முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 24





 கதவு சற்று திறக்க மிகத் தயக்கமான முறையில் நிழல்களில் இருந்து ஒரு பெண் கேட்டாள்: “என்ன வேண்டும்?
ஒருவேளை பிரக்ஞையற்ற, அதிகாரத்துடன் அம்மா பதிலுரைத்தாள்: “ நான் லூயிசா மார்க்வெஸ்
பிறகு தெருக்கதவு முழுக்கவே திறந்தது, அதோடு இரங்கல் ஆடையில் ஒரு வெளிறிய, எலும்புகள் புடைத்த பெண் தோன்றி ஆவி உலகத்தில் இருந்து எங்களைப் பார்த்தாள். உள்ளறையின் பின்னில் இருந்து மேலும் ஒரு முதிய மனிதர் நிரந்தர நோயாளியின் நாற்காலியில் ஆடினார். பல வருடங்களுக்குப் பின் இந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்த குடியிருப்போர் இவர்கள் தாம்; ஆனால் அவர்களிடம் வாங்குவோருக்கான தோரணை இல்லை; மேலும் யாருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிலைமையில் வீடு இல்லை. என் அம்மாவுக்கு கிடைத்த தந்தியின் படி குடியிருப்போர் பாதி விலையை பணமாக தர ஏற்றுக் கொண்டிருந்தனர்; அதற்கு அவள் ரசீது ஒப்பிட்டுத் தர வேண்டும்; மிச்சப் பணம் வருட முடிவில் ஒப்பந்தங்கள் முடிவான பின் தரப்படும்; ஆனால் ஒரு வருகை ஏற்பாடாகியது யாருக்கும் நினைவில்லை. செவிடர்களுக்கு இடையிலான ஒரு நீண்ட உரையாடலுக்கு பின், எவ்வித உடன்படிக்கையும் நிலுவையில் இல்லை என்பது மட்டும் தெளிவானது. இந்த மூடச்செயல் மற்று பயங்கர வெக்கையால் ஆட்கொள்ளப்பட்டு என் அம்மா வியர்வையில் குளித்து சுற்றுமுற்றும் குறும்பார்வை இட்டாள். பிறகு பெருமூச்சு விட்டாள்.
“இந்த பாவம் வீடு ரொம்ப நாட்கள் தாங்காது
“அதை விட மோசமாக உள்ளது”, அந்த மனிதர் சொன்னார், “இது எங்களைச் சுற்றி இடிந்து விழவில்லை என்றால் அது நாங்கள் பராமரிக்க செய்த செலவினால் தான்.
வாடகையிலிருந்து கழிக்கப்பட்டவை போக நாங்கள் அவர்களிடம் கடன்பட்டுள்ளதாய் கொள்ளும்படி சீர்செய்யும் வேலைகளுக்கான ஒரு பட்டியல் அவர்களிடம் இருந்தது. சிரமமே இல்லாமல் எப்போதும் அழக்கூடிய என் அம்மாவால் வாழ்வின் பொறிகளை சந்திக்கும் பயங்கர தைரியம் காட்டவும் முடியும். அவள் நன்றாக விவாதித்தாள்; நான் குறிக்கிட இல்லை, ஏனெனில் முதல் திடுக்கிடலுக்கு பின் வாங்குபவர்களின் நியாயம் சரி என்று புரிந்தது. தந்தி செய்தியில் விற்பனைக்கான நாள் மற்றும் முறை பற்றி தெளிவா ஏதுமில்லை; இருந்தும் அது ஏற்பாடு செய்யப்பட்டதாய் புரிந்து கொள்ளப் பட்டது. எங்கள் குடும்பத்தின் ஊகிக்கும் பணிக்கு வழக்கமானதே இந்த சூழ்நிலை. தந்திச்செய்தி வந்த அதே கணத்தில் உணவு மேஜையில் இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. என்னையும் சேர்க்காமல், சம உரிமைகளோடு பத்து சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர். இறுதியில் அம்மா சில பிசோக்களை அங்கிங்காய் சிரமப்பட்டு சேகரித்து தனது பள்ளிக்கூட பையை கட்டி திரும்ப வருவதற்கான கட்டணம் தவிர வேறேதுமின்றி கிளம்பி விட்டாள்.

ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றிலும் என் அம்மாவும் அந்த பெண்ணும் திரும்ப பேசினர்; அரைமணி நேரத்துக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். வீட்டின் மீதான பணய உரிமை ஒன்றும் இந்த மாற்றம் இல்லாத முடிவுகளில் சேரும்; ஒரு உறுதியான விற்பனை பல வருடங்களுக்குப் பின் ஒரு வழியாக நடக்கும் வரை அது சரிசெய்யப் படவில்லை. ஆக அதனால் அப்பெண் அதே கொடிய விவாதத்தை மற்றொரு முறை திரும்ப செய்ய முயன்ற போது அம்மா தனது வசீகரமற்ற முறையில் அதிரடி நடவடிக்கைகளை பயன்படுத்தினாள்.
இந்த வீடு விற்பனைக்கு அல்ல”, அவள் சொன்னாள், நாங்கள் இங்கே பிறந்தோம், இங்கே தான் இறப்போம் என்பதை நினைவு கொள்வோமாக
மதியத்தின் மிச்சத்தை அந்த பேய்வீட்டில் பழைமை ஏக்க நினைவுகளை அசை போட்டு திரும்பச் செல்லும் ரயில் வரும் வரை செலவழித்தோம். அவை எல்லாம் எங்களுடையதே; ஆனால் தெருவை எதிர்நோக்கிய என் தாத்தாவின் அலுவலக அறைகளாக விளங்கின அலுவலக பகுதி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. மிச்சம் எல்லாம் பல்லிகளின் கருணைக்கு விடப்பட்ட சிதைந்து போகும் சுவர்களும் துருப்பிடித்த தரகக் கூரைகளும் கொண்ட ஒரு ஓடு மட்டுமே. வாசலில் அதிர்ச்சியுற்ற என் அம்மா தனது தீர்மானமான முறையில் கூவினாள்: “இது அந்த வீடு அல்ல”. ஆனால் அது எதுவென்று அவள் சொல்லவில்லை; ஏனெனில் என் பால்யத்தின் போக்கில் அது எந்த அளவுக்கு மாறுபட்ட முறைகளில் விவரிக்கப் பட்டதென்றால் குறைந்த பட்சம் சொல்பவருக்கு ஏற்றபடி வடிவமும் திசையும் மாறுகின்ற. மூன்று வீடுகள் இருந்தன. நிஜமான வீடு என் பாட்டி தன் பழிப்பு பாணியில் சொல்ல நான் கேட்டதுபடி ஒரு செவ்விந்தியக் குடில். இரண்டாவது, என் தாத்தா பாட்டியால் கட்டப்பட்டது; மூங்கில் மற்றும் சேற்றால் கட்டப்பட்டு ஒரு கசப்பு பனைமரக்கூரை கொண்டது; பெரிய நன்கு வெளிச்முள்ள ஓய்வறை, பளீர் வண்ணப்பூக்கள் கொண்ட மொட்டை மாடியைப் போன்ற ஒரு உணவருந்தும் அறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு பிரம்மாண்ட செஸ்னட் மரம் கொண்ட முற்றம், நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு தோட்டம் மற்றும் ஆடுகள் பன்றிகள் மற்றும் கோழிகளோடு அமைதியான தோழமையுடன் வாழ்ந்த ஒரு கால்நடைப்பட்டி ஆகியவற்றையும் அது கொண்டிருந்தது.

கருத்துகள்

பொன்கார்த்திக் இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்கள் இங்கே பிறந்தோம், இங்கே தான் இறப்போம் என்பதை நினைவு கொள்வோமாக

:)

http://ponkarthiktamil.blogspot.com/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.