Skip to main content

சானியா மிர்சா திருமணமும், இந்திய-பாகிஸ்தான் நல்லுறவும்



இன்று ஆங்கிலோ-இந்தி ஊடகங்களில் மிகை ஒப்பனை மற்றும் செயற்கை உச்சரிப்புடன் சிள்வண்டு போல் சலம்பும் ஒரு தலைமுறை பத்திரிகையாளர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு சரளமாக ஆங்கிலம் பேசவரும், ஆனால் சாமர்த்தியமாக எழுதவோ நுட்பமாக யோசிக்கவோ வராது. எளிய வாழ்வியல் அனுபவங்கள் கூட இவர்களுக்கு இல்லையா என்ற எண்ண வைக்கும் படி இவர்களின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சு இருக்கும். உதாரணமாக மும்பை தீவிரவாத தாக்குதலின் போது சபீனா சேகல் என்ற டைம் ஆப் இந்தியா பத்திரிகையாளர் காணாமல் போனார். இதிலிருந்து அவர் இறந்து போனதாக செய்தி உறுதியாகும் வரை NDTV தொலைக்காட்சியில் சபீனாவின் கணவரை நேரலையாக பேட்டி கண்டார்கள். மனைவி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கடும் பதற்றத்தில் இருந்த அம்மனிதரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன? ” நீங்கள் இப்போது சரியாக என்ன நினைக்கிறீர்கள். உங்கள் மனைவி பற்றி என்னென்ன எண்ணங்கள் ஏற்படுகின்றன?”. அவர் சொன்னது “என் குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று யோசிக்கிறேன்”.



இப்போது சானியா மிர்சா பாகிஸ்தானி கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணம் முடிக்க போவதாய் அறிவித்துள்ளார். CNN IBN-க்காக சானியாவை பேட்டி கண்ட மற்றொரு மனமுதிர்ச்சியற்ற பெண் ஆர்வமாக கேட்ட கேள்வி இது: “ உங்கள் திருமணம் இந்திய-பாக்கிஸ்தான் ஒருமைப்பாட்டை எப்படி மேம்படுத்தப் போகிறது?”. “எங்கள் திருமணத்துக்கும் இரு தேசங்களுக்கான நல்லுறவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கே மணம் புரிகிறோம். உபரியாக இந்தியா-பாக் உறவு மேம்பட்டால் மகிழ்ச்சி தான், என்றார் சானியா. இதன் பிறகும் சானியாவின் துள்ளும் முலைகளின் வீடியோ துணுக்கு ஒன்றை காட்ட அத்தொலைக்காட்சி மறக்க இல்லை. தனிமனித வாழ்வு பற்றி மீடியாவுக்கு கவலையே இல்லை. புனரமைப்பு என்ற பெயரில் கோயில் சிறபங்களில் சுண்ணாம்பு அடித்து மறைக்கும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு தொழில்நுட்ப நீட்டிப்பாக தான் இன்றைய ஊடக பதிவுகளை பார்க்க முடிகிறது.

ஒரு விளையாட்டு வீரர் தன் நாட்டுக்கு சர்வதேச அளவில் அந்தஸ்து பெற்றுத் தருகிறார் என்பதால் அவரை நம் கலாச்சார, அரசியல் பிரதிநிதியாக காணலாமா? ஒரு சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் அதன் பல்வேறுபட்ட அரசியல், கலாச்சார, பொருளாதார கூறுகளை பிரநுத்துவப்படுத்தி அதற்காக தன்னை முன்னிறுத்துபவராக் இருக்க வேண்டும். உதாரணமாக இன்று தலித்துகளுக்கு திருமாவும், ஒரு காலத்தில் வன்னியர்களுக்கு ராமதாசும் எழுச்சி அடையாளங்களாக கூறலாம். ஆனால் ரஜினிகாந்த் அல்லது ஜெயலலிதா தமிழ் சமூகத்தின் முகங்கள் அல்ல. இன்று கேளிக்கை கலாச்சாரம் அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்து விட்ட, அதை ஊடகங்கள் லாபகரமாக்க விரும்பும் ஒரு கட்டத்தில் எளிய கலைஞர்கள் ஒரு சமூகத்தின் முகங்களாக முன்னிறுத்தப்படும் அவலம் நடக்கிறது. உதாரணமாக கடந்த ஜனவரியில் ஷாருக்க்கான் விசயத்தில் இந்த விதமான அசட்டுத்தனம் நடந்தது. நிலவில் ஆம்ஸ்டுராங் கால்பதித்த இடத்திற்கு சற்று தள்ளிய ஒரு பள்ளத்தாக்குக்கு ஷாருக்கானின் பெயரை The International Lunar Geographic Society சூட்டியது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் இந்தியர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நட்சத்திரம் அவர் என்பதே. இப்படி விண்வெளியில் ஷாருக்குடன் வேறு யாரெல்லாம் பெயரை பகிரிந்துள்ளார்கள் என்பதை கவனித்தால் நமக்கு இதன் அபத்தம் புரியும்: நோபல் பரிசை வென்ற சி.வி ராமன், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் பிதாமகர்களாக கருதப்படுகிற விக்ரம் சரபாய், ஹோமி பாபா மற்றும் மேக்னா சாஹா போன்றவர்கள். வணிக சினிமாவின் ஒரு மேலோட்டமான நடிகருக்கு இப்படி ஒரு அந்தஸ்தா என்று சர்ச்சை கிளம்பிட ஷாருக்கானுக்கு எதிர்பாராத பக்கத்தில் இருந்து ஆதரவு வந்தது. முன்னாள் ISRO சேர்மேனும் விண்வெளி விஞ்ஞானியுமான கஸ்தூரி ரங்ஜன் ஷாருக்கான் இந்திய இளைய தலைமுறையை பிரதிநுதப்படுத்துபவர்; அவர் பெயரை நிலவில் பொறித்தது தகும் என்று வாதிட்டார். ஒரு விஞ்ஞானியே இப்படி அபத்தமாய் பேச CNN IBN-இன் கான்வெண்ட் கிளி வேறு என்ன பிதற்றும் சொல்லுங்கள்?



