முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 18



வாழைப்பழ நிறுவனத்தின் நாட்களில் இந்த மருந்துக்கடை கொடி கட்டி பறந்தது. ஆனால் காலியான இழுப்பறை பெட்டிகளில் உள்ள பழைய புட்டிகள் மற்றும் ஜாடிகளில் இப்போது மீதமிருப்பவை எல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பீங்கான் ஜாடிகளே.
தையற்பொறி, மருந்தக தராசு, கைக்கோல், ஊசற் கண்டு அசைவதை நிறுத்தாத கடிகாரம், ஹிப்போகிரடசின் சபதம் புடைப்பகழ்வு செய்யப்பட்ட பலகை, பழுதான சாய்ந்தாடும் நாற்காலிகள், சிறுவனாயிருக்கையில் நான் கண்ட இந்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன; அதே இடத்தில் இருந்தன. ஆனால் அவை காலத்தின் துருவால் உருமாறி இருந்தன.
அட்ரியானாவே ஒரு பலிதான். முன்பு அணிந்திருந்ததை போல அவள் பெரிய வெப்பமண்டல் பூக்கள் கொண்ட ஆடை அணிந்திருந்தாலும், முதிர்ச்சி பருவம் வரை அவளை பிரபலப்படுத்திய அதிரடித்தன்மை மற்றும் குறும்பை சிறிது கூட இப்போது கண்டு பிடிக்க முடியாது. இப்போது குறைவின்றி அவளிடம் இருக்கும் ஒரே விசயம் பூனைகளை உன்மத்தம் கொள்ளச் செய்த சடாவல்லி வாசம் தான். என் மிச்சமுள்ள வாழ்வெல்லாம் அதை ஒருவித கலவரத்துடன் நான் நினைவு கூர்ந்தேன். அட்ரியானாவுக்கும் அம்மாவுக்கும் கண்ணீர் ஏதும் மிச்சம் இல்லாத நிலையில் எங்களை கடையின் பின்பகுதியில் இருந்து பிரித்த மெல்லிய மரத்தட்டிக்கு பின் இருந்து நாங்கள் கனமான ஒரு குறுகிய இருமலை கேட்டோம். “டாக்டர்”, அவள் சொன்னாள், “யார் வந்துள்ளார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்”
ஒருதிடமான மனிதனின் கடூரக்குரல் மறுபக்கத்தில் இருந்து ஆர்வமற்று கேட்டது: “யார்?” அட்ரியானா பதில் உரைக்கவில்லை; ஆனால் எங்களை பின்னறைக்கு செல்லச் சொல்லி சமிக்ஞை செய்தாள். ஒரு குழந்தைப் பருவ பெரும்பீதி அவ்விடத்திலேயே என்னை செயலிழக்க செய்தது; வாய் இளநீல உமிழ்நீரால் நிரம்பியது; ஒரு காலத்தில் அந்த மருந்தகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கி பின்னர் தேவைக்கு உகந்த உபகரணங்களுடன் அவசரநிலை படுக்கை அறையாக மாற்றப்பட்டிருந்த அந்த நெரிசலான இடத்துக்குள் அம்மாவுடன் நுழைந்தேன். அங்கே முதியவர்கள் மற்றும் நிலம்-, நீர்-வாழ் மிருகங்களுக்கு எல்லாம் முத்தவரான டாக்டர் அல்பிரீடோ பர்போசோ தன் புராணிக பிரபல்யம் பெற்ற, கழுவாய் மேற்கொள்வோர் அணியும் விளிம்பு அமைவற்ற தளராடையை ஒத்த பருத்தி பைஜாமா அணிந்து தனது சாஸ்வத தொங்கு சணல் படுக்கையில் மல்லாந்து கிடந்தார். அவர் கூரையை முறைத்தபடி கிடந்தார்; ஆனால் நாங்கள் உள்ளே நுழைவதை கேட்டதும் தலையை திருப்பி என் அம்மாவை இறுதியில் அடையாளம் காணும்வரை தன் துலக்கமான கண்களை எங்களை நோக்கி நிலைக்க வைத்தார். “லூயிசா சாண்டியாகா!”, அவர் கூவினார். அவர் ஒரு பழைய மரசாமான் போல தன் படிந்துள்ள அசதியுடன் தொங்குபடுக்கை மீது எழுந்து அமர்ந்தார்; மனிதப் பண்புகளை முழுமையாக அடைந்தார்; அத்தோடு தன் படுசூடான கைகளால் வேகமாக அழுத்தி எங்களுக்கு முகமன் சொன்னார். என் ஆச்சரியத்தை உணர்ந்து சொன்னார், “ஒரு வருடமாக எனக்கு காய்ச்சல்”. தொங்கு படுக்கையிலிருந்து நீங்கி படுக்கையில் அம்ர்ந்து ஒரே மூச்சில் எங்களிடம் சொன்னார், “இந்த நகரம் எதை எல்லாம் கண்டிருக்கிறது என்று உங்களால் கற்பனையே செய்ய முடியாது”. ஒரு முழுவாழ்வையே சுருக்கி விட்ட அந்த ஒற்றை வாக்கியம் அவர் எப்போதும் எவ்வாறு இருந்திருப்பார் என்பதை எனக்கு காட்ட போதுமானதாக இருந்தது: ஒரு சோகமான, தனிமை வயப்பட்ட மனிதன். அவர் உயரமாக ஒல்லியாக, அழகான உலோக வண்ணத்தில், அலட்சியமாய் திருத்தப்பட்ட கேசம் மற்றும் என் பால்யகால படுபயங்கர கிலிகளுள் ஒன்றான தீவிர மஞ்சள் கண்களுடன் இருந்தார். மதிய வேளையில் பள்ளி விட்டு திரும்புகையில் அச்சத்தின் லகரியால் கவரப்பட்டு ஜன்னல் ஏறி அவரது படுக்கையறைக்குள் பார்ப்போம். வெக்கையை தணிக்க தொங்குபடுக்கையை மூர்க்கத்துடன் முன் எம்ப செய்தபடி அவர் அங்கு ஆடிக் கொண்டிருப்பார். எங்கள் விளையாட்டு இதுவாக இருந்தது: நாங்கள் அங்கிருப்பதை அவர் அறிந்து திரும்பி முன்-எச்சரிக்கை இன்றி தன் எரியும் கண்களால் எங்களை பார்க்கும் வரை அவரை முறைப்போம். எனக்கு ஐந்தோ ஆறோ வயதிருக்கும் போது ஒரு நாள் காலை என் வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து அவரது மரத்து பிரம்மாண்ட மாங்கனியை பறிக்க அவர் வீட்டு புழக்கடை வழியே நுழைந்த போதுதான் அவரை முதன்முறை கண்டேன். பிறகு தோட்டத்தின் ஒரு மூலையில் நின்றிருந்த மர வெளிவீட்டின் கதவு திறந்தது; தன் லினன் உள்கால்சட்டையை இறுக்கி மாட்டியபடி அவர் வெளியே வந்தார். வெளிறி, எலும்புகள் புடைக்க, என்னை விடாது எப்போதும் பார்த்த நரகத்து நாயின் மஞ்சள் விழிகளுடன், மருத்துவமனை இரவுச்சட்டையில் நரகத்தில் இருந்து தோன்றிய ஒரு பிசாசு போல் அவர் எனக்கு தெரிந்தார். வேலியின் ஓட்டைகள் வழி பிறர் தப்பித்து போயினர்; ஆனால் அவரது அசைவற்ற விழிகளால் நான் உறைந்து போயிருந்தேன். அப்போதுதான் மரத்தில் இருந்து நான் பறித்திருந்த மாம்பழங்களை வெறித்துப் பார்த்தார்; தன் கரங்களை என்னை நோக்கி நீட்டினார், “அவற்றை என்னிடம் கொடு”, அவர் ஆணையிட்டார். அத்தோடு என்னை மேலும் கீழுமாக தீவிர வெறுப்புடன் பார்த்து இதையும் சேர்த்துக் கொண்டார், “இழிவான் புழக்கடை திருடா!”
நான் மாங்கனிகளை அவர் கால்கள் கீழே வீசி விட்டு பீதியில் தப்பித்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...