Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன்: மார்க்வெஸ் (அத்தியாயம் 6)

 
நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்கு பின் கால்வாயில் வளரும் கடற்பஞ்சு கூட்டங்களால் கப்பலின் செயலுறுப்புகள் வேகம் இழந்திருந்தாலும், மாங்குரு காட்டுக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டதாலும் மூன்று மணிநேரங்கள் தாமதமுற்றோம். வெக்கையும், கொசுக்களும் தாங்க முடியாத வண்ணம் இருந்தன; ஆனால் அம்மா, எங்கள் குடும்பத்தில் பிரபலமான, இடையிடையே ஆன குட்டித்தூக்கங்களால் இவற்றுக்கு பிடிகொடுக்காமல் தப்பித்தாள்; இதனால் உரையாடலின் சரடை நழுவ விடாமல் ஓய்வு கொள்ளவும் அவளால் முடிந்தது. பயணத்தை நாங்கள் மீண்டும் துவக்கி, புதுமலர்ச்சி தரும் தென்றல் வீசவும் அவள் முழு விழிப்புடன் இருந்தாள்.
"என்ன ஆனாலும்", அவள் பெருமூச்சுடன் சொன்னாள், "உன் அப்பாவுக்கு நான் ஏதாவது ஒரு பதில் சொல்லியாக வேண்டும்"
"நீங்க அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்", நான் மனத்தூய்மையுடன் சொன்னேன், "டிசம்பரில் நானே நேரடியாக வந்து எல்லா விஷயத்தையும் அவரிடம் விளக்குவேன்"
"அதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளனவே", அவள் சொன்னாள்.
"எப்படி இருந்தாலும் பல்கலைகழகத்தில் எதையாவது ஏற்பாடு செய்ய இந்த வருடம் ரொம்பவே பிந்தி விட்டது", நான் அவளிடம் சொன்னேன்.
"நிச்சயமாக வருவாயா?"
"சத்தியமாக"
முதன்முறையாக அவள் குரலில் ஒருவித பதற்றத்தை உணர்ந்தேன்.
"நீ ஆமா என்று சொல்லப் போவதாய் உங்க அப்பாவிடம் சொல்லலாமா?"
"வேண்டாம்" என்பது என் ஆணித்தரமான பதிலாக இருந்தது, "நீ அப்படி சொல்லக் கூடாது"
அவள் வேறு வழி தேடுகிறாள் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் நான் பிடிகொடுக்க இல்லை.
"அப்படி என்றால் அவரிடம் முழு உண்மையயும் ஒரே அடியாக சொல்வதுதான் நல்லது", அவள் சொன்னாள், "நான் ஏமாற்றுவதாய் அப்போது தோன்றாது அல்லவா"
"சரிதான்",நான் நிம்மதியாக சொன்னேன், "அவரிடம் சொல்லி விடுங்கள்"
நாங்கள் அங்கே நிறுத்தினோம்; அவளை சரியாக புரிந்திடாத ஒருவர் அது முடிந்து விட்டதென்று நினைக்கலாம், ஆனால் அது அவளுக்கு மூச்சு விடுவதற்கான சிறு இடைவேளை மட்டுமே என்று எனக்கு தெரியும். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் முழுமையாக தூங்கி விட்டாள். இளங்காற்று கொசுக்களை துரத்தி புதுக்காற்றில் பூமணத்தை கலந்தது. பின் அக்கப்பல் ஒரு பாய்மரப்படகின் நளினத்தை பெற்றது.
என் குழந்தைப் பருவத்தின் மித்துகளில் ஒன்றான சியானாகா கிராண்டே எனும் மாபெரும் சதுப்பு நிலத்தில் நாங்கள் இருந்தோம். என் தாத்தா கர்னல் நிகோலஸ் ரிகார்டோ மார்க்குவஸ் மெஜியா -- அவரது பேரக்குழந்தைகள் அவரை பாப்பலேலோ என்று அழைத்தனர் -- அரகடாகாவில் இருந்து பாரங்குல்லாவிற்கு பெற்றோர்களை சந்திக்க என்னை அழைத்து செல்லும் போது எல்லாம் பலமுறை இதைக் கடந்திருக்கிறேன். ஒரு குளத்தைப் போலவோ, கட்டுக்கடங்காத சமுத்திரத்தைப் போலவோ இயங்கக் கூடிய அதன் பெரு நீர்ப்பரப்பின் கணிக்க முடியாத மனநிலைகளைப் பற்றி பேசுகையில் அவர் என்னிடம் சொன்னார், "நீ சதுப்பு நிலத்தை பார்த்து அஞ்சக் கூடக் கூடாது. மரியாதை தரலாம் அதற்கு"
மழைக்காலத்தின் போது அது சயராவிலிருந்து வீசும் புயற்காற்றின் கருணையில் இருந்தது. டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரை, பருவ நிலை சாந்தமாக இருக்க வேண்டிய போது, வடகாற்று பெரும் ஆக்ரோசத்துடன் தாக்கியதால் ஒவ்வொரு இரவும் ஒரு சாகசமாக கழிந்தது. என் தாய்வழி தாத்தாவாகிய டிராங்குவிலினா இகுவாரன் -- மினா -- ரியோபிரையோவின் முகவாயில் அடைக்கலம் தேடி விடியல் வரை காத்திருக்க நேர்ந்த பயங்கர பயணத்திற்கு பின்னர், உயிர்போகும் அவசரம் இல்லாத பட்சத்தில் அதைக் கடக்கும் அபாயத்தை மேற்கொள்ள மாட்டார்.

எங்களின் அதிர்ஷ்டத்திற்கு அன்றிரவு கடல் அமைதியாக இருந்தது. வைகறைக்கு சற்று முன்னர்,கப்பல் முகப்பின் ஜன்னலுக்கு நான் காற்று வாங்க சென்ற போது மீன்பிடிப்படகுகளின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல் நீரில் மிதப்பதை கண்டேன். அவை எண்ணற்று தெரிந்தன. ஏதோவொரு அழைப்பை ஏற்று செல்வதைப் போல் சதுப்பு நிலத்தின் எல்லைகளுக்குள் மீனவர்களுன் குரல்கள் ஒருவித பேய்த்தனமான முழக்க அதிர்வு கொண்டிருந்தன. நான் கைப்பிடிச்சுவரில் சாய்ந்து சியராவின் எல்லைக் கோட்டை ஊகிக்க முயல்கையில் கடந்த கால நினைவெழுச்சிகளின் எதிர்பாரா முதல் தாக்குதலுக்கு உள்ளானேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...