முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்

சமகாலம் கிரிக்கெட்டில் பந்துவீச்சின் இலையுதிர் பருவம் எனலாம். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்டு எந்த அணியுமே ஒரு ஆட்டத்துக்கு முன்னால் தன் மட்டையாட்ட வலிமையைத் தான் பெரிதும் நம்புகிறது; எந்த அணியும் டாஸ் வென்று மிக அரிதாகவே பந்து வீச விரும்புகிறது. பயணப்படும் அணிகள் எதிர்பார்ப்பது தம் மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே. 500க்கு மேற்பட்ட ஓட்டங்கள் ஏற்படுத்தும் நெருக்கடி பந்து வீச்சுக்கு இல்லாத ரெண்டு கோரப் பற்களை தந்து விடுகிறது. உலகமெங்கும் ஆடுகளங்கள் சோர்வுற்று மெதுவாகி வருவதும் மேற்சொன்ன பந்து வீச்சின் அந்திம பருவமும் இந்த போக்குக்கு காரணங்கள். இந்த பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணப்படப் போகும் இந்திய அணி நிச்சயம் பந்து வீச்சை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாது எனலாம். நமது எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்?

தோனி தெ.ஆப்பிரிக்க பயணம் முழுக்க சஹீர்கான் வலுவான உடல்தகுதியுடன் இருக்க எதிர்பார்ப்பார். துணை வீச்சாளர்களான ஸ்ரீசாந்தும் இஷாந்தும் கட்டுப்பாடோடு வீச வேண்டும். இந்த மூவரணி தொடர் முழுக்க கவனச்சிதறல்களோ சேதங்களோ இன்றி நிலைத்தாலே தோனி ஒரு பெருமூச்சு விடுவார். தென்னாப்பிரிக்காவின் அனைத்து ஆடுகளங்களும் எகிறாது. சோதனையான களங்களிலும் நமது மட்டையாட்ட வரிசையால் சுதாரிக்க முடியும். திறமையும் அனுபவமும் ஆட்டநிலையில் இருந்து வேறுபட்டவை. ஆட்டநிலை அன்பைப் போல் சீக்கிரம் காணாமல் போய் எதிர்பாராமல் பின் வந்து அணைப்பது. ஏழு பேரில் நால்வர் நல்ல ஆட்டநிலையில் ஆடினாலே இந்தியாவால் தெ.ஆப்பிரிக்க தொடரில் நிலைக்க முடியும். திறன்நிலையைப் பொறுத்து அணி முழு ஆரோக்கியத்தோடு இருந்தால் ஒழிய தோனிக்கு இத்தொடரை வெல்வதை விட டிரா செய்வதே ஆதார நோக்கமாக இருக்கும். 96இல் இருந்து இதுவரை தென்னாப்ப்ரிக்காவுடன் இந்தியா ஆடிய டெஸ்டு ஆட்டங்களை நினைவுபடுத்தி பாருங்கள். பந்து வீச்சு ஒருசில செஷன்களில் மட்டுமே நம்மை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து நமக்கு நெருக்கடி அளித்து வந்துள்ளது என்ன?
இரண்டு விசயங்கள். ஒன்று தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம். அது பொறுமை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. நீண்ட நேரம் ஆடி பெரும் ஸ்கோர்களைக் குவிக்கக் கூடியது. தென்னாப்பிரிக்கா கட்டாயம் இலவச விக்கெட்டுகளை தராது. தென்னாப்ப்ரிக்க மட்டையாளர்களை நெருக்கடியில் தொடர்ந்து வைக்க அபாரமான பொறுமை, கட்டுப்பாடு மற்றும் திறமை வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்க மட்டையாட்ட தேருக்கு எப்படி கட்டை போட்டு நிறுத்துவது என்பதே முக்கிய பிரச்சனையாக நமக்கு இருந்துள்ளது. வரப்போகும் பயணத்தில் தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம் சீர்குலைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறுவிதங்களில் இந்தியாவை தாக்கி சரிக்க முயலும். ஆட்டத்தில் எதிர்பாரா தன்மை, நாடகீய தருணங்கள் உருவாகும். இல்லாத பட்சத்தில் இத்தொடரின் டெஸ்டுகள் ஒரு புல்வெட்டும் எந்திரத்தை தொடர்ந்து பார்க்கும் அனுபவத்தை மட்டுமே தரும். சிறந்த கிரிக்கெட் மலைகளின் எழுச்சியையும், பள்ளத்தாக்குகளின் வீழ்ச்சிகளாலும் அடையாளப்படுவது.
அடுத்து ஒரு அணியுடன் சமமாக போராட வைப்பது எது? திறன்களா? இல்லை. இந்தியா எப்போது ஆஸ்திரேலியாவால் மன எழுச்சியுற்று தனது ஆட்டத்தரத்தை பலமடங்கு உயர்த்துவதும் ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை மண்ணில் திணறுவதும் ஏன்? கிரிக்கெட்டில் மட்டும் இரு முரணான தன்மை கொண்ட இருப்புகள் மோதினால் தசாவதார தரிசனங்கள் கிடைப்பதில்லை. கிரிக்கெட் சமபலம் கொண்ட அசுரர்கள் மோத வேண்டிய ஆட்டம். ஆவேசமாக தாக்கி ஆடக் கூடிய அணியுடன் எதிரணி அதே பாணியிலே ஆட வேண்டும். தென்னாப்பிரிக்காவுடன் வெல்ல இந்தியா கல்லும் முள்ளுமற்ற ஒரு பாதையை தேர்ந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க பாணியில் தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும்.

கருத்துகள்

இளமுருகன் இவ்வாறு கூறியுள்ளார்…
//தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும். //
நல்ல சொல்லாடல்.
பொன்கார்த்திக் இவ்வாறு கூறியுள்ளார்…
super
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன ஒரு நேர்த்தியான மொழி!
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி இளமுருகன், பொன்கார்த்திக் மற்றும் செல்வேந்திரன்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...