முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலி: அத்தியாயம் 2




ஒரு சில சீன சுயதொழில் முனைவோரை உருவாக்க கற்றறியலாம் என எதிர்பார்க்கிறீர்கள், அதனால் தான் நீங்கள் வருவது. இது என்னை திருப்தி செய்கிறது. சர்வதேச மரபொழுங்குப்படி என் தேசத்தின் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உங்களை விமான நிலையத்தில் மலர்செண்டுகள், சிறு கையடக்க சந்தன காந்தி சிலைகள் மற்றும் இந்தியாவின் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் பற்றின் முழுத்தகவல்களும் அடங்கின சிறுபுத்தகத்துடன் சந்திப்பார்கள் என்பது எனக்கு உறைத்தது. அப்போதுதான் ஆங்கிலத்தில் நான் அதனை சொல்ல வேண்டியிருந்தது, சார். மிக சத்தமாக. அது இரவு 11:37-க்கு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு.




நான் சும்மா ஏசுவதோ சபிப்பதோ இல்லை. நான் செயல் மற்றும் மாற்றத்தின் ஆள். அப்போதே அங்கேயே உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். முதலில் பழமையான சீன தேசத்தின் பாலான என் அபிமானத்தை சொல்ல வேண்டும். வித்தியாச கிழக்கிலிருந்து துடிப்பான கதைகள் எனும், முன்பு பழைய தில்லியின் ஞாயிறு பழைய புத்தக சந்தையில் பொழுது கழித்து சற்று ஞானமைடைய முயன்று கொண்டிருந்த நாட்களில், பாதையோரமாய் நான் கண்டடைந்த, புத்தகத்தில் தான் உங்களது வரலாறு பற்றி படித்தேன். இந்த புத்தகம் பெரும்பாலும் ஹாங்காங்க்கின் கடற்கொள்ளையர்கள் மற்றும் தங்கம் பற்றினதாக இருந்தது, ஆனாலும் அது கொஞ்சம் உதவிகரமான தகவல்களும் கொண்டிருந்தது: நீங்கள் சீனர்கள் விடுதலை மற்றும் தனிமனித சுதந்திர காதலர்கள் என அது சொன்னது. பிரிட்டிஷார் உங்களை அடிமையாக்க பார்த்தனர், ஆனால் நீங்கள் அதை அனுமதிக்கவில்லை. நான் அதை போற்றுகிறேன், திரு. பிரீமியரே.

பாருங்கள், நான் முன்பு வேலையாளாக இருந்தேன். மூன்று நாடுகள் மட்டும்தான் தங்களை அன்னியர்களால் ஆள அனுமதித்ததில்லை: சீனா, அஃப்கானிஸ்தான் மற்றும் அபிசீனியா. நான் வியந்து பாராட்டும் மூன்று தேசங்கள் இவை மட்டுமே. சீனர்களின் சுதந்திர மோகம் மீதான மரியாதை காரணமாக மற்றும் எங்களது முன்னாள் முதலாளி, வெள்ளையன், ஆசனப்புணர்ச்சி, குறும்பேசி பயன்பாடு மற்றும் போதை பழக்கம் காரணமாய் தன்னை அழித்துக் கொண்ட நிலையில், பூமியின் எதிர்காலம் மஞ்சள் மற்றும் மரநிற மனிதர்களிடம் உள்ளது எனும் நம்பிக்கையாலும், நான் உங்களுக்கு, இலவசமாக, பெங்களூர் பற்றின உண்மையை சொல்ல முன்வருகிறேன். என் வாழ்வின் கதையை சொல்வதன் மூலமாக.

பாருங்கள், நீங்கள் பெங்களூர் வந்து, ஒரு போக்குவரத்து விளக்கின் முன் நிற்கையில், ஒரு சிறுவன் ஒடி வந்து உங்கள் கார் ஜன்னலை தட்டுவான், கையில், கண்ணாடி தாளில் கவனமாக பொதியப்பட்ட, அமெரிக்க வியாபார நூல் ஒன்றின் திருட்டு பிரதியை கொண்டிருப்பான், கீழ்வருவது போன்ற தலைப்புடன்:

"வியாபார வெற்றிக்கான பத்து ரகசியங்கள்"
அல்லது
"ஏழு எளிய நாட்களில் சுயதொழில் அதிபர் ஆகுங்கள்!"

