முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 11


அம்மா தான் இத்தகைய வாதைகளில் இருந்து விடுபட்டவள் என்று நினைத்தாள்; ஏனெனில் அவளது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் அரகடாகா உடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். அவளது கனவுகள் அவளை ஏமாற்றின.
குறைந்தது காலை சிற்றுண்டியின் போது யாரும் ஆர்வம் உடையோர் இருந்தால் அவள் சொல்வதெல்லாம் வாழைத்தோட்ட பிராந்தியம் தொடர்பான பழங்கால ஏக்க நினைவுகளுக்கு தொடர்புள்ள விசயங்களாகவே எப்போதும் இருக்கும். நிறுவனம் திரும்ப வந்த பின் மும்மடங்காக விலையை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் மிகச்சிரமமான வேளைகளில் எல்லாம் வீட்டை விற்காமல் தாக்குப்பிடித்து வந்திருந்தாள். கடைசியில் எதார்த்தத்தின் தாங்கவொண்ணா நெருக்கடி அவளை தோற்கடித்து விட்டது. ஆனால் ரயிலில் பாதிரியார் அந்நிறுவனம் திரும்பி வருவதாக சொல்லக் கேட்ட போது அவள் துயரமிக்க சைகை ஒன்றை செய்துவிட்டு என் காதில் கிசுகிசுத்தாள், “என்னவொரு வெட்கக்கேடு, நம்மால் இன்னும் சற்று பொறுத்து, அதிக விலைக்கு வீட்டை விற்க முடியாதே”

பாதிரியார் பேசிக் கொண்டிருக்கையில் சதுக்கம் முழுக்க நிரம்பி நின்ற கூட்டம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் உற்சாகமாக கச்சேரி வாசிக்கும் இசைக்குழுவினர் தென்பட்ட நகரம் ஒன்றைக் கடந்தோம். இந்த அனைத்து நகரங்களும் எனக்கு ஒன்று போலவே தோன்றின.
பாப்பலேலோ என்னை டோன் ஆண்டோனியோ போகோண்டேவின் புத்தம் புதிய ஒலிம்பிய சினிமாவுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் அங்கு காட்டப்படும் கவ்பாய் திரைப்படங்களில் வரும் ரயில்நிலையங்கள் எங்களது நிலையங்கள் போலே உள்ளதை கவனித்திருக்கிறேன். பின்னர் பாக்னரை படிக்கையில் அவரது நாவல்களில் வரும் சிறு நகரங்களும் எங்களுடையது போல் தோன்றியது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை; ஏனெனில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழைப்பழ நிறுவனத்தின் மீட்பாளர் பாணி தூண்டுதலால், ஒரு தற்காலிக முகாமின் மோஸ்தரில், கட்டியெழுப்பப் பட்டவையே அவை. சதுக்கத்திலுள்ள தேவாலயம் மற்றும் அடிப்படை வண்ணங்கள் மட்டும் தீட்டப்பட்ட தேவதைக்கதை வீடுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன். வைகறையில் பாடும் கறுப்பின தொழிலாளர்களின் குழுக்கள், தோட்டங்களில் நிலக்கூலிகள் ஆர அமர்ந்து சரக்கு ரயில்கள் போவதை வேடிக்கை பார்த்தபடி இருக்கும் குடிசைகள் மற்றும் சனி இரவு கலாட்டாக்களில் வெட்டப்பட்ட தலைகள் காலையில் கிடக்கும் பள்ளங்களும் நினைவுக்கு வந்தன.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம், குளிர், கோடை விடிகாலைகளில் கருகின தூக்கணாங்குருவிகளால் கறுப்பாய் தோற்றமளிக்கும் மின்சார கம்பி வேலியால் சூழப்பட்ட கோழிப்பண்ணை போன்ற அரகடகாவிலும், செவில்லகாவிலுமுள்ள ஆங்கிலேயர்களின் தனிப்பட்ட நகரங்களை ஞாபகம் கொண்டேன். மயில்களும், கௌதாரிகளும் கொண்ட அவர்களது நிச்சலமான புல்வெளிகள், சிவப்புக் கூரை, ஜன்னல்களில் கம்பிக்கிராதிகள், பனைமரங்கள், தூசு மண்டிய ரோஜாப்புதர்களிடையே பால்கனியில் உணவருந்த சிறுமேஜைகள், மடிப்பு நாற்காலிகள் உடைய குடியிருப்புகளையும் நினைவு கூர்ந்தேன். சில நேரங்களில் கம்பி வேலியினூடே மென்துகில் உடுத்து, அகன்ற பட்டுவலை தொப்பிகள் அணிந்த அழகான சோம்பலுற்ற பெண்கள் தங்கக் கத்திரிக்கோலால் தங்கள் தோட்டங்களில் பூக்கள் வெட்டுவதை காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...