முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதைகள்: 2



அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார்

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார்.
அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன.
கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து
மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே
இடைவெளி உள்ளது. போக வேண்டிய இடத்துக்கு போகிறோம்.
நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை,
ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய
நூறு ஏக்கர் காட்டை? படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக
கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா? எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக
எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன்.
வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும்
ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும்
அவற்றையும் வேறுபடுத்தவில்லை. அப்பா சுற்றிலும் நோக்குகிறார்;
புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார். இந்த இடத்தில்
எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி.
வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்குப் பின் விட்டுப் போகும்
தொலைந்த உருவங்கள் மற்றும் கறுத்து உறைந்த நிலம்.
அவை குறுக்கே கடக்கின்றன ஒரு மேடையை கடப்பது போல்.

கண்ணாடி
(அ)



நாம் தொடர்ந்து மறையும் கண்ணாடி. அந்த கண்கள்
நமதல்ல, எப்போதும் அப்படி இருந்ததில்லை, அந்த தொலைந்து போன ஒன்றை
அவை தேடத் தேட. அவள் ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.
நான் அவள் பின்னால் இருந்தேன்; சுவர் மேல் சூரியன் பேசத் துடித்தது.
ஆனால் அதனால் சொல்ல முடிந்தது எல்லாம் போய் வருகிறேன்; மீண்டும் போய் வருகிறேன்.
அதுவே சிறந்ததாக இருந்தது; தொண்டையில் இடறலின் ஆனந்தம்.

(ஆ)

உன்னை பின்னால் பார்த்தேன்; நீ கவனிப்பது தெரிந்தது. நாம் காற்றில்
தொங்கினோம் உடலுடன் நிழல்கள்; காலம் கிளம்பி நின்றது,
கதவு வழி, அங்கிகள் தொங்கும் இருண்ட ஹாலின் ஊடே சென்றவாறு இருந்தது.
என் அங்கியை அணிந்து விட்டு, வெளியே சென்றேன்; ஷாப்பிங் செய்ய வேண்டி இருந்தது. சாலை
ஒரு மைய பரப்புத் தோற்றமாக தன்னை விரித்துக் கொண்டது.
வாழ்வு ஒரு வடிவியல், ஒரு கட்டிடக் கலைஞனின் பென்சில் கொண்டு கோடுகள் வரைதல்.

(அ)

எத்தனையோ மறைந்து விட்ட கண்ணாடி கடை ஜன்னல்கள்
போக்குவரத்தை திருப்பி முறைக்கின்றன, இழந்த பொருட்களின்
புகைப்படங்கள் உள்ள ஆல்பம், ஏறத்தாழ நடைபாதைக்குக் கீழ் புதைக்கப்பட்ட எலும்புகளின் எக்ஸ்.ரே படம்.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அது பனிமூட்டமாக இருந்தது, என் கண்ணாடிகளில் மூடுபனி படிந்திருந்தது.
அவள் அடுத்த மூலையில் திரும்பின போது என் லென்ஸ் முழுக்க எண்ணெய்க் கறைகள்.
சூரியனை எதிர்நோக்கி தற்போது நேராக அவள் சாம்பலாக எரிகிறாள்.

(ஆ)

நீ எப்போதும் எனக்கு பின்னுள்ளாய். நான் கழுவுத்தட்டில் கையலம்புகிறேன்.
நான் நின்று, நீ சவரம் செய்வதை கற்பனை செய்கிறேன். கண்ணாடியை தொட்டே விடுவது போல்
உன் முகம் முன்தள்ளப்பட்டுள்ளது. சவர-எந்திரத்தின் ஒலியைக் கேட்கிறேன்.
உச்சி மேகத்துக்கு மேல் தூரமாய் ஒரு விமானம் அடைகாக்கிறது. நீ
ஐ லவ் யூ சொல்லக் கேட்கிறேன்; கண்ணாடியின் சட்டகத்தில் இருந்து காலியாய், எரியும்
அறையின் வெளிக்குள் நான் நகர்வதை பார்க்கிறேன்.

பனிச்சறுக்கு பயணம்



உங்களுக்கு அந்த உணர்வு தெரியும் ஆனால் அதற்கு ஒரு பெயரிட முடியாது.
எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது. வாழ்வெல்லாம் அவள் உடலைச் சுற்றி
அலைந்துள்ளீர்கள். நீங்கள் தொடரும் ஒரு மறைவான உருவப்படிவம் போல் அதை அறிந்து கொண்டுள்ளீர்கள்.
உங்கள் வாழ்வே அவள் கூறிய
ஏதோ ஒன்றின் பகடியாக இருப்பது போல் உள்ளது. காலையில் முதல் விசயமாக
அவள் தோலை ருசிக்கிறீர்கள். அது நீங்கள் மறக்க
ஆரம்பித்ததன் தொடக்கத்தில் இருந்து
சுவாசித்த போதையான சன்னமான குழந்தை வாசம்.
அவள் கைகள். பறந்து வட்டமிடும் பறவை. பிறகு ஒரு மெல்லிய
சுருக்கம் கொண்ட தோல் தடிப்பு அஸ்தமன சூரியனை
உள்ளே கொண்டு. அப்பா உங்களை
வைத்து இழுத்துப் போன பனிச்சறுக்கு வண்டி போல காலம் நழுவிப் போகிறது. நீங்கள் உங்கள்
சகோதரருடன் அமர்ந்து இருக்கிறீர்கள், அவளை இறுகப் பற்றி, அவன் கையுடன்
தொங்கியபடி, உங்களை சுற்றி அனைத்தும் வெள்ளையாக
மங்கலாக, ஆகாயமும், மரங்களும், அனைத்தும் இல்லாமலாக
அல்லது சென்று கொண்டிருக்க, வழுக்கலான வாழ்வைக் கொண்ட
இரவை நோக்கி அபாயகரமாக வழுவியபடி;
நீங்கள் நிலவையோ, அல்லது எதாவது திடமானதையோ கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள்
மறப்பது, சுத்தமாக எதையுமே நினைவிற் கொண்டிராதது, சரிதான்.

abilashchandran70@gmail.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...