Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 25



பலமுறை சொல்லப்பட்ட விவரணையின் படி ஜூலை 20 சுதந்திர நாளின் கொண்டாட்டங்களின் போதான வாணவெடிகள் கூரையில் விழுந்ததில் இந்த வீடு சாம்பலாகி போனது; பற்பல யுத்தங்களின் எந்த வருடத்து சுதந்திர நாள் என்பது யாருக்கும் தெரியாது. மிச்சமானது எல்லாம் சிமிண்டு தரைகளும் பாப்பலேலோ ஒரு அரசு அலுவராய் விளங்கிய பல்வேறு தறுவாய்களில் அவரது அலுவலகமாய் விளங்கிய, தெருவை எதிர்நோக்கிய கதவுடன் கூடிய இரண்டு அறைகளின் தொகுதி மட்டுமே.
அந்த வெப்பம் மாறாத அழிவுகளில் இருந்து குடும்பம் தனது அறுதியான புகலிடத்தை அமைத்தது. பூக்கள் வைத்த மாடமுடைய, குடும்ப மகளிர் அமர்ந்து சட்டங்களில் சித்திரப்பின்னல் இட்டு மாலையின் குளிர்மையில் உரையாடும் பொது அறை வழிப்பாதையில் வரிசையாக எட்டு அறைகள் கொண்ட ஒரு நீண்ட வீடு. அறைகள் ஒன்றோடொன்று வேறுபடாது எளிமை ஆனவை; ஆனால் அவற்றின் கணக்கற்ற விரங்கள் ஒவ்வொன்றிலும் என் வாழ்வின் அதிமுக்கிய கணம் ஒன்று உள்ளதை அறிய எனக்கு ஒரு ஒற்றை கண்ணோட்டம் போதுமானதாக இருந்தது,
முதல் அறை வரவேற்பறை மற்றும் என் தாத்தாவின் தனிப்பட்ட அலுவலகமாக விளங்கியது. அதில் ஒரு நழுவுமூடி மேசை, பஞ்சுத்திணித்த உறை கொண்ட சுழல்நாற்காலி, ஒரு மின்விசிறி மற்றும் ஒரு ஒற்றை பிரம்மாண்ட கந்தலான புத்தகம் ஸ்பானிஷ் மொழி அகராதி வைத்திருக்கும் ஒரு காலி புத்தக அலமாரியும் இருந்தன. அதற்கு வலது பக்கம் என் தாத்தா தனது சிந்த மணி நேரங்களை செலவழித்து திரும்பும் உடல்களும், சிறிய மரகத கண்களும் உடைய சிறு தங்க மீன்கள் உருவாக்கும் பட்டறை இருந்தது; இம்மீன்கள் அவருக்கும் உணவை விட அதிக ஆனந்தம் கொடுத்தது. சில குறிப்பிடத்தக்க முக்கியஸ்தர்கள் அங்கே வரவேற்கப்படனர், குறிப்பாய் அரசியல்வாதிகள், வேலையற்ற அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த போர் வீரர்கள். அவர்கள் இடையே பலதரப்பட்ட தருணங்களில் இரு வரலாற்று சிறப்புடைய விருந்தாளிகளும்: தளபதிகள் ராபேல் உரிபே மற்றும் பெஞ்சமின் ஹெரேரா; இவ்விருவரும் எங்கள் குடும்பத்தோடு மதிய உணவு அருந்தி உள்ளனர். ஆனால் என் பாட்டி உரிபே உரிபே பற்றி தன் வாழ்நாளின் மிச்சமெல்லாம் நினைவு கூர்ந்தது மேஜையில் அவரது மிதத்தன்மையை பற்றியே” “அவர் ஒரு பறவையைப் போல உணவருந்தினார்”.
எங்களது கரீபியன் கலாச்சாரம் காரணமாக அலுவலகம் மற்றும் பட்டறை இருந்த பகுதி பெண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்தது; நகரத்து உணவு மற்றும் மது விடுதிகள் பெண்களுக்கு சட்டப்படி விலக்கப்பட்டிருந்ததை போன்றே இருந்தும் காலப்போக்கில் அது ஒரு மருத்துவமனை அறையாக மாற்றப்பட்டது; அங்கு அத்தை பெட்ரா காலமானாள்; பாப்பலேலோவின் சகோதரி வெனேபிரீடா மார்க்வெஸ் தனது நீண்ட நோய்மையின் கடைசி மாதங்களை கழித்தாள். என் பால்யத்தில் அந்த வீட்டினுள் கடந்து சென்றிருந்த பல வீட்டுப் பெண்கள் மற்றும் தற்காலிக பெண்களின் காற்றுப் புகாத சுவர்கபுரி இவ்வாறு ஆரம்பம் கொண்டது. இரு உலகங்களின் வசதிகளை அனுபவித்த ஒரே ஆண் நான் மட்டுமே. பெண்கள் தையலிட அமரும் மாடமும், தினமும் மதிய ரயிலில் வரும் எதிர்பாக்கப்பட்ட அல்லது எதிர்பாராத பதினாறு விருந்தாளிகளுக்கான மேஜையும் உடைய உணவறை பொது அறை வழிப்பாதையின் விரிவான ஒரு பகுதி மட்டுமே. அங்கிருந்து அம்மா உடைந்த பேகோனியே பூந்தொட்டிகள், அழுகின அறுவடை வயல், எறும்புகளால் அரிக்கப்பட்டு மீதமான மல்லிகைத் தண்டு ஆகியன பற்றி சிந்தனையில் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள்.
மல்லிகைப் பூக்களின் சூடான நறுமணம் தாங்க முடியாது எங்களுக்கு சில நேரங்களில் மூச்சுத் திணறும்”. அவள் வண்ண மயமான ஆகாயத்தை நோக்கியவாறு சொன்னாள்; ஆழ்மனதில் இருந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “ஆனால் அப்போதில் இருந்து நான் ரொம்ப ஏங்கியது அந்த மூன்று மணி இடியோசைக்காகத் தான்”

Comments

ers said…
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...