Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலி: அத்தியாயம் 2




ஒரு சில சீன சுயதொழில் முனைவோரை உருவாக்க கற்றறியலாம் என எதிர்பார்க்கிறீர்கள், அதனால் தான் நீங்கள் வருவது. இது என்னை திருப்தி செய்கிறது. சர்வதேச மரபொழுங்குப்படி என் தேசத்தின் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உங்களை விமான நிலையத்தில் மலர்செண்டுகள், சிறு கையடக்க சந்தன காந்தி சிலைகள் மற்றும் இந்தியாவின் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் பற்றின் முழுத்தகவல்களும் அடங்கின சிறுபுத்தகத்துடன் சந்திப்பார்கள் என்பது எனக்கு உறைத்தது. அப்போதுதான் ஆங்கிலத்தில் நான் அதனை சொல்ல வேண்டியிருந்தது, சார். மிக சத்தமாக. அது இரவு 11:37-க்கு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு.




நான் சும்மா ஏசுவதோ சபிப்பதோ இல்லை. நான் செயல் மற்றும் மாற்றத்தின் ஆள். அப்போதே அங்கேயே உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். முதலில் பழமையான சீன தேசத்தின் பாலான என் அபிமானத்தை சொல்ல வேண்டும். வித்தியாச கிழக்கிலிருந்து துடிப்பான கதைகள் எனும், முன்பு பழைய தில்லியின் ஞாயிறு பழைய புத்தக சந்தையில் பொழுது கழித்து சற்று ஞானமைடைய முயன்று கொண்டிருந்த நாட்களில், பாதையோரமாய் நான் கண்டடைந்த, புத்தகத்தில் தான் உங்களது வரலாறு பற்றி படித்தேன். இந்த புத்தகம் பெரும்பாலும் ஹாங்காங்க்கின் கடற்கொள்ளையர்கள் மற்றும் தங்கம் பற்றினதாக இருந்தது, ஆனாலும் அது கொஞ்சம் உதவிகரமான தகவல்களும் கொண்டிருந்தது: நீங்கள் சீனர்கள் விடுதலை மற்றும் தனிமனித சுதந்திர காதலர்கள் என அது சொன்னது. பிரிட்டிஷார் உங்களை அடிமையாக்க பார்த்தனர், ஆனால் நீங்கள் அதை அனுமதிக்கவில்லை. நான் அதை போற்றுகிறேன், திரு. பிரீமியரே.

பாருங்கள், நான் முன்பு வேலையாளாக இருந்தேன். மூன்று நாடுகள் மட்டும்தான் தங்களை அன்னியர்களால் ஆள அனுமதித்ததில்லை: சீனா, அஃப்கானிஸ்தான் மற்றும் அபிசீனியா. நான் வியந்து பாராட்டும் மூன்று தேசங்கள் இவை மட்டுமே. சீனர்களின் சுதந்திர மோகம் மீதான மரியாதை காரணமாக மற்றும் எங்களது முன்னாள் முதலாளி, வெள்ளையன், ஆசனப்புணர்ச்சி, குறும்பேசி பயன்பாடு மற்றும் போதை பழக்கம் காரணமாய் தன்னை அழித்துக் கொண்ட நிலையில், பூமியின் எதிர்காலம் மஞ்சள் மற்றும் மரநிற மனிதர்களிடம் உள்ளது எனும் நம்பிக்கையாலும், நான் உங்களுக்கு, இலவசமாக, பெங்களூர் பற்றின உண்மையை சொல்ல முன்வருகிறேன். என் வாழ்வின் கதையை சொல்வதன் மூலமாக.

பாருங்கள், நீங்கள் பெங்களூர் வந்து, ஒரு போக்குவரத்து விளக்கின் முன் நிற்கையில், ஒரு சிறுவன் ஒடி வந்து உங்கள் கார் ஜன்னலை தட்டுவான், கையில், கண்ணாடி தாளில் கவனமாக பொதியப்பட்ட, அமெரிக்க வியாபார நூல் ஒன்றின் திருட்டு பிரதியை கொண்டிருப்பான், கீழ்வருவது போன்ற தலைப்புடன்:

"வியாபார வெற்றிக்கான பத்து ரகசியங்கள்"
அல்லது
"ஏழு எளிய நாட்களில் சுயதொழில் அதிபர் ஆகுங்கள்!"

