Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மின்மினிப் பூச்சி லாந்தர் விளக்குகள் - மார்க்கரெட் சூலா



ஜூன் ஆரம்பத்தில் அயாபேவில் உள்ள குயவர் நண்பர் முராயாமா-சானிடம் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


“மேகி”, அவர் சொல்கிறார், “மின்மினிகள் வந்து விட்டன!”

“சரி”, நான் சொல்கிறேன், “நாங்கள் உடனே வந்து விடுகிறோம்!”

மலை கிராமங்கள் வழி நெளிந்து செல்லும் நாட்டுப்புற நெடுஞ்சாலை வழி இரண்டரை மணிநேர பயணத்தில் அயாபேவை அடையலாம். நானும் ஜானும் இரவு தங்குவதற்கான பையொன்றை கட்டி விட்டு பலகலைக்கழக வகுப்புகள் முடிந்த உடன் கிளம்புகிறோம். முராயாமா-சான், அவரது மனைவி அயாகோ மற்றும் பத்து வயது மகள் தொமோக்கோ தமது பழைய பண்ணை வீட்டில் எங்களை அன்பாக வரவேற்கிறார்கள். நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும், அவரது இறுதிப்பெயரால் தான் அழைப்போம். அவரது மனைவியும் அப்படித்தான்.

டோபூ, மீன் மற்றும் தோட்டத்து காய்கனிகளாலான ஒரு எளிய சாப்பாட்டை அயாக்கோ தயார் செய்கிறார். இருளத் தொடங்கியதும், நங்கள் வலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறோம். ட்சுயுவுக்கு [1] அவ்விரவு குறிப்பிடும்படியாக தெளிவாக இருக்கிறது.


நட்சத்திரங்கள், நெல்வயல்களில்


நட்சத்திர பிரதிபலிப்புகள்


ஓ! மின்மினிகள்


மின்மினிகள் நெல்வயல்களின் வரப்பிலுள்ள புற்களின் மீதும், ஈரநிலத்தில் செழிக்கும் ஹொட்டாரு புக்குரோக்கள், அதாவது பெல்பூக்கள், மீதும் அமர்கின்றன. தொமோக்கோ ஒரு பெல்பூவை எனக்காக பறிக்கிறாள்; ஹொட்டாரு என்றால் மின்மினி என்றும் புக்குரோ என்றால் கோணிப் பை என்றும் விளக்குகிறாள். எங்களது பட்டாம்பூச்சி வலைகளால் காற்றில் மொண்டு வலைநிறைய பட்டாம்பூச்சிகளை பிடிக்கிறோம். ஹொட்டாரு புக்குரோ பூக்களை திறந்து அவற்றின் மென்மையான இதழ் கூண்டுக்குள் மின்மினிகளை நுழைப்பதன் மூலமாய் கவனமாக இடம் மாற்றுகிறோம். விரைவிலேயே பூக்கள் மினிமினிகளின் தழலொளியை பெறுகின்றன. ஒருமணி நேர முடிவில், வீட்டுக்கு செல்ல எங்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு கைநிறைய லாந்தர்கள் சேர்ந்து விட்டன. மிச்ச மின்மினிகள் ஜாடிகளில் உள்ளன. எங்களிடம் எவ்வளவு உள்ளன? ஐம்பது? நூறு? எரிந்து எரிந்து அணையும் அவற்றின் வெளிச்சங்களைக் கொண்டு அவற்றை எண்ணுவது சாத்தியமல்ல.

பண்ணை வீட்டில் நாங்கள் செருப்புகளை கழற்றி விட்டு பிரதான அறையில் கூடுகிறோம், டாட்டாமியில் [2] ஓய்வாக அமர்கிறோம். முராயாமா-சான் வெளியே தன் சூட்டடுப்புக்கு சென்று, சமீபமாய் சுட்ட சில சாக்கே கோப்பைகளை தேர்ந்தெடுக்கிறார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சுத்தமான சாக்கே கோப்பை ஒன்றை அளித்து, அதில் சாக்கே நிறைக்கிறார்.

“கான்பாய்!” அவர் நலம் பாராட்டுகிறார்.

அந்த மென்மையான கோப்பைகளை உதடுகளுக்கு எழுப்பியபடி நாங்கள் எதிரொலிக்கிறோம் “கான்பாய்!”

எங்கள் விருந்தோம்புநர் வீட்டின் மிச்சமுள்ள புசுமா [3] கதவுகளை மூடுகிறார் பிறகு கண்ணாடி ஜாடிகளின் மூடிகளைத் திறந்து, மின்மினிகளை அறைக்குள் திறந்து விடுகிறார். நானும் தொமோக்கோவும் ஹொட்டாரு புக்கோருவின் இதழ்களை உரித்து, எங்கள் சிறைக்கைதிகளை தங்கள் பட்டு கூண்டுகளில் இருந்து வெளிவர தூண்டுகிறோம். அவை விரைந்து பாய்கின்றன, விட்டு விட்டு மின்னுகின்றன, எங்கள் கைகள் மற்றும் முட்டிகளில், மாடக்குழியில் உள்ள ஜப்பானிய சுருள்சுவடிகளில் அமர்ந்திட தங்கள் பச்சை விளக்குகளை பளிச்சிடுகின்றன.


மின்மினிகள் நிரம்பிய அறையில்


டாட்டாமியில் கிடக்கிறேன்


மாலை குளிர்மை


அந்த இருண்ட அறையில், நாங்கள் சாக்கே குடித்து, மெதுவாக பேசுகிறோம், மென்மையான விசயங்களைப் பற்றி, நட்பின் முக்கியத்துவம், வாழ்வின் இயற்கையான அபரிதத்தன்மை பற்றி பேசுகிறோம். இரவு ஆழமுற, சாக்கே பூட்டிகள் காலியாக நாங்கள் மணிக்கணக்காக டாட்டாமியில் முணுமுணுத்தபடி கிடக்கிறோம். கூரையில் நட்சத்திரங்கள் மின்னி மின்னி அணைகின்றன. தூங்கும் நேரம் வந்த உடன், முராயாமா-சான் ஷோஜியை [4] திறந்து, இரவுக்குள் மின்மினிகளை விடுவிக்கிறார். காலையில் அவை தொலைவாக பரவலாக, மந்தாரமான வானில் இருளின் புள்ளிகளாக, சிதறியிருக்கும்.


அடிக்குறிப்பு:

1. ஜூனில் இருந்து ஜூலை பாதி வரை நிகழும் ஜப்பானிய மழைக்காலம். பிளம் பழங்கள் கனியும் பருவம் என்பதால் ட்ஸுயுவுக்கு நேரடியான பொருள் “பிளம் மழை” என்பது

2. மரபான ஜப்பானிய பாய்

3. சித்திர வேலைப்பாடுகள் கொண்ட நழுவுக்கதவு

4. மெல்லிய கண்ணாடி காகிதத்தாலான அறை பகுப்புத் திரை

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...