முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 25



பலமுறை சொல்லப்பட்ட விவரணையின் படி ஜூலை 20 சுதந்திர நாளின் கொண்டாட்டங்களின் போதான வாணவெடிகள் கூரையில் விழுந்ததில் இந்த வீடு சாம்பலாகி போனது; பற்பல யுத்தங்களின் எந்த வருடத்து சுதந்திர நாள் என்பது யாருக்கும் தெரியாது. மிச்சமானது எல்லாம் சிமிண்டு தரைகளும் பாப்பலேலோ ஒரு அரசு அலுவராய் விளங்கிய பல்வேறு தறுவாய்களில் அவரது அலுவலகமாய் விளங்கிய, தெருவை எதிர்நோக்கிய கதவுடன் கூடிய இரண்டு அறைகளின் தொகுதி மட்டுமே.
அந்த வெப்பம் மாறாத அழிவுகளில் இருந்து குடும்பம் தனது அறுதியான புகலிடத்தை அமைத்தது. பூக்கள் வைத்த மாடமுடைய, குடும்ப மகளிர் அமர்ந்து சட்டங்களில் சித்திரப்பின்னல் இட்டு மாலையின் குளிர்மையில் உரையாடும் பொது அறை வழிப்பாதையில் வரிசையாக எட்டு அறைகள் கொண்ட ஒரு நீண்ட வீடு. அறைகள் ஒன்றோடொன்று வேறுபடாது எளிமை ஆனவை; ஆனால் அவற்றின் கணக்கற்ற விரங்கள் ஒவ்வொன்றிலும் என் வாழ்வின் அதிமுக்கிய கணம் ஒன்று உள்ளதை அறிய எனக்கு ஒரு ஒற்றை கண்ணோட்டம் போதுமானதாக இருந்தது,
முதல் அறை வரவேற்பறை மற்றும் என் தாத்தாவின் தனிப்பட்ட அலுவலகமாக விளங்கியது. அதில் ஒரு நழுவுமூடி மேசை, பஞ்சுத்திணித்த உறை கொண்ட சுழல்நாற்காலி, ஒரு மின்விசிறி மற்றும் ஒரு ஒற்றை பிரம்மாண்ட கந்தலான புத்தகம் ஸ்பானிஷ் மொழி அகராதி வைத்திருக்கும் ஒரு காலி புத்தக அலமாரியும் இருந்தன. அதற்கு வலது பக்கம் என் தாத்தா தனது சிந்த மணி நேரங்களை செலவழித்து திரும்பும் உடல்களும், சிறிய மரகத கண்களும் உடைய சிறு தங்க மீன்கள் உருவாக்கும் பட்டறை இருந்தது; இம்மீன்கள் அவருக்கும் உணவை விட அதிக ஆனந்தம் கொடுத்தது. சில குறிப்பிடத்தக்க முக்கியஸ்தர்கள் அங்கே வரவேற்கப்படனர், குறிப்பாய் அரசியல்வாதிகள், வேலையற்ற அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த போர் வீரர்கள். அவர்கள் இடையே பலதரப்பட்ட தருணங்களில் இரு வரலாற்று சிறப்புடைய விருந்தாளிகளும்: தளபதிகள் ராபேல் உரிபே மற்றும் பெஞ்சமின் ஹெரேரா; இவ்விருவரும் எங்கள் குடும்பத்தோடு மதிய உணவு அருந்தி உள்ளனர். ஆனால் என் பாட்டி உரிபே உரிபே பற்றி தன் வாழ்நாளின் மிச்சமெல்லாம் நினைவு கூர்ந்தது மேஜையில் அவரது மிதத்தன்மையை பற்றியே” “அவர் ஒரு பறவையைப் போல உணவருந்தினார்”.
எங்களது கரீபியன் கலாச்சாரம் காரணமாக அலுவலகம் மற்றும் பட்டறை இருந்த பகுதி பெண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்தது; நகரத்து உணவு மற்றும் மது விடுதிகள் பெண்களுக்கு சட்டப்படி விலக்கப்பட்டிருந்ததை போன்றே இருந்தும் காலப்போக்கில் அது ஒரு மருத்துவமனை அறையாக மாற்றப்பட்டது; அங்கு அத்தை பெட்ரா காலமானாள்; பாப்பலேலோவின் சகோதரி வெனேபிரீடா மார்க்வெஸ் தனது நீண்ட நோய்மையின் கடைசி மாதங்களை கழித்தாள். என் பால்யத்தில் அந்த வீட்டினுள் கடந்து சென்றிருந்த பல வீட்டுப் பெண்கள் மற்றும் தற்காலிக பெண்களின் காற்றுப் புகாத சுவர்கபுரி இவ்வாறு ஆரம்பம் கொண்டது. இரு உலகங்களின் வசதிகளை அனுபவித்த ஒரே ஆண் நான் மட்டுமே. பெண்கள் தையலிட அமரும் மாடமும், தினமும் மதிய ரயிலில் வரும் எதிர்பாக்கப்பட்ட அல்லது எதிர்பாராத பதினாறு விருந்தாளிகளுக்கான மேஜையும் உடைய உணவறை பொது அறை வழிப்பாதையின் விரிவான ஒரு பகுதி மட்டுமே. அங்கிருந்து அம்மா உடைந்த பேகோனியே பூந்தொட்டிகள், அழுகின அறுவடை வயல், எறும்புகளால் அரிக்கப்பட்டு மீதமான மல்லிகைத் தண்டு ஆகியன பற்றி சிந்தனையில் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள்.
மல்லிகைப் பூக்களின் சூடான நறுமணம் தாங்க முடியாது எங்களுக்கு சில நேரங்களில் மூச்சுத் திணறும்”. அவள் வண்ண மயமான ஆகாயத்தை நோக்கியவாறு சொன்னாள்; ஆழ்மனதில் இருந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “ஆனால் அப்போதில் இருந்து நான் ரொம்ப ஏங்கியது அந்த மூன்று மணி இடியோசைக்காகத் தான்”

கருத்துகள்

ers இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...