Skip to main content

தமிழில் படித்து கேட்க ஒரு மென்பொருள்

ஒரு பிரதியை படித்து வாசிக்கும் மென்பொருளை text-to-read மென்பொருள் என்று அழைப்போம். ஆங்கிலத்தில் ஏகப்பட்டவை உள்ளன. இப்போது பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படியான ஒரு மென்பொருளை உருவாக்கி வருகிறார். வெள்ளோட்டம் இந்த தொடுப்பில் உள்ளது: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

இதை சொடுக்கின பின் திறக்கும் பக்கத்தில் ஒரு பெட்டி தோன்றும். அதில் நீங்கள் unicode-இல் தமிழ் எழுதலாம். அல்லது ஏற்கனவே உங்களிடம் இணையம், pdf, word-இல் உள்ள பிரதிகளை copy-paste கூட செய்யலாம். இந்த மென்பொருள் அதை ஒரு ஒலிக் கோப்பாக மாற்றி தருகிறது.

இந்த மென்பொருளின் பயன்கள் என்ன?

தமிழ் கேட்டு புரிய முடிகிற ஆனால் வாசிக்க தெரியாத இளந்தலைமுறையினரில் ஒரு பகுதியினருக்கு வாசிப்பை எளிதாக்கும்.

எழுத்தாளர்களுக்கு தங்களின் நீளமான பிரதிகளை edit செய்வது எளிதாகும்.

வாசிக்க களைப்பான பொழுதுகளில், பயணங்களில், நீண்ட வரிசைகளில் காத்திருக்கையில், யாராவது மொக்கை போட வரும் போது இதனை கேட்பது நலம் பயக்கும்.

அனுகூலம்?

பொதுவாக ஆங்கில text-to-read மென்பொருட்களில் கணினி குரல் தான் பதியப்பட்டிருக்கும். கேட்க சற்றும் பயங்கரமான எந்திர உச்சரிப்பு. மனிதக் குரல் உள்ள மென்ப்பொருட்கள் இலவசமாக கிடைக்காது. வாங்க வேண்டும். (கைவசம் உள்ளவர்கள் எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சி). ஆனால் ராமகிருஷ்ணனின் இந்த மென்பொருளில் மனிதக் குரலை தந்துள்ளார். கணீரென்ற குரல் இனிமையான உச்சரிப்பு. சில பிசிறல்களையும் குறிப்பிட வேண்டும். சில இடங்களில் எதிரொலி கேட்கிறது. வேறு சில இடங்களில் வார்த்தைகள் துள்ளி மறைகின்றன.

குறைகள்?
இரண்டுதான்: கிட்டத்தட்ட ஒரு பத்திக்கு மேல் படிக்க முடியாது.
ஒலிக் கோப்பை சேமித்து வைப்பது எளிதாக இல்லை.
பேராசிரியர் ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள்.

Comments

Madumitha said…
உங்களுக்கும்
நன்றி.
Athisha said…
நல்ல முயற்சிதான், ஆனால் அவர் பேசுவது புரிய மாட்டேங்குது.. திருக்குறள் ஒன்றை அடித்து முயற்சித்தேன்.. ம்ஹூம் இன்னும் வேலை பாக்கணும்
நன்றி மதுமிதா
butterfly Surya said…
பகிர்விற்கு நன்றி.

இன்னும் தெளிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
Unknown said…
நல்ல முயற்சி இருந்தும் எதிர் பார்த்த அளவில் இல்லை, இன்னும் முன்னேற்றம் தேவை.
இது முழுமை பெற்றுவிட்டால் நல்ல பயன் தரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

மேலும் நமது எதிர்காலம் மற்றும் ஜாதகம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஒரு சிறப்பான இணையம் ஒன்று உள்ளது. அந்த இணையத்தை பற்றி நான் எனது நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன், எனக்கு அதன் மூலம் நல்ல பயன் கிடைத்தது. நீங்களும் உங்களுடைய எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ள இன்றே இந்த இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
http://yourastrology.co.in

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...