அந்த அமெரிக்க நூல்களில் காசை விரயம் செய்யாதீர்கள். அவை ரொம்பவே நேற்றையவை. நான் தான் இன்று. முறையான கல்வியைப் பொறுத்தவரையில், நான் ஓரளவு குறைந்துபட்டிருக்கலாம், நான் அவசியமானவை அனைத்தையும் படித்துள்ளேன். எக்காலத்துக்குமான நான்கு மகாகவிஞர்களின் படைப்புகளை மனப்பாடமாக தெரியும்: ரூமி, இக்பால், மிர்சா காலிப் மற்றும் பெயர் மறந்து போன நான்காவது நபர் ஒருவர். நான் சுயமாய் கற்ற சுயதொழில் முனைவோன்.

இருப்பதிலேயே சிறந்த வகை அதுதான், நம்புங்கள். நான் எப்படி பெங்களூர் வந்து, அதன் மிக வெற்றிகரமான, ஆனால் மிகக்குறைவாய் அறியப்படுகிற, வணிகன் ஆனேன் என்ற கதையை நீங்கள் கேட்ட பின், மனிதனின் இந்த அற்புதமான, குறிப்பாக மஞ்சள் மற்றும் மர நிற மனிதர்களுடைய, உங்களது மற்றும் என்னுடைய, இருபத்தி-ஒன்றாம் நூற்றாண்டில் சுயதொழில் முனைவு எப்படி பிறந்து, உரமூட்டப்பட்டு, உருவாக்கப்படுகிறது என்ப்தை பற்றி அனைத்தையும் அறிவீர்கள். இப்போது நள்ளிரவுக்கு சற்று முன்னான பொழுது, மேதகையரே. நான் பெச தோதான நேரம். நான் இரவெல்லாம் விழித்திருப்பேன், மேதகையரே. மேலும், இந்த 150 சதுர அடி அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை. நானும் எனக்கு மேலே சரவிளக்கும் மட்டுமே, சரவிளக்குக்கு தனதான ஒரு ஆளுமை இருந்தாலுமே. அது மிகப்பெரிய் ஒன்று, முழுக்க வைர வடிவ கண்ணாடித் துண்டுகளால் ஆனது, அப்படியே 1970களில் படங்களில் காட்டுவன போன்றது.


பெங்களூரில் இரவில் தேவையளவு குளுமையாக இருந்தாலும், ஒரு சின்ன காற்றாடியை, ஐந்து மிக மெல்லிசான அலகுகள் கொண்டது, சரவிளக்கு நேர் மேலே வைத்துள்ளேன். பாருங்கள், அது சுழலும் போது அதன் சிறு அலகுகள், சரவிளக்கின் வெளிச்சத்தை நறுக்கி அறைக்கு குறுக்காய் வீசுகின்றன. அப்படியே பெங்களூரின் மிகச்சிறந்த நடன விடுதிகளில் உள்ள விட்டு விட்டு மின்னும் விளக்கைப் போன்றது. சுயதொழில்முனைவோனுக்கான சாபம் அவன் எப்போதும் தன் வியாபாரத்தை க்ண்காணிக்க வேண்டும். நான் இப்போது சிறு காற்றாடியை இயக்கப் போகிறேன், இதனால் சரவிளக்கின் ஒளி அறையைச்சுற்றி சுழலும். நான் ஓய்வுமனநிலையில் உள்ளேன், சார். நீங்கள் அப்படியே என நம்புகிறேன். நாம் ஆரம்பிக்கலாம்.

நாம் அதை செய்யும் முன்பு, சார், நான் எனது முன்னாள் முதலாளி காலம் சென்ற திரு. அசோக்கின் முன்னாள் மனைவிடம் கற்றுக் கொண்ட வார்த்தைத் தொடர் இதுவே: what a fucking joke.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...