Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மின்மினிப் பூச்சி லாந்தர் விளக்குகள் - மார்க்கரெட் சூலா



ஜூன் ஆரம்பத்தில் அயாபேவில் உள்ள குயவர் நண்பர் முராயாமா-சானிடம் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


“மேகி”, அவர் சொல்கிறார், “மின்மினிகள் வந்து விட்டன!”

“சரி”, நான் சொல்கிறேன், “நாங்கள் உடனே வந்து விடுகிறோம்!”

மலை கிராமங்கள் வழி நெளிந்து செல்லும் நாட்டுப்புற நெடுஞ்சாலை வழி இரண்டரை மணிநேர பயணத்தில் அயாபேவை அடையலாம். நானும் ஜானும் இரவு தங்குவதற்கான பையொன்றை கட்டி விட்டு பலகலைக்கழக வகுப்புகள் முடிந்த உடன் கிளம்புகிறோம். முராயாமா-சான், அவரது மனைவி அயாகோ மற்றும் பத்து வயது மகள் தொமோக்கோ தமது பழைய பண்ணை வீட்டில் எங்களை அன்பாக வரவேற்கிறார்கள். நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும், அவரது இறுதிப்பெயரால் தான் அழைப்போம். அவரது மனைவியும் அப்படித்தான்.

டோபூ, மீன் மற்றும் தோட்டத்து காய்கனிகளாலான ஒரு எளிய சாப்பாட்டை அயாக்கோ தயார் செய்கிறார். இருளத் தொடங்கியதும், நங்கள் வலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறோம். ட்சுயுவுக்கு [1] அவ்விரவு குறிப்பிடும்படியாக தெளிவாக இருக்கிறது.


நட்சத்திரங்கள், நெல்வயல்களில்


நட்சத்திர பிரதிபலிப்புகள்


ஓ! மின்மினிகள்


மின்மினிகள் நெல்வயல்களின் வரப்பிலுள்ள புற்களின் மீதும், ஈரநிலத்தில் செழிக்கும் ஹொட்டாரு புக்குரோக்கள், அதாவது பெல்பூக்கள், மீதும் அமர்கின்றன. தொமோக்கோ ஒரு பெல்பூவை எனக்காக பறிக்கிறாள்; ஹொட்டாரு என்றால் மின்மினி என்றும் புக்குரோ என்றால் கோணிப் பை என்றும் விளக்குகிறாள். எங்களது பட்டாம்பூச்சி வலைகளால் காற்றில் மொண்டு வலைநிறைய பட்டாம்பூச்சிகளை பிடிக்கிறோம். ஹொட்டாரு புக்குரோ பூக்களை திறந்து அவற்றின் மென்மையான இதழ் கூண்டுக்குள் மின்மினிகளை நுழைப்பதன் மூலமாய் கவனமாக இடம் மாற்றுகிறோம். விரைவிலேயே பூக்கள் மினிமினிகளின் தழலொளியை பெறுகின்றன. ஒருமணி நேர முடிவில், வீட்டுக்கு செல்ல எங்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு கைநிறைய லாந்தர்கள் சேர்ந்து விட்டன. மிச்ச மின்மினிகள் ஜாடிகளில் உள்ளன. எங்களிடம் எவ்வளவு உள்ளன? ஐம்பது? நூறு? எரிந்து எரிந்து அணையும் அவற்றின் வெளிச்சங்களைக் கொண்டு அவற்றை எண்ணுவது சாத்தியமல்ல.

பண்ணை வீட்டில் நாங்கள் செருப்புகளை கழற்றி விட்டு பிரதான அறையில் கூடுகிறோம், டாட்டாமியில் [2] ஓய்வாக அமர்கிறோம். முராயாமா-சான் வெளியே தன் சூட்டடுப்புக்கு சென்று, சமீபமாய் சுட்ட சில சாக்கே கோப்பைகளை தேர்ந்தெடுக்கிறார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சுத்தமான சாக்கே கோப்பை ஒன்றை அளித்து, அதில் சாக்கே நிறைக்கிறார்.

“கான்பாய்!” அவர் நலம் பாராட்டுகிறார்.

அந்த மென்மையான கோப்பைகளை உதடுகளுக்கு எழுப்பியபடி நாங்கள் எதிரொலிக்கிறோம் “கான்பாய்!”

எங்கள் விருந்தோம்புநர் வீட்டின் மிச்சமுள்ள புசுமா [3] கதவுகளை மூடுகிறார் பிறகு கண்ணாடி ஜாடிகளின் மூடிகளைத் திறந்து, மின்மினிகளை அறைக்குள் திறந்து விடுகிறார். நானும் தொமோக்கோவும் ஹொட்டாரு புக்கோருவின் இதழ்களை உரித்து, எங்கள் சிறைக்கைதிகளை தங்கள் பட்டு கூண்டுகளில் இருந்து வெளிவர தூண்டுகிறோம். அவை விரைந்து பாய்கின்றன, விட்டு விட்டு மின்னுகின்றன, எங்கள் கைகள் மற்றும் முட்டிகளில், மாடக்குழியில் உள்ள ஜப்பானிய சுருள்சுவடிகளில் அமர்ந்திட தங்கள் பச்சை விளக்குகளை பளிச்சிடுகின்றன.


மின்மினிகள் நிரம்பிய அறையில்


டாட்டாமியில் கிடக்கிறேன்


மாலை குளிர்மை


அந்த இருண்ட அறையில், நாங்கள் சாக்கே குடித்து, மெதுவாக பேசுகிறோம், மென்மையான விசயங்களைப் பற்றி, நட்பின் முக்கியத்துவம், வாழ்வின் இயற்கையான அபரிதத்தன்மை பற்றி பேசுகிறோம். இரவு ஆழமுற, சாக்கே பூட்டிகள் காலியாக நாங்கள் மணிக்கணக்காக டாட்டாமியில் முணுமுணுத்தபடி கிடக்கிறோம். கூரையில் நட்சத்திரங்கள் மின்னி மின்னி அணைகின்றன. தூங்கும் நேரம் வந்த உடன், முராயாமா-சான் ஷோஜியை [4] திறந்து, இரவுக்குள் மின்மினிகளை விடுவிக்கிறார். காலையில் அவை தொலைவாக பரவலாக, மந்தாரமான வானில் இருளின் புள்ளிகளாக, சிதறியிருக்கும்.


அடிக்குறிப்பு:

1. ஜூனில் இருந்து ஜூலை பாதி வரை நிகழும் ஜப்பானிய மழைக்காலம். பிளம் பழங்கள் கனியும் பருவம் என்பதால் ட்ஸுயுவுக்கு நேரடியான பொருள் “பிளம் மழை” என்பது

2. மரபான ஜப்பானிய பாய்

3. சித்திர வேலைப்பாடுகள் கொண்ட நழுவுக்கதவு

4. மெல்லிய கண்ணாடி காகிதத்தாலான அறை பகுப்புத் திரை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...