Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 4)



மனச்சமநிலையோடு அந்த கொடுமையான பயணத்தை அவள் தாங்குவதைக் கண்டு, இத்தனை வேகமாயும் தேர்ச்சியுடனும் வறுமையின் அநியாயங்களை எப்படி அவளால் கீழ்ப்படுத்திட முடிந்தது என நானே கேட்டேன். அந்த அதிபயங்கர இரவு அவளது உச்சகட்ட பொறுமையையும் சோதித்தது.
ரத்தவெறி பிடித்த கொசுக்கள், அடர்த்தியான வெப்பம், கடந்து செல்லும் எந்திரப் படகு கடைந்ததில் கால்வாய் சகதியிலிருந்து கிளம்பிய குமட்டச் செய்யும் வாடை, பிதுங்கும் கூட்ட நெரிசலில் இடம் கிடைக்காத தூக்கமற்ற பயணிகளின் குறுக்கும் நெடுக்குமான வெறிகொண்ட அலைச்சல் --- மிகச்சிறந்த நடுநிலை மனஇயல்பு கொண்டவரையும் கலங்கடிக்க இவை போதும் என்று தோன்றியது. வாடகைக்கான பெண்கள், ஆண்களைப் போலவோ மெனோலஸாகவோ ஆடை அணிந்து, கோலாகலக் கொண்டாட்ட அறுவடையை அருகிலுள்ள சிற்றறைகளில் கொய்திட, அம்மா எல்லாவற்றையும் தாங்கி தன் நாற்காலியில் அசைவற்று அமர்ந்திருந்தாள். அவர்களில் ஒருவள் ஒவ்வொரு முறையும் புது கிராக்கியுடன் என் அம்மாவின் நாற்காலிக்கு அடுத்திருந்த தன் சிற்றறைக்குள் பலமுறை போய் வந்தவாறு இருந்தாள். அம்மா அவளை பார்த்திருக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு மணிநேரத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது முறையாக அவள் நுழைந்து வெளியேறிய போது, அம்மா பாதை முடிவு வரை தன் பார்வையாலே இரக்கத்துடன் அவளைத் தொடர்ந்தாள். "பாவப்பட்ட சென்மங்க", பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள், "வாழ்க்கைப் பாட்டுக்கு அவர்கள் செய்ய வேண்டியது வேலை பார்ப்பதை விட மோசமானது".
நள்ளிரவு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது; தாங்க முடியாத அதிர்வும், வழிப்பாதையின் மங்கிய வெளிச்சமும் காரணமாய் வாசித்து நான் சோர்ந்து விட, யோக்னாபடாவபா கவுண்டியின் புதைமணல்களில் இருந்து என்னை விடுவிக்க முயன்றவாறு, அவளருகே புகைபிடிக்க அமர்ந்தேன். பெர்னாட்ஷாவில் நான் படித்துள்ளதாய் நம்பும் "மிகச்சிறு வயது முதலே என் கல்வியை பள்ளிக்கு போகும் பொருட்டு தற்காலிகமாய் நிறுத்த வேண்டியிருந்தது" எனும் ஒரு சொற்றொடரால் ஊக்கம் பெற்று பத்தி¡¢கைத்துறை மற்றும் இலக்கியத்தை பற்றி ஏதும் கற்றறியும் அவசியமின்றி அவற்றைக் கொண்டு வாழ்க்கைப்பாட்டை ஓட்டி விடலாம் என்ற குருட்டாம்போக்கு நம்பிக்கையுடன், ஒரு வருடம் முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்து நின்று விட்டிருந்தேன். இதற்கான காரணங்கள், அவற்றை எப்படி விளக்குவது என்று எனக்கு தொ¢யவில்லை என்றாலும், எனக்கு மட்டுமே தோதாக இருக்கும் என்று தோன்றியதால் அவற்றைப் பற்றி யா¡¢டமும் விவாதிக்க முடியவில்லை. என்னிடம் நிரம்ப நம்பிக்கை வைத்திருந்து, தங்களிடம் இல்லாத காசையும் எக்கச்சக்கமாய் செலவழித்துள்ள என் பெற்றோர்களிடம் இத்தகைய ஒரு கிறுக்குத்தனத்தை பற்றி நம்பிக்கை ஏற்படுத்துவது நேரத்தை விரயம் செய்வதாகும். குறிப்பாக, தன்னால் அடைய இயலாத, ஒரு கல்விச்சான்றிதழை சுவற்றில் தொங்கவிட இல்லை என்பதைத் தவிர வேறெதற்காகவும் அப்பா என்னை மன்னித்திருப்பார். எங்களிடையே பேச்சுவார்த்தை தடைபட்டிருந்தது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்குப் பின் அம்மா தோன்றி வீட்டை விற்க அவளுடன் செல்லுமாறு என் அழைக்கும்வரை அவரை சந்தித்து என் காரணங்களை விளக்க ஊருக்கு செல்வது பற்றி நான் திட்டமிட்டபடிதான் இருந்தேன். நள்ளிரவில் இரவுணவின் போது, ஏதோ அசா£¡¢ கேடட்து போல் என்னிடம், நிஜமாகவே, காரணத்தை சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டதாய் அவள் உணரும் வரை இந்த சமாச்சாரத்தை நான் குறிப்பிடவே இல்லை; புறப்படும் முன்பான தூக்கமற்ற இரவுகளின் தனிமையில் அவளுள் முதிர்ந்து பழுத்த முறை, தொனி மற்றும் துல்லியமான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாள்.
"உங்கள் அப்பா வருத்தமாக இருக்கிறார்”, அவள் சொன்னாள்.

சா¢தான், ஆரம்பித்தாகிவிட்டட்து. நான் மிகவும் பயந்த நரகம். அவள் எப்போதும் போலவே ஆரம்பித்தாள். நாம் ஒருபோதும் எதிர்பார்த்திராத போது, சற்றும் பதற்றம் கொள்ளாத ஆறுதலான் குரலில். என்ன பதில் வரும் என்பது மிக நன்றாக தொ¢ந்திருந்ததால், சம்பிரதாயமாக மட்டும் கேட்டேன்:
"ஏன் அப்ப்டி"
"ஏனென்றால் நீ படிப்பை நிறுத்தி விட்டாய் அல்லவா"
"நான் படிப்பை நிறுத்தவில்லை", நான் சொன்னேன்
"நான் வேலையை மட்டும் தான் மாற்றினேன்"
ஒரு முழுமையான விவாதத்துக்கான சாத்தியம் என் உற்சாகத்தை தட்டி எழுப்பியது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...