Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 8



நாங்கள் ரயில்நிலையத்துக்கு ஒற்றைக்குதிரை விக்டோரியா வண்டியில் -- உலகின் ஏனைய பகுதிகளில் அருகி விட்ட புகழ்வாழ்ந்த மரபு ஒன்றின் இறுதிக் கண்ணியாக இருக்கலாம் -- சென்றோம். துறைமுகத்தின் சேற்றுக்குழியிலிருந்து தொடங்கி தொடுவானில் சென்று இணையும், நைட்ரேட்டால் நீறாகும் வறண்ட நிலத்தை பார்த்தவாறே அம்மா சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
எனக்கு அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம்: எனக்கு மூன்றோ நான்கோ வயதிருக்கும் போது பாரங்குல்லாவிற்கு என் முதல் பயணத்தை மேற்கொண்டிருக்கையில் தாத்தா என்னை கைப்பிடித்து இந்த எரியும் பாழ்வெளிக்கு குறுக்காக நடந்தபடி, எங்கு செல்கிறோம் என்பதை சொல்லாமல், அப்போதைக்கு ஆபத்து சமிக்ஞை ஏதுமின்றி, ஒரு நுரை கொப்புளிக்கும் பரந்த பச்சை நீர் விரிவின் முன் நின்றோம்; அங்கு பொருங்கூட்டமாய் மூழ்கிய கோழிகள் மிதந்தன.
"இதுதான் சமுத்திரம்", அவர் சொன்னார். ஏமாற்றமடைந்த நான் மறுகரையில் என்ன உள்ளது என்று கேட்டேன்; ஒரு நொடி கூட தயங்காமல் அவர் பதிலளித்தார், "மறுபுறம் கரையே இல்லை"


இன்று பல சமுத்திரங்களை முன்னும் பின்னும் கண்ட பிறகு நான் இப்போதும் அதையே அவரது மிகச்சிறந்த பதில்களில் ஒன்றாக கருதுகிறேன். எப்பிடி இருப்பினும் சமுத்திரம் பற்றின என் முந்தைய படிமங்களில், அழுகித் தொங்கும் மாங்குரூ மரக்கிளைகள் மற்றும் கூரான சங்கு சிதறல்கள் காரணமாக நடப்பதே அசாத்தியமான,. நைட்ரேட் ஓடு போல் படர்ந்த கடற்கரை கொண்ட அந்த படுமோசமான மாபெரும் நீர்நிலையோடு ஒப்பிடும் வண்ணம் எதுவும் இருக்கவில்லை.
சியனாகாவில் உள்ள சமுத்திரம் பற்றி அம்மாவுக்கு அதே எண்ணமே இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் இடப்பக்கமாக அது தெரிய ஆரம்பித்த உடனே பெருமூச்சு விட்டபடி சொன்னாள், "ரியோஹாச்சாவில் உள்ளது போன்ற சமுத்திரம் வேறெங்கேயும் இல்லை"
அந்த சந்தர்பத்தில் மூழ்கின கோழிகள் பற்றிய என் ஞாபகத்தை அவளிடம் சொன்னேன்; எல்லா வயது முதிர்ந்தோரையும் போல, அதுவொரு குழந்தைப்பருவ பிரமையென அவள் கருதினாள். பிறகு அவள் போகும் வழியே ஒவ்வொரு இடம் பற்றின தன் சிந்தனையோட்டத்தை தொடர்ந்தாள்; அவளது மௌனத்திலுள்ள மாற்றங்கள் மூலம் அவள் என்ன யோசிக்கிறாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறமுள்ள சிவப்பு விளக்கு மாவட்டத்தை கடந்தோம்; அங்கு வன்ணம் பூசப்பட்ட சிறுவீடுகளும், துருவேறிய அவற்றின் கூரைகளும், தாழ்வாரத்தில் இருந்து தொங்கிய வளையங்களில் அமர்ந்து கிராக்கிகளை போர்ச்சுகீஸ் மொழியில் அழைத்துக் கொண்டிருந்த பாரமரிவாரத்திலிருந்து வந்த மூப்பேறிய கிளிகளும் தெரிந்தன. ஊர்திகளை நீரடித்து கழுவும் இடத்தை கடந்தோம்; அதன் பிரம்மாண்ட குவிமாடத்தில் வலசைப்பறவைகளும் , வழிதொலைத்த பறவைகளும் உறக்கம் கொள்ள அடைக்கலம் அடைந்தன. மாநகரத்தினுள் நுழையாமல் அதன் எல்லையை சுற்றி வந்தோம்; ஆனால் அதன் அகன்ற ஏகாந்தமான தெருக்கள், மற்றும் மாலை வேளைகளில் முடிவற்ற பியானான் பயிற்சிகள் நடக்கும், தரைமுதல் கூரைவரை நீண்ட சாளரங்கள் கொண்ட ஒற்றை மாடி வீடுகளின் பழங்கால அலங்கார சிறப்பைக் கண்டோம். எந்த முன்னறிவிப்பும் என்று அம்மா சுட்டிக் காட்டினாள்.
"பார்", அவள் சொன்னாள், "அங்கேதான் உலகம் முடிந்து போனது"

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...