முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 10



ஒருவேளை அந்த மொத்த ரயிலிலும் நாங்கள் மட்டுமே பயணிகளாய் இருந்திருப்போம்; அதுவரையிலும் எதுவுமே எனக்கு நிஜமான சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை. "ஆகஸ்டில் வெளிச்சத்தின்" மந்தத்துக்குள், இடைவிடாது புகைத்தபடி, ஆனால் அடிக்கடி வேகமாக பார்வையை வீசி நாங்கள் கடந்து செல்லும் இடங்களை அடையாளம் கண்டவாறு, ஆழ்ந்தேன்.

நீண்ட சீட்டி ஒலியுடன் ரயில் உப்பு சதுப்பு நிலங்களை கடந்து. எலும்புகளை உதற வைக்கும் சிவப்புப்பாறை இடைவழி நிலத்தின் மீது முழுவேகத்தில் சென்றது; அங்கு தொடர்வண்டிகளின் செவிடாக்கும் சத்தம் தாங்கவொண்ணா விதமாக இருந்தது; ஆனால் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பின், வண்டி வேகம் குறைந்து தோட்டங்களின் நிழல்மண்டிய குளிர்மைக்குள் விவேகமான மௌனத்துடன் நுழைந்தது; காற்று மண்டலம் மேலும் அடர்த்தியானது; பின்னெப்போதும் கடற்காற்றை உணர முடியவில்லை. வாழைத் தோட்ட பிரதேசத்தின் ஆசிரம எல்லையின் மாயமண்டலத்துள் நுழைந்து விட்டோம் என்பதை அறிய நான் என் வாசிப்பை தடை செய்ய வேண்டி இருக்கவில்லை.
உலகம் மாற்றம் கொண்டது. சரிச்சீரமைவுடைய முடிவடையாத வாழைத் தோட்ட பாதைகள் இருபுறங்களிலாய் விரிந்து சென்றன; அவ்வழியே வாழைத் தண்டுகள் ஏற்றப்பட்ட காளை வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. பயிரிடப்படாத இடங்களில் திடீரெனத் தோன்றின செங்கல் முகாம்கள், ஜன்னலின் கரடுமுரடான திரைச்சீலைகள் கொண்ட, கூரையிலிருந்து மின்விசிறிகள் தொங்கும் அலுவலகங்கள் மற்றும் போப்பி வயலில் ஏகாந்தமாய் நிற்கும் மருத்துவமனை ஒன்றும் இருந்தன. ஒவ்வொரு ஆற்றிற்கும் அதற்கென ஒரு கிராமமும், ஒரு இரும்பு பாலமும் இருந்தன; அப்பாலத்தில் சிதறடிக்கும் விசில் சத்தததுடன் ரயில் கடக்கையில் ஐஸ் போன்று சில்லிட்ட நீரில் குளிக்கும் இளம்பெண்கள் ஷாட்மீன் போல் மின்னலென மறையும் மார்புகளால் பயணிகளை நிலைகுலைய செய்தபடி தாவினர்.



ரியோபிரியோ நகரத்தில் அந்நாட்டிலேயே பெரிதான, சுவையில் சிறந்ததான பேரிக்காய்கள் திணித்த மூட்டைகளை சுமந்து கொண்டு பல அரசுவாக் குடும்பங்கள் ரயிலில் ஏறினர். உட்கார இடம் தேடி தொடர்வண்டிக்குள் மேலும் கீழுமாய் தயக்கத்துடன் அலைந்தனர்; ஆனால் ரயில் மீண்டும் நகர ஆரம்பித்த போது சிறுகுழந்தையை வைத்திருந்த வெள்ளைகாரியும் ஒரு பாதிரியாருமே மிச்சமிருந்தார்கள். அந்த குழந்தை மீதமுள்ள பயணத்தில் எப்போதும் அழகையை நிறுத்தவில்லை. பாதிரியார் ஒரு ஆய்வு பயணிக்கான பூட்ஸ், தலைக்கவசம் மற்றும் சொரசொரப்பான துணியால் செய்யப்பட்ட, கப்பற்பாய் போன்று சதுர வடிவிலான, அங்கங்கே ஒட்டுப்போட்ட நீண்ட இறுக்கமான அங்கி ஒன்றை அணிந்திருந்தார்; குழந்தை அழும் நேரத்தில் அவரும் பெசினார், எப்போதும் எதோ தேவாலய உரைமேடையில் பேசுவது போல். வாழைப்பழ நிறுவனம் திரும்பி வருவதற்கான சாத்தியப்பாடே அவரது உரையின் மையப்பொருளாக இருந்தது. அது போன பின் வேறெதையும் பற்றி அந்த பிரதேசத்தில் பேசப்படவில்லை. எல்லோரும் அது திரும்ப வரவேண்டும் என்றும், வேண்டாம் என்றும் கருத்துரீதியாக முரண்பாட்டாலும், அதன் மறுவருகை நிச்சயம் என்றே கருதினர். பாதிரியார் அதன் மீள்வருகைக்கு எதிராக இருந்தார். மேலும் அவர் தன் நிலைப்பாட்டை மிகவும் தனிப்பட்ட ஒரு விவாதத்தில் வெளிப்படுத்தியதை அப்பெண்கள் படுமுட்டாள்தனம் எனக்கருதினர். “அந்நிறுவனம் போகும் இடம் எல்லாம் நசிவை விட்டுச் செல்கிறது”. அவர் சொன்ன ஒரே சுவாரஸ்யமான விசயம் அதுதான்; ஆனால் அவரால் அதை விளக்க முடியவில்லை; இறுதியில் சிறுகுழந்தையுடன் வந்திருந்த பெண் கடவுள் அவருடன் கருத்தொற்றுமை கொள்ள மாட்டார் என்று சொல்லி அவரை குழப்பினாள். நினைவு ஏக்கம், எப்போதும் போல், கெட்ட நினைவுகளை வழித்து துடைத்து நீக்கி, நல்லவற்றை பெரிதாக்கி காட்டி விட்டது. அதன் தாக்குதலில் இருந்து யாரும் தப்பிக்க இல்லை. ஆண்கள் தங்கள் வீட்டு வாசற்படியில் அம்ர்ந்திருந்ததை ரயில் ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது; அவர்கள் எதற்காக் காத்திருந்தனர் என்று அறிந்து கொள்ள அவர்கள் முகத்தை நோக்கினாலே போதும். கற்கள் பாவிய கடற்கரையில் துணி துவைத்துக் கொண்டு இருந்த பெண்கள் ரயில் கடப்பதை அதே எதிர்பார்ப்புடனே பார்த்தனர். பிரீப்கெசுடன் வந்தடையும் ஒவ்வொரு அந்நியனும் ஒருங்கிணைந்த பழ நிறுவனத்திலிருந்து இறந்த காலத்தை மறுபடியும் ஸ்தாபிக்க வருவதாகவே அவர்கள் நினைத்தனர். ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஒவ்வொரு பயணத்தின் போதும், உடனேயோ பிறகோ இந்த மறைநிலை மெய்வாக்கியம் வெளிப்படும்: ”நிறுவனம் திரும்ப வரப் போவதாக் சொல்கிறார்கள்”. யார் சொன்னதென்றோ எப்போது அல்லது ஏன் என்றோ யாருக்கும் தெரியாது; ஆனால் யாரும் அது பொய்யென்று சந்தேகிக்க இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...