முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராபர்ட் பிளை கவிதைகள்

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதைகள்



மகிழ்ச்சியின் மாதம்

குருட்டுக் குதிரை செர்ரி மரங்களுடன் நிற்கிறது.
தண்மையான பூமியில் இருந்து எலும்புகள் மின்னும்.
ஏறத்தாழ ஆகாயம் வரை
இதயம் துள்ளும்! ஆனால் அரற்றல்களும் தாவர இழை உறுப்புகளும்
நம்மை திரும்ப இருளுக்குள் இழுக்கும்.
இரவு நம்மை எடுத்துக் கொள்ளும். ஆனால்
ஒரு விலங்குப்பாதம்
சாலையை வெளிச்சமூட்ட இருட்டில் இருந்து
வெளிவருகிறது. ஒன்றும் பிரச்சனையில்லை.
எனது அனல் தடயங்களை இரவின் ஊடாக தொடர்வேன்.


மரணத்துக்குப் பிறகு காலம் பின்னோடுகிறது


விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக ரொட்டி அரைக்கும் சாம்சன்
தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதை மறக்கிறான், பிலிஸ்டைனர்கள்
அவனிடமிருந்து பிடுங்கின பதில்கள் சிங்கத்துக்குள் திரும்புகின்றன. கசப்பும் இனிமையும் மணம் புரியும்.
அவனே சிங்கத்துக்கு அநியாயம் செய்தான். இப்போது கோதுமைப் பயிர்
காற்றை தன் மனைவி வாலால் வருடுகிறது; கழுதை
நீண்ட புற்களில் ஓடுகிறது, மேலும், சுவர்க்கத்தை விரைந்து பார்த்தபடியால், நரியின் உடல் இளங்காவி பூமியில் ஓய்வாகச் செல்லும்.


மரணத்துக்குப் பின் ஆன்மா தன் சந்தடியற்ற வீட்டுக்கு
பாலும் தேனும் அருந்த திரும்பும். உடைந்த உத்தரங்கள் சூரியோதய வாயிற்கதவுகளை திரும்ப சேர்க்கும், மேலும் தேனீக்கள் புளித்த
இறைச்சியில் பாடும். மீண்டும் தொட்டிலில் அவனது முடி
நீளமாய் பொன்னிறமாய் வளரும்; டிலிலாவின் கத்திரிக்கோல்
இரு குட்டி விளையாட்டுக் கத்திகளாக திரும்ப மாறும்.
பின் எப்போதும் அஸ்தமனம் மற்றும் நிழல்களால் துரத்தப்படாமல், சாம்சன்
கிழக்கு சமுத்திரத்தில் மூழ்கி, பிறக்கிறான்.


பழைய ஆசிரியர்களிடத்து நன்றியறிதல்



உறைந்த ஏரி மேல் வீறாப்பாய் அல்லது ஓய்வாய் நடக்கையில்
நாம் இதுவரை என்றுமே இருந்திராத இடத்தில் நம் காலடிகளை வைக்கிறோம்.
நாம் நடக்காததன் மீது நடக்கிறோம். ஆனால் சங்கடப்படுகிறோம்.
கீழே உள்ளது நம் பழைய ஆசிரியர்கள் அன்றி வேறு யார்?

மனிதப் பளுவை என்றுமே ஏற்றிராத நீர் – நாங்கள்
அப்போது மாணவர்கள் – எங்கள் பாதங்களை ஏந்துகிறது,
மேலும் ஒரு மைல் தொலைவுக்கு முன்னே செல்கிறது.
நமக்கு கீழே ஆசிரியர்கள், மேலும் நம்மைச் சுற்றி நிச்சலனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.