அந்த அமெரிக்க நூல்களில் காசை விரயம் செய்யாதீர்கள். அவை ரொம்பவே நேற்றையவை. நான் தான் இன்று. முறையான கல்வியைப் பொறுத்தவரையில், நான் ஓரளவு குறைந்துபட்டிருக்கலாம், நான் அவசியமானவை அனைத்தையும் படித்துள்ளேன். எக்காலத்துக்குமான நான்கு மகாகவிஞர்களின் படைப்புகளை மனப்பாடமாக தெரியும்: ரூமி, இக்பால், மிர்சா காலிப் மற்றும் பெயர் மறந்து போன நான்காவது நபர் ஒருவர். நான் சுயமாய் கற்ற சுயதொழில் முனைவோன்.

இருப்பதிலேயே சிறந்த வகை அதுதான், நம்புங்கள். நான் எப்படி பெங்களூர் வந்து, அதன் மிக வெற்றிகரமான, ஆனால் மிகக்குறைவாய் அறியப்படுகிற, வணிகன் ஆனேன் என்ற கதையை நீங்கள் கேட்ட பின், மனிதனின் இந்த அற்புதமான, குறிப்பாக மஞ்சள் மற்றும் மர நிற மனிதர்களுடைய, உங்களது மற்றும் என்னுடைய, இருபத்தி-ஒன்றாம் நூற்றாண்டில் சுயதொழில் முனைவு எப்படி பிறந்து, உரமூட்டப்பட்டு, உருவாக்கப்படுகிறது என்ப்தை பற்றி அனைத்தையும் அறிவீர்கள். இப்போது நள்ளிரவுக்கு சற்று முன்னான பொழுது, மேதகையரே. நான் பெச தோதான நேரம். நான் இரவெல்லாம் விழித்திருப்பேன், மேதகையரே. மேலும், இந்த 150 சதுர அடி அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை. நானும் எனக்கு மேலே சரவிளக்கும் மட்டுமே, சரவிளக்குக்கு தனதான ஒரு ஆளுமை இருந்தாலுமே. அது மிகப்பெரிய் ஒன்று, முழுக்க வைர வடிவ கண்ணாடித் துண்டுகளால் ஆனது, அப்படியே 1970களில் படங்களில் காட்டுவன போன்றது.


பெங்களூரில் இரவில் தேவையளவு குளுமையாக இருந்தாலும், ஒரு சின்ன காற்றாடியை, ஐந்து மிக மெல்லிசான அலகுகள் கொண்டது, சரவிளக்கு நேர் மேலே வைத்துள்ளேன். பாருங்கள், அது சுழலும் போது அதன் சிறு அலகுகள், சரவிளக்கின் வெளிச்சத்தை நறுக்கி அறைக்கு குறுக்காய் வீசுகின்றன. அப்படியே பெங்களூரின் மிகச்சிறந்த நடன விடுதிகளில் உள்ள விட்டு விட்டு மின்னும் விளக்கைப் போன்றது. சுயதொழில்முனைவோனுக்கான சாபம் அவன் எப்போதும் தன் வியாபாரத்தை க்ண்காணிக்க வேண்டும். நான் இப்போது சிறு காற்றாடியை இயக்கப் போகிறேன், இதனால் சரவிளக்கின் ஒளி அறையைச்சுற்றி சுழலும். நான் ஓய்வுமனநிலையில் உள்ளேன், சார். நீங்கள் அப்படியே என நம்புகிறேன். நாம் ஆரம்பிக்கலாம்.

நாம் அதை செய்யும் முன்பு, சார், நான் எனது முன்னாள் முதலாளி காலம் சென்ற திரு. அசோக்கின் முன்னாள் மனைவிடம் கற்றுக் கொண்ட வார்த்தைத் தொடர் இதுவே: what a fucking joke.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...