Skip to main content

இந்தியா ஏன் வெல்ல வேண்டும்?


தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்டு ஆட்டத்தில் இந்தியாவால் ஆட்டத்தை காப்பாற்ற முடியும் மற்றும் வெல்லக் கூட முடியும் என்று மீடியா விமர்சகர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர். இதற்கு காரணம் எந்த ஒரு கிரிக்கெட் தர்க்கமோ விவேகமோ அல்ல.
இன்று ஒரு செஷன் நமது துவக்க ஆட்டக்காரர்கள் நேர்மறையாக ஆடி தாக்குப்பிடித்து ஓட்டம் எடுத்தது தான். தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும் ஒரு சிறுவனைப் போல் நம் மீடியா உடனே பரபரப்பாகி விட்டது. இந்த மனப்போக்கின் அடிப்படையில் ஒரு அசட்டுத் தனம் உள்ளது.
முதலில், கிரிக்கெட் எண்களின், முடிவுகளின் ஆட்டம் அல்ல. வெற்றி தோல்விகளை விட பார்வையாளர்களின் நினைவில் நிற்பவை உயர்ந்த மனிதப் பண்புகளை சோதித்த காவிய ஆட்டங்களே. உதாரணமாய் 2000இல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் டெஸ்டு ஆட்டங்கள். அதற்கு பின் அவர்கள் திரும்ப வந்து ஜெயித்தார்கள். அடுத்து இருமுறை வந்து தோற்றார்கள். ஆனால் நம் கற்பனையை கவர்ந்தவை கொல்கத்தாவிலும், சென்னையிலும் நடந்த அந்த தராசு முள் ஆட்டங்கள். ஏன்? கிரிக்கெட் ஆடுகளம் ஒரு போராட்டத்தை, அபார பொறுமையை, அதிர்ஷட்டத்தின் குரூர சாய்வுகளை, உடல்ரீதியான சாகசங்களை, இறுதியாய் தனிமனித ஆற்றல்களை அழகியல் பூர்வமாய் நிகழ்த்திக் காட்டும் ஒரு மேடை. மனிதனின் சிலுவை விளைவுகள் பற்றின கவலை தான். கிரிக்கெட்டில் இந்த சிலுவையில் அறையப்பட்ட எந்த அணிக்கும் உயிர்த்தெழுப்பு இல்லை. மேற்சொன்ன ஆஸ்திரேலிய டெஸ்டுகளை போல் மிகச் சிறந்த காவிய ஆட்டங்கள் வெற்றி தோல்விகளை கடந்தவை.
இனிவரும் இரண்டு நாட்களுக்கு இந்தியா தாக்குப் பிடிக்காவிட்டால் என்ன என்று நாம் கேட்க வேண்டும். இந்த தொடரில் மீண்டு வர இந்தியாவுக்கு எப்போதும் வாய்ப்பிருக்கும். இத்தொடரின் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தொடருக்குள் மறந்து விடுவோம். இங்கிலாந்திலும் மே.இ தீவுகளிலும் நாம் டெஸ்டு தொடர்களை வென்றுள்ளதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம். உயர் மனிதப் பண்புகளை காட்சிப்படுத்துவது தான் இத்தொடரின், எந்த டெஸ்டு தொடரின்,  முக்கிய லட்சியமாக இருக்கும். எந்த நொடிய்ல் இருந்து இந்தியா இந்த ஆட்டத்தை காப்பாற்றுவது பற்றி யோசிக்க ஆரம்பிக்குமோ அப்போதில் இருந்து அவர்கள் ஏறுவது ஒரு வழுக்கு மரமாகத் தான் இருக்கும்.
இப்படியும் யோசிக்கலாம். இயற்கை விதியின் படி யார் இந்த ஆட்டத்தை வெல்ல தகுதியானவர்கள். இதுவரை குறைவான தவறுகளே செய்துள்ள தென்னாப்பிரிக்கர்கள் தாம். ஆக இந்தியா கடிகார முள்ளை திருப்பி விட முயலாமல் இந்த நிலைமை சகஜமாக நடைமுறை ஞானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டையாளர்கள் ஆளுக்கு சதமோ அரை சதமோ அடித்து தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அடுத்து வரும் ஆட்டங்களுக்கு தம்மை தயாரிக்க முயலவேண்டும். ஒரு வேளை இந்த ஆட்டத்தை காப்பாற்ற முடிந்தால் அது ஒரு உபரி வெகுமதி மட்டும் தான். இரண்டு நாள் ஆட்ட வரலாற்றின் பாரத்துடன் ஆடினால் இந்தியாவால் நாளை மதியம் வரை கூட தாக்குப் பிடிக்க முடியாது.
தென்னாப்ப்ரிக்கா இரண்டு தவறுகளை செய்கிறது. ஒன்று அவர்கள் கறுப்பின சலுகை தேர்வு. இது சமீபமாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்து வந்த ஒன்று. தென்னாப்பிரிக்க அணியில் தகுதியை மீறி கறுப்பர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்க அரசு நெருக்கடி கொடுக்கிறது. இது தற்போது ஒரு மறைமுக கொள்கையாக உள்ளது. டூமினி நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு ஆஷ்வல் பிரின்ஸ் எனும் மற்றொரு கறுப்பர் வருகிறார். நித்தினி எனும் வேக வீச்சாளர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்திற்கு சொட்சொபெ எனும் மற்றொரு சுமார் ரக கறுப்பரான வீச்சாளர் கொண்டு வரப்படுகிறார். அவரால் நடந்து வரும் ஆட்டத்தில் எந்தவொரு பாதிப்பையும் மட்டையாளர்கள் மீது ஏற்படுத்த முடியவில்லை. வேடிக்கை என்னவென்றால் அவர் பந்து வீசும் முன்னரே அவர் மொத்தமாக இந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளாவது எடுக்க வேண்டும் என்று அணியில் 11 பேருமே பிரயத்தனப்படுகிறார்கள். அணித்தலைவர் ஸ்மித்துக்கும் சொட்சொபேவின் வெற்றி ஒரு தனி அழுத்தமாகவே உள்ளது. அவர் அணியின் வெற்றிக்கு நிகராக சொட்சொபேவின் நிலைப்பையும் வேண்டுகிறார். அந்த அழகான பெயரைத் தவிர சொட்சொபேவிடம் விசேசமாக ஒன்றும் இல்லை. முன்பு குரோன்யேவின் குற்றமன்னிப்பு பரபரப்பில் சில தலைகள் உருண்ட போதும் கிப்ஸ் இந்த இன ஒதுக்கீட்டