்டில் ஒளி நூலை மறுவாசிப்பு செய்தவாறு, அந்நாட்களில் நான் புகைக்கும் பாணியில், ஒரு சிகரெட்டின் நுனியில் மற்றொன்றை பற்ற வைத்து, புகைக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில், வில்லியம் பாக்னர் தான் என் காவல் பூதங்களில் மிகவும் விசுவாசமானவர்.

என் அம்மா தன் ஜெபமாலையை அது ஏதோ ஒரு எந்திரக் கலப்பையை இழுப்பதற்கோ அல்லது ஒரு விமானத்தை வானில் பிடித்து வைக்க முடிகிற கம்பி வடத்தை சுற்றியிழுக்கும் எந்திரம் என்பது போல் இறுக்கப் பற்றியிருந்தாள். அவள் தனக்காக எதையும் வேண்டிக் கொண்டதில்லை; அனாதையாகப் போகும் தன் பதினொரு குழந்தைகளுக்கு நீண்ட வாழ்வையும், செல்வ செழிப்பையுமே கேட்டாள். அவளது பிரார்த்தனை போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் நாங்கள் கால்வாயை அடைந்த போது, மழை மெனமையாகவே பெய்தது. மேலும், கொசுக்களை விரட்டும் அளவிற்கு காற்றும் பலமாய் வீசவில்லை. பிறகு அம்மா தன் ஜெப மாலையை கீழே வைத்து விட்டு, சுற்றிலுள்ள குழப்பமான வாழ்க்கையை மௌனமாக வெகு நேரம் அவதானித்தாள்.

அவள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தாலும், வாழைப்பழ தோட்டத்தின் தற்காலிக பிரம்மாண்டத்தில் வளர்ந்தாள்; அதிலிருந்து அவள் சாண்டா மார்டாவிலுள்ள கொல்ஜியோ டி லா பிரசண்டசியோன் டி லா சாண்டிஸ்மா விர்ஜினில் செல்வந்த பெண்ணொருத்திக்கான சிறந்த கல்வியைப் பெற்றாள். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, தோழிகளுடன் சேர்ந்து சித்திரத் தையல் இட்டாள், கொடை அங்காடியில் கிளாவிகார்டு இசைத்தாள், அத்தை ஒருவள் துணை போக உள்ளூர் கோழை மேட்டுக்குடியினர் நடத்திய பரிசுத்தமிக்க நடனங்களில் கலந்து கொண்டாள். ஆனால் அந்நகர தந்தி இயக்குனரை அவள் பெற்றோர் விருப்பத்திற்கெதிராய் திருமணம் செய்யும் வரை அவளுக்கு காதலன் இருந்த விஷயம் யாருக்கும் தெரியாது. அப்போதிலிருந்து அவளது அப்பட்டமான நற்குணங்கள் நகைச்சுவை உணர்வும், நீள் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் எதிர்பாரா தாக்குதல்களால் முறியடிக்கப்படாத ஆரோக்கியவுமே. ஆனால் அவளது ஆச்சரியமான குணம் பிரமாதமான அம்மனவலிமையை மறைக்கும் அற்புதத் திறமையே. அவள் ஒரு குறைபாடற்ற லியோ. இதன் காரணமாகவே எதிர்பாராத ஊர்களிலிருந்து வந்த தூரத்து உறவினர்கள் வரை அதிகார எல்லை நீண்ட பொன்னாட்சி ஒன்றை நிறுவி, சமையலறையில் இருந்தவாறே, சட்டியில் பீன்ஸ் கொதிக்கையில், குரல் தாழ்த்தி, கண்கூட சிமிட்டாமல் கோள்களின் குடும்பத்தை போல் அவ்வாட்சியை கட்டுப்படுத்த முடிந்தது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...