Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதைகள்: 2



அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார்

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார்.
அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன.
கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து
மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே
இடைவெளி உள்ளது. போக வேண்டிய இடத்துக்கு போகிறோம்.
நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை,
ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய
நூறு ஏக்கர் காட்டை? படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக
கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா? எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக
எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன்.
வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும்
ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும்
அவற்றையும் வேறுபடுத்தவில்லை. அப்பா சுற்றிலும் நோக்குகிறார்;
புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார். இந்த இடத்தில்
எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி.
வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்குப் பின் விட்டுப் போகும்
தொலைந்த உருவங்கள் மற்றும் கறுத்து உறைந்த நிலம்.
அவை குறுக்கே கடக்கின்றன ஒரு மேடையை கடப்பது போல்.

கண்ணாடி
(அ)



நாம் தொடர்ந்து மறையும் கண்ணாடி. அந்த கண்கள்
நமதல்ல, எப்போதும் அப்படி இருந்ததில்லை, அந்த தொலைந்து போன ஒன்றை
அவை தேடத் தேட. அவள் ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.
நான் அவள் பின்னால் இருந்தேன்; சுவர் மேல் சூரியன் பேசத் துடித்தது.
ஆனால் அதனால் சொல்ல முடிந்தது எல்லாம் போய் வருகிறேன்; மீண்டும் போய் வருகிறேன்.
அதுவே சிறந்ததாக இருந்தது; தொண்டையில் இடறலின் ஆனந்தம்.

(ஆ)

உன்னை பின்னால் பார்த்தேன்; நீ கவனிப்பது தெரிந்தது. நாம் காற்றில்
தொங்கினோம் உடலுடன் நிழல்கள்; காலம் கிளம்பி நின்றது,
கதவு வழி, அங்கிகள் தொங்கும் இருண்ட ஹாலின் ஊடே சென்றவாறு இருந்தது.
என் அங்கியை அணிந்து விட்டு, வெளியே சென்றேன்; ஷாப்பிங் செய்ய வேண்டி இருந்தது. சாலை
ஒரு மைய பரப்புத் தோற்றமாக தன்னை விரித்துக் கொண்டது.
வாழ்வு ஒரு வடிவியல், ஒரு கட்டிடக் கலைஞனின் பென்சில் கொண்டு கோடுகள் வரைதல்.

(அ)

எத்தனையோ மறைந்து விட்ட கண்ணாடி கடை ஜன்னல்கள்
போக்குவரத்தை திருப்பி முறைக்கின்றன, இழந்த பொருட்களின்
புகைப்படங்கள் உள்ள ஆல்பம், ஏறத்தாழ நடைபாதைக்குக் கீழ் புதைக்கப்பட்ட எலும்புகளின் எக்ஸ்.ரே படம்.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அது பனிமூட்டமாக இருந்தது, என் கண்ணாடிகளில் மூடுபனி படிந்திருந்தது.
அவள் அடுத்த மூலையில் திரும்பின போது என் லென்ஸ் முழுக்க எண்ணெய்க் கறைகள்.
சூரியனை எதிர்நோக்கி தற்போது நேராக அவள் சாம்பலாக எரிகிறாள்.

(ஆ)

நீ எப்போதும் எனக்கு பின்னுள்ளாய். நான் கழுவுத்தட்டில் கையலம்புகிறேன்.
நான் நின்று, நீ சவரம் செய்வதை கற்பனை செய்கிறேன். கண்ணாடியை தொட்டே விடுவது போல்
உன் முகம் முன்தள்ளப்பட்டுள்ளது. சவர-எந்திரத்தின் ஒலியைக் கேட்கிறேன்.
உச்சி மேகத்துக்கு மேல் தூரமாய் ஒரு விமானம் அடைகாக்கிறது. நீ
ஐ லவ் யூ சொல்லக் கேட்கிறேன்; கண்ணாடியின் சட்டகத்தில் இருந்து காலியாய், எரியும்
அறையின் வெளிக்குள் நான் நகர்வதை பார்க்கிறேன்.

பனிச்சறுக்கு பயணம்



உங்களுக்கு அந்த உணர்வு தெரியும் ஆனால் அதற்கு ஒரு பெயரிட முடியாது.
எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது. வாழ்வெல்லாம் அவள் உடலைச் சுற்றி
அலைந்துள்ளீர்கள். நீங்கள் தொடரும் ஒரு மறைவான உருவப்படிவம் போல் அதை அறிந்து கொண்டுள்ளீர்கள்.
உங்கள் வாழ்வே அவள் கூறிய
ஏதோ ஒன்றின் பகடியாக இருப்பது போல் உள்ளது. காலையில் முதல் விசயமாக
அவள் தோலை ருசிக்கிறீர்கள். அது நீங்கள் மறக்க
ஆரம்பித்ததன் தொடக்கத்தில் இருந்து
சுவாசித்த போதையான சன்னமான குழந்தை வாசம்.
அவள் கைகள். பறந்து வட்டமிடும் பறவை. பிறகு ஒரு மெல்லிய
சுருக்கம் கொண்ட தோல் தடிப்பு அஸ்தமன சூரியனை
உள்ளே கொண்டு. அப்பா உங்களை
வைத்து இழுத்துப் போன பனிச்சறுக்கு வண்டி போல காலம் நழுவிப் போகிறது. நீங்கள் உங்கள்
சகோதரருடன் அமர்ந்து இருக்கிறீர்கள், அவளை இறுகப் பற்றி, அவன் கையுடன்
தொங்கியபடி, உங்களை சுற்றி அனைத்தும் வெள்ளையாக
மங்கலாக, ஆகாயமும், மரங்களும், அனைத்தும் இல்லாமலாக
அல்லது சென்று கொண்டிருக்க, வழுக்கலான வாழ்வைக் கொண்ட
இரவை நோக்கி அபாயகரமாக வழுவியபடி;
நீங்கள் நிலவையோ, அல்லது எதாவது திடமானதையோ கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள்
மறப்பது, சுத்தமாக எதையுமே நினைவிற் கொண்டிராதது, சரிதான்.

abilashchandran70@gmail.com

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...