முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன்: மார்க்வெஸ் (அத்தியாயம் 6)

 
நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்கு பின் கால்வாயில் வளரும் கடற்பஞ்சு கூட்டங்களால் கப்பலின் செயலுறுப்புகள் வேகம் இழந்திருந்தாலும், மாங்குரு காட்டுக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டதாலும் மூன்று மணிநேரங்கள் தாமதமுற்றோம். வெக்கையும், கொசுக்களும் தாங்க முடியாத வண்ணம் இருந்தன; ஆனால் அம்மா, எங்கள் குடும்பத்தில் பிரபலமான, இடையிடையே ஆன குட்டித்தூக்கங்களால் இவற்றுக்கு பிடிகொடுக்காமல் தப்பித்தாள்; இதனால் உரையாடலின் சரடை நழுவ விடாமல் ஓய்வு கொள்ளவும் அவளால் முடிந்தது. பயணத்தை நாங்கள் மீண்டும் துவக்கி, புதுமலர்ச்சி தரும் தென்றல் வீசவும் அவள் முழு விழிப்புடன் இருந்தாள்.
"என்ன ஆனாலும்", அவள் பெருமூச்சுடன் சொன்னாள், "உன் அப்பாவுக்கு நான் ஏதாவது ஒரு பதில் சொல்லியாக வேண்டும்"
"நீங்க அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்", நான் மனத்தூய்மையுடன் சொன்னேன், "டிசம்பரில் நானே நேரடியாக வந்து எல்லா விஷயத்தையும் அவரிடம் விளக்குவேன்"
"அதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளனவே", அவள் சொன்னாள்.
"எப்படி இருந்தாலும் பல்கலைகழகத்தில் எதையாவது ஏற்பாடு செய்ய இந்த வருடம் ரொம்பவே பிந்தி விட்டது", நான் அவளிடம் சொன்னேன்.
"நிச்சயமாக வருவாயா?"
"சத்தியமாக"
முதன்முறையாக அவள் குரலில் ஒருவித பதற்றத்தை உணர்ந்தேன்.
"நீ ஆமா என்று சொல்லப் போவதாய் உங்க அப்பாவிடம் சொல்லலாமா?"
"வேண்டாம்" என்பது என் ஆணித்தரமான பதிலாக இருந்தது, "நீ அப்படி சொல்லக் கூடாது"
அவள் வேறு வழி தேடுகிறாள் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் நான் பிடிகொடுக்க இல்லை.
"அப்படி என்றால் அவரிடம் முழு உண்மையயும் ஒரே அடியாக சொல்வதுதான் நல்லது", அவள் சொன்னாள், "நான் ஏமாற்றுவதாய் அப்போது தோன்றாது அல்லவா"
"சரிதான்",நான் நிம்மதியாக சொன்னேன், "அவரிடம் சொல்லி விடுங்கள்"
நாங்கள் அங்கே நிறுத்தினோம்; அவளை சரியாக புரிந்திடாத ஒருவர் அது முடிந்து விட்டதென்று நினைக்கலாம், ஆனால் அது அவளுக்கு மூச்சு விடுவதற்கான சிறு இடைவேளை மட்டுமே என்று எனக்கு தெரியும். சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் முழுமையாக தூங்கி விட்டாள். இளங்காற்று கொசுக்களை துரத்தி புதுக்காற்றில் பூமணத்தை கலந்தது. பின் அக்கப்பல் ஒரு பாய்மரப்படகின் நளினத்தை பெற்றது.
என் குழந்தைப் பருவத்தின் மித்துகளில் ஒன்றான சியானாகா கிராண்டே எனும் மாபெரும் சதுப்பு நிலத்தில் நாங்கள் இருந்தோம். என் தாத்தா கர்னல் நிகோலஸ் ரிகார்டோ மார்க்குவஸ் மெஜியா -- அவரது பேரக்குழந்தைகள் அவரை பாப்பலேலோ என்று அழைத்தனர் -- அரகடாகாவில் இருந்து பாரங்குல்லாவிற்கு பெற்றோர்களை சந்திக்க என்னை அழைத்து செல்லும் போது எல்லாம் பலமுறை இதைக் கடந்திருக்கிறேன். ஒரு குளத்தைப் போலவோ, கட்டுக்கடங்காத சமுத்திரத்தைப் போலவோ இயங்கக் கூடிய அதன் பெரு நீர்ப்பரப்பின் கணிக்க முடியாத மனநிலைகளைப் பற்றி பேசுகையில் அவர் என்னிடம் சொன்னார், "நீ சதுப்பு நிலத்தை பார்த்து அஞ்சக் கூடக் கூடாது. மரியாதை தரலாம் அதற்கு"
மழைக்காலத்தின் போது அது சயராவிலிருந்து வீசும் புயற்காற்றின் கருணையில் இருந்தது. டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரை, பருவ நிலை சாந்தமாக இருக்க வேண்டிய போது, வடகாற்று பெரும் ஆக்ரோசத்துடன் தாக்கியதால் ஒவ்வொரு இரவும் ஒரு சாகசமாக கழிந்தது. என் தாய்வழி தாத்தாவாகிய டிராங்குவிலினா இகுவாரன் -- மினா -- ரியோபிரையோவின் முகவாயில் அடைக்கலம் தேடி விடியல் வரை காத்திருக்க நேர்ந்த பயங்கர பயணத்திற்கு பின்னர், உயிர்போகும் அவசரம் இல்லாத பட்சத்தில் அதைக் கடக்கும் அபாயத்தை மேற்கொள்ள மாட்டார்.

எங்களின் அதிர்ஷ்டத்திற்கு அன்றிரவு கடல் அமைதியாக இருந்தது. வைகறைக்கு சற்று முன்னர்,கப்பல் முகப்பின் ஜன்னலுக்கு நான் காற்று வாங்க சென்ற போது மீன்பிடிப்படகுகளின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல் நீரில் மிதப்பதை கண்டேன். அவை எண்ணற்று தெரிந்தன. ஏதோவொரு அழைப்பை ஏற்று செல்வதைப் போல் சதுப்பு நிலத்தின் எல்லைகளுக்குள் மீனவர்களுன் குரல்கள் ஒருவித பேய்த்தனமான முழக்க அதிர்வு கொண்டிருந்தன. நான் கைப்பிடிச்சுவரில் சாய்ந்து சியராவின் எல்லைக் கோட்டை ஊகிக்க முயல்கையில் கடந்த கால நினைவெழுச்சிகளின் எதிர்பாரா முதல் தாக்குதலுக்கு உள்ளானேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...