Skip to main content

தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்

சமகாலம் கிரிக்கெட்டில் பந்துவீச்சின் இலையுதிர் பருவம் எனலாம். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்டு எந்த அணியுமே ஒரு ஆட்டத்துக்கு முன்னால் தன் மட்டையாட்ட வலிமையைத் தான் பெரிதும் நம்புகிறது; எந்த அணியும் டாஸ் வென்று மிக அரிதாகவே பந்து வீச விரும்புகிறது. பயணப்படும் அணிகள் எதிர்பார்ப்பது தம் மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே. 500க்கு மேற்பட்ட ஓட்டங்கள் ஏற்படுத்தும் நெருக்கடி பந்து வீச்சுக்கு இல்லாத ரெண்டு கோரப் பற்களை தந்து விடுகிறது. உலகமெங்கும் ஆடுகளங்கள் சோர்வுற்று மெதுவாகி வருவதும் மேற்சொன்ன பந்து வீச்சின் அந்திம பருவமும் இந்த போக்குக்கு காரணங்கள். இந்த பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணப்படப் போகும் இந்திய அணி நிச்சயம் பந்து வீச்சை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாது எனலாம். நமது எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்?

தோனி தெ.ஆப்பிரிக்க பயணம் முழுக்க சஹீர்கான் வலுவான உடல்தகுதியுடன் இருக்க எதிர்பார்ப்பார். துணை வீச்சாளர்களான ஸ்ரீசாந்தும் இஷாந்தும் கட்டுப்பாடோடு வீச வேண்டும். இந்த மூவரணி தொடர் முழுக்க கவனச்சிதறல்களோ சேதங்களோ இன்றி நிலைத்தாலே தோனி ஒரு பெருமூச்சு விடுவார். தென்னாப்பிரிக்காவின் அனைத்து ஆடுகளங்களும் எகிறாது. சோதனையான களங்களிலும் நமது மட்டையாட்ட வரிசையால் சுதாரிக்க முடியும். திறமையும் அனுபவமும் ஆட்டநிலையில் இருந்து வேறுபட்டவை. ஆட்டநிலை அன்பைப் போல் சீக்கிரம் காணாமல் போய் எதிர்பாராமல் பின் வந்து அணைப்பது. ஏழு பேரில் நால்வர் நல்ல ஆட்டநிலையில் ஆடினாலே இந்தியாவால் தெ.ஆப்பிரிக்க தொடரில் நிலைக்க முடியும். திறன்நிலையைப் பொறுத்து அணி முழு ஆரோக்கியத்தோடு இருந்தால் ஒழிய தோனிக்கு இத்தொடரை வெல்வதை விட டிரா செய்வதே ஆதார நோக்கமாக இருக்கும். 96இல் இருந்து இதுவரை தென்னாப்ப்ரிக்காவுடன் இந்தியா ஆடிய டெஸ்டு ஆட்டங்களை நினைவுபடுத்தி பாருங்கள். பந்து வீச்சு ஒருசில செஷன்களில் மட்டுமே நம்மை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து நமக்கு நெருக்கடி அளித்து வந்துள்ளது என்ன?
இரண்டு விசயங்கள். ஒன்று தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம். அது பொறுமை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. நீண்ட நேரம் ஆடி பெரும் ஸ்கோர்களைக் குவிக்கக் கூடியது. தென்னாப்பிரிக்கா கட்டாயம் இலவச விக்கெட்டுகளை தராது. தென்னாப்ப்ரிக்க மட்டையாளர்களை நெருக்கடியில் தொடர்ந்து வைக்க அபாரமான பொறுமை, கட்டுப்பாடு மற்றும் திறமை வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்க மட்டையாட்ட தேருக்கு எப்படி கட்டை போட்டு நிறுத்துவது என்பதே முக்கிய பிரச்சனையாக நமக்கு இருந்துள்ளது. வரப்போகும் பயணத்தில் தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம் சீர்குலைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறுவிதங்களில் இந்தியாவை தாக்கி சரிக்க முயலும். ஆட்டத்தில் எதிர்பாரா தன்மை, நாடகீய தருணங்கள் உருவாகும். இல்லாத பட்சத்தில் இத்தொடரின் டெஸ்டுகள் ஒரு புல்வெட்டும் எந்திரத்தை தொடர்ந்து பார்க்கும் அனுபவத்தை மட்டுமே தரும். சிறந்த கிரிக்கெட் மலைகளின் எழுச்சியையும், பள்ளத்தாக்குகளின் வீழ்ச்சிகளாலும் அடையாளப்படுவது.
அடுத்து ஒரு அணியுடன் சமமாக போராட வைப்பது எது? திறன்களா? இல்லை. இந்தியா எப்போது ஆஸ்திரேலியாவால் மன எழுச்சியுற்று தனது ஆட்டத்தரத்தை பலமடங்கு உயர்த்துவதும் ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை மண்ணில் திணறுவதும் ஏன்? கிரிக்கெட்டில் மட்டும் இரு முரணான தன்மை கொண்ட இருப்புகள் மோதினால் தசாவதார தரிசனங்கள் கிடைப்பதில்லை. கிரிக்கெட் சமபலம் கொண்ட அசுரர்கள் மோத வேண்டிய ஆட்டம். ஆவேசமாக தாக்கி ஆடக் கூடிய அணியுடன் எதிரணி அதே பாணியிலே ஆட வேண்டும். தென்னாப்பிரிக்காவுடன் வெல்ல இந்தியா கல்லும் முள்ளுமற்ற ஒரு பாதையை தேர்ந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க பாணியில் தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும்.

Comments

//தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும். //
நல்ல சொல்லாடல்.
selventhiran said…
என்ன ஒரு நேர்த்தியான மொழி!
நன்றி இளமுருகன், பொன்கார்த்திக் மற்றும் செல்வேந்திரன்!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...