ராகுல்காந்தி ஒரு பாகிஸ்தானி பெண்ணை மணமுடித்தால் CNN IBN இப்படியான கேள்விகளை கேட்பதற்கு நியாயம் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியின் போது அப்படியான திருமணம் வரலாற்றுக் குளத்தில் பாஷோவின் தவளையாக குதித்து அதிர்வுகளை கிளப்பலாம். மேலும் சானியா விசயத்தில் இந்தியா-பாக் இணங்குவதை விட புதுமணத்தம்பதிகளுக்கு விசா உள்ளிட்ட தூதரக சிக்கல்கள் அதிகமாவதே முதலில் நடக்கும். இதை முன்கூட்டியே பரிசீலித்து பார்த்த சானியா பாக்கிஸ்தானில் குடிபுகுவது இல்லை என்று முடிவு செய்திருக்கிறார். தம்பதிகள் துபாயில் வாழப் போகிறார்கள். “துபாய் இங்கிருந்து மூன்று மணி நேரம் தான். ஏதோ சணிடிகர்ஹ் போய் வருவது போலத்தான். இந்தியாவில் இருந்து வெளியே வாழும் உணர்வே ஏற்படாது. ஷோயப்புக்கு பல ஆட்டங்கள் துபாயில் தான் நடை பெற உள்ளன. துபாயில் இருந்து நினைத்த நேரத்தில் ஹைதராபாத் வந்து விடலாமே” என்கிறார் சானியா. இது கூட சப்பைகட்டு தான். முதலில், இப்போதைய சூழலில் பாகிஸ்தான் அணி துபாயில் என்றில்லை எங்குமே அதிகமாக ஆடுவதில்லை. எதிர்காலத்திலும் நிலைமை சீரடைய அதிகம் வாய்ப்பில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அதல பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. வோடாபோன் பக் நாய்க்குட்டி போல் துண்டு, சோப் என்று கவ்வி கொண்டு சானியா பின்னலையவே ஷோயப்புக்கு எதிர்காலத்தில் ஏகத்துக்கு நேரம் இருக்கும். மூன்று மணி நேர தொலைவுதான் என்றாலும் சானியா பாக் மருமகள் ஆகி விட்ட நிலைமையில் ஹைதராபாத்தில் தீவிரவாத தாக்குதல் போன்று அசம்பாவிதங்கள் நடந்தால் அவரது குடும்பத்தினர் உள்ளூர் சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பார்களா? சானியாவால் அப்படியான ஒரு உஷ்ண சூழலில் மனம் போல் தாய் வீடு திரும்ப முடியுமா? இப்போதே இந்திய தேசியவாதிகள் சானியாவின் புகைப்படங்களை கொளுத்தி அவருக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்துள்ளனர். பால் தாக்ரே யாகத்தீக்குள் தலைவிட்டு “தேசப்பற்று இருந்திருந்தால் ஷோயப்புக்காக சானியாவின் இதயம் துடித்திருக்காது. அவர் இந்தியாவுக்காக ஆடும் தகுதியை இழந்து விட்டார்” என்று கொட்டி இருக்கிறார். பாக்கிஸ்தான் தரப்பில் சானியா தங்கள் நாட்டுக்காக ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளின் உறவை இத்திருமணம் மேம்படுத்துமா என்பதல்ல திருப்பிக் கேட்பதே அர்த்தமுள்ள்தாக இருக்கும்.

Comments

அற்புதமான பதிவு அபிலாஷ்.ஊடகங்களின் வரம்பு நிர்ணயமற்றும் முதிர்ச்சியற்றும் இருக்கிறது.அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது எப்போதெல்லாம் பேசாதிருக்க வேண்டும் என்பதையும்-என்னவெல்லாம் பேசவேண்டும் என்பதையுமே.உங்கள் மொழி நேர்த்தியாக இருக்கிறது.
நன்றி சுந்தர்ஜி மற்றும் கெ.ஜெ.அசோக்குமார்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...