முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சளி உடம்புக்கு நல்லது

சளி தொண்டை வலி நிவாரணத்துக்காக டாக்டர் அறைக்குள் நுழைந்த போது அவர் மடித்து வைத்த நாளிதழ் பக்கங்களை ஓரமாய் திறந்து அவசரமாக நுணுகி பார்த்துக் கொண்டிருந்தார். என் சளி தொந்தரவுகளை திரும்பத் திரும்ப சொன்னதை பொறுமையாக கேட்டவர் இரட்டிப்பு வேகத்தில் மருந்து பரிந்துரையை எழுதினார். “ஒரு வருடமாய் சளியே இல்லை டாக்டர், ஆனால் இந்த ஒரு மாதமாக திரும்பத் திரும்ப ஜலதோசம் பிடித்துக் கொள்கிறது”.


“இல்லை அப்படி வராமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப் பட வேண்டும். ஒரு வருடம் சளி, ஜுரமே வராமல் இருந்தால் தான் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்”, என்றார் டாக்டர்.

ஜுரம் வந்தது போல் ஒரு ஜில்லிடல் உடலில் பரவியது. தொடர்ந்தார்,  “இதோ பாருங்க, சளி வந்தா உங்கள் தடுப்பு சக்தி புதுப்பிக்கப்பட்டு வலுப்படும். உங்கள் உடல்நலம் அப்போது தான் மேம்படும்”. அவர் பார்வை பத்திரிகை பக்கம் சென்றது. “ஒரு நாட்டுல எந்த பிரச்சனையும் இல்லேண்ணு வச்சுக்குங்க அது நாட்டோட வளர்ச்சிக்கு கேடு. அதே மாதிரி ...”
வீட்டுக்கு வரும் வரை தலைவலி பிடித்துக் கொண்டது. ஒரு பரிணாமக் கோட்பாட்டாளர்  எழுதியது நினைவு வந்தது. ஒரு தீவு. இயற்கை வளங்கள் அதிகப்படியாக உள்ள பிரதேசம். அங்கு வாழும் பழங்குடிகளுக்கு சவாலாக புலி, சிங்கம் போன்ற வேட்டை மிருகங்களுக்கும் இல்லை. ரொம்ப ரம்மியமான அமைதியான தீவு. பல தலைமுறைகளாக அந்த மனிதக் குழு அங்கு பிற மனிதக் குழுக்களின் தொடர்பின்றி சௌகர்யமாக வாழ்ந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அறிவியலாளர்கள் இந்த தனிமைத் திவு மனிதர்களை கண்டடைகிறார்கள். பக்கத்து வனங்களின் பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில்  மிகவும் குள்ளர்களாக இருந்தார்கள் இவர்கள். தலைமுறை தலைமுறையாக சவாலற்ற வாழ்வு அவர்களை குறுக்கி விட்டது. பிரச்சனைகளற்ற சூழல் அவர்களை குள்ளர்களாக்கி விட்டது. கண்ணீரற்ற வாழ்க்கை கசப்பானது.

கருத்துகள்

அருண் பிரசாத் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணீரற்ற வாழ்க்கை கசப்பானது
உண்மை!
Madumitha இவ்வாறு கூறியுள்ளார்…
அட.. இது புதுசாயிருக்கே..!
AkashSankar இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழ்ந்த கருத்து...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் உண்மை.
இங்கிலிஷில் இதை தான் கம்போர்ட் ஜோன் என்பார்கள்
பகிர்வுக்கு நன்றி
-ஸ்ரீராம்
- http://sriramsrinivasan.net
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
அருண் பிரசாத், மதுமிதா, ராசராச்சோழன் மற்றும் ஸ்ரீராம், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
Riyas இவ்வாறு கூறியுள்ளார்…
very good thoughts... nice
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரியாஸ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...