முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 15



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம் வாழைப்பழ நிறுவனத்தின் தனிப்பட்ட சொர்க்கபூமி, மின்கம்பி வேலி நீக்கப்பட்டு, பனைமரங்கள் ஏதுமின்றி, போப்பிச்செடிகள் மத்தியில் பாழடைந்த வீடுகள் மற்றும் தீயில் அழிந்த மருத்துவமனையின் கற்கூளத்துடன் புதர்காடாக இருந்தது. ஒரு கதவோ, சுவற்றில் சிறுவிரிசலோ அல்லது மானிட அடையாளமோ என்னில் ஆழ்மன நினைவெழுச்சியை ஏற்படுத்தவில்லை.

வளைவில் சென்று நாங்கள் திரும்பிய போது என் செருப்பின் வலைப்பின்னல் வழி தூசு மீது காலடிகள் எரிந்தன. கைவிடப்பட்ட உணர்வு தாங்கவொண்ணாததாக இருந்தது. நான் சிறுவனாயிருக்கையில், வீட்டை உடைத்து புக முயன்று மரியா கன்சியுகாராவின் ஒரு குண்டில் பலியான திருடனின் அம்மா மற்றும் சகோதரியை ஒரு வாரத்திற்கு பின் கண்ணுற்றது போலவே என்னையும் அம்மாவையும் இப்போது பார்த்தேன்.
அதிகாலை 3 மணிக்கு தெருவை நோக்கியிருக்கும் வீட்டுக்கதவை வெளியிலிருந்து யாரோ தள்ளி உடைக்க முயலும் ஓசை கேட்டு அவள் விழித்து விட்டிருந்தாள். விளக்கை ஏற்றாமலே எழுந்தவள் தட்டித் தடவி ஆயுதப் பெட்டியிலிருந்து ஆயிரம் நாட்கள் போருக்கு பின் யாரும் சுட்டிராத அரதப்பழசான கைத்துப்பாக்கியை எடுத்து, இருட்டில் கதவிருந்த இடத்தை மட்டுமல்ல பூட்டியிருந்த சரியான உயரத்தையும் கணித்தாள். பிறகு ஆயுதத்தை இருகைகளாலும் ஏந்தி குறிபார்த்தாள், கண்களை மூடினாள். அதற்கு முன் அவள் எந்த துப்பாக்கியையும் சுட்டதில்லை; ஆனால் குண்டு கதவைத் துளைத்து சென்று இலக்கை தாக்கியது.
நான் கண்ட முதல் உயிரற்ற மனிதன் அவன்தான். காலை ஏழு மணிக்கு பள்ளிகூடம் போகும் வழியில் நடைபாதையில் காய்ந்த குருதி வட்டத்தில் உடல் அப்போதும் கிடந்தது; ஈயக்குண்டு மூக்கை சிதறடித்து காது வழி வெளிப்பாய்ந்து முகத்தை சிதைத்திருந்தது. வண்ணக் கோடுகளிட்ட மீனவரின் டீஷர்ட்டும், பெல்டுக்கு பதில் கயிறால் கட்டப்பட்ட சாதாரண நீள்கால்சராயும் அணிந்திருந்தான்; அவன் வெற்றுக்கால்களுடன் கிடந்தான். அவனருகே தரையில் அவன் பூட்டை நிமிண்ட பயன்படுத்திய வீட்டில் செய்யப்பட்ட கருவியை கண்டனர்.



திருடனை கொன்றதற்கு இரங்கல் தெரிவிக்க நகரபிரமுகர்கள் வந்தனர். நான் அவ்விரவு பாப்பலேலோவுடன் சென்றிருந்தேன். மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மூங்கிலால் பின்னப்பட்ட மயில்போல் தோற்றமளிக்கும் கைப்பிடி நாற்காலியில் அவள் அமர்ந்திருந்தாள்; ஆயிரம் தடவை அவளது கதையை திரும்ப திரும்ப கேட்ட நண்பர்களின் தீவிர ஆர்வத்தால் சூழப்பட்டு, அவள் தனது குலை நடுக்கத்தால் மட்டுமே சுட்டாள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அப்போதுதான், சுட்ட பின் அவள் ஏதேனும் கேட்க நேர்ந்ததா என்று என் தாத்தா கேட்டார்; அவள் சொன்னாள்: முதலில் மாபெரும் நிசப்தம் நிலவியது, பிறகு பூட்டுத்திறப்பு கருவி சிமிண்டு தரையில் விழும் உலோக ஒலி, கடைசியாக ஒரு அமுங்கலான வேதனைக் குரல், “அம்மா, என்னை காப்பாற்று”. மரியா கன்சுகிராவின் பிரக்ஞையில் இந்த நெஞ்சை உருக்கும் கதறல் என் தாத்தா அக்கேள்வியை கேட்கும் வரை எழவில்லையோ என்று தோன்றியது. அப்போதுதான் அவள் கண்ணீர் சிதற கதறியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...