முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 24





 கதவு சற்று திறக்க மிகத் தயக்கமான முறையில் நிழல்களில் இருந்து ஒரு பெண் கேட்டாள்: “என்ன வேண்டும்?
ஒருவேளை பிரக்ஞையற்ற, அதிகாரத்துடன் அம்மா பதிலுரைத்தாள்: “ நான் லூயிசா மார்க்வெஸ்
பிறகு தெருக்கதவு முழுக்கவே திறந்தது, அதோடு இரங்கல் ஆடையில் ஒரு வெளிறிய, எலும்புகள் புடைத்த பெண் தோன்றி ஆவி உலகத்தில் இருந்து எங்களைப் பார்த்தாள். உள்ளறையின் பின்னில் இருந்து மேலும் ஒரு முதிய மனிதர் நிரந்தர நோயாளியின் நாற்காலியில் ஆடினார். பல வருடங்களுக்குப் பின் இந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்த குடியிருப்போர் இவர்கள் தாம்; ஆனால் அவர்களிடம் வாங்குவோருக்கான தோரணை இல்லை; மேலும் யாருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிலைமையில் வீடு இல்லை. என் அம்மாவுக்கு கிடைத்த தந்தியின் படி குடியிருப்போர் பாதி விலையை பணமாக தர ஏற்றுக் கொண்டிருந்தனர்; அதற்கு அவள் ரசீது ஒப்பிட்டுத் தர வேண்டும்; மிச்சப் பணம் வருட முடிவில் ஒப்பந்தங்கள் முடிவான பின் தரப்படும்; ஆனால் ஒரு வருகை ஏற்பாடாகியது யாருக்கும் நினைவில்லை. செவிடர்களுக்கு இடையிலான ஒரு நீண்ட உரையாடலுக்கு பின், எவ்வித உடன்படிக்கையும் நிலுவையில் இல்லை என்பது மட்டும் தெளிவானது. இந்த மூடச்செயல் மற்று பயங்கர வெக்கையால் ஆட்கொள்ளப்பட்டு என் அம்மா வியர்வையில் குளித்து சுற்றுமுற்றும் குறும்பார்வை இட்டாள். பிறகு பெருமூச்சு விட்டாள்.
“இந்த பாவம் வீடு ரொம்ப நாட்கள் தாங்காது
“அதை விட மோசமாக உள்ளது”, அந்த மனிதர் சொன்னார், “இது எங்களைச் சுற்றி இடிந்து விழவில்லை என்றால் அது நாங்கள் பராமரிக்க செய்த செலவினால் தான்.
வாடகையிலிருந்து கழிக்கப்பட்டவை போக நாங்கள் அவர்களிடம் கடன்பட்டுள்ளதாய் கொள்ளும்படி சீர்செய்யும் வேலைகளுக்கான ஒரு பட்டியல் அவர்களிடம் இருந்தது. சிரமமே இல்லாமல் எப்போதும் அழக்கூடிய என் அம்மாவால் வாழ்வின் பொறிகளை சந்திக்கும் பயங்கர தைரியம் காட்டவும் முடியும். அவள் நன்றாக விவாதித்தாள்; நான் குறிக்கிட இல்லை, ஏனெனில் முதல் திடுக்கிடலுக்கு பின் வாங்குபவர்களின் நியாயம் சரி என்று புரிந்தது. தந்தி செய்தியில் விற்பனைக்கான நாள் மற்றும் முறை பற்றி தெளிவா ஏதுமில்லை; இருந்தும் அது ஏற்பாடு செய்யப்பட்டதாய் புரிந்து கொள்ளப் பட்டது. எங்கள் குடும்பத்தின் ஊகிக்கும் பணிக்கு வழக்கமானதே இந்த சூழ்நிலை. தந்திச்செய்தி வந்த அதே கணத்தில் உணவு மேஜையில் இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. என்னையும் சேர்க்காமல், சம உரிமைகளோடு பத்து சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர். இறுதியில் அம்மா சில பிசோக்களை அங்கிங்காய் சிரமப்பட்டு சேகரித்து தனது பள்ளிக்கூட பையை கட்டி திரும்ப வருவதற்கான கட்டணம் தவிர வேறேதுமின்றி கிளம்பி விட்டாள்.

ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றிலும் என் அம்மாவும் அந்த பெண்ணும் திரும்ப பேசினர்; அரைமணி நேரத்துக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். வீட்டின் மீதான பணய உரிமை ஒன்றும் இந்த மாற்றம் இல்லாத முடிவுகளில் சேரும்; ஒரு உறுதியான விற்பனை பல வருடங்களுக்குப் பின் ஒரு வழியாக நடக்கும் வரை அது சரிசெய்யப் படவில்லை. ஆக அதனால் அப்பெண் அதே கொடிய விவாதத்தை மற்றொரு முறை திரும்ப செய்ய முயன்ற போது அம்மா தனது வசீகரமற்ற முறையில் அதிரடி நடவடிக்கைகளை பயன்படுத்தினாள்.
இந்த வீடு விற்பனைக்கு அல்ல”, அவள் சொன்னாள், நாங்கள் இங்கே பிறந்தோம், இங்கே தான் இறப்போம் என்பதை நினைவு கொள்வோமாக
மதியத்தின் மிச்சத்தை அந்த பேய்வீட்டில் பழைமை ஏக்க நினைவுகளை அசை போட்டு திரும்பச் செல்லும் ரயில் வரும் வரை செலவழித்தோம். அவை எல்லாம் எங்களுடையதே; ஆனால் தெருவை எதிர்நோக்கிய என் தாத்தாவின் அலுவலக அறைகளாக விளங்கின அலுவலக பகுதி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. மிச்சம் எல்லாம் பல்லிகளின் கருணைக்கு விடப்பட்ட சிதைந்து போகும் சுவர்களும் துருப்பிடித்த தரகக் கூரைகளும் கொண்ட ஒரு ஓடு மட்டுமே. வாசலில் அதிர்ச்சியுற்ற என் அம்மா தனது தீர்மானமான முறையில் கூவினாள்: “இது அந்த வீடு அல்ல”. ஆனால் அது எதுவென்று அவள் சொல்லவில்லை; ஏனெனில் என் பால்யத்தின் போக்கில் அது எந்த அளவுக்கு மாறுபட்ட முறைகளில் விவரிக்கப் பட்டதென்றால் குறைந்த பட்சம் சொல்பவருக்கு ஏற்றபடி வடிவமும் திசையும் மாறுகின்ற. மூன்று வீடுகள் இருந்தன. நிஜமான வீடு என் பாட்டி தன் பழிப்பு பாணியில் சொல்ல நான் கேட்டதுபடி ஒரு செவ்விந்தியக் குடில். இரண்டாவது, என் தாத்தா பாட்டியால் கட்டப்பட்டது; மூங்கில் மற்றும் சேற்றால் கட்டப்பட்டு ஒரு கசப்பு பனைமரக்கூரை கொண்டது; பெரிய நன்கு வெளிச்முள்ள ஓய்வறை, பளீர் வண்ணப்பூக்கள் கொண்ட மொட்டை மாடியைப் போன்ற ஒரு உணவருந்தும் அறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு பிரம்மாண்ட செஸ்னட் மரம் கொண்ட முற்றம், நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு தோட்டம் மற்றும் ஆடுகள் பன்றிகள் மற்றும் கோழிகளோடு அமைதியான தோழமையுடன் வாழ்ந்த ஒரு கால்நடைப்பட்டி ஆகியவற்றையும் அது கொண்டிருந்தது.

கருத்துகள்

பொன்கார்த்திக் இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்கள் இங்கே பிறந்தோம், இங்கே தான் இறப்போம் என்பதை நினைவு கொள்வோமாக

:)

http://ponkarthiktamil.blogspot.com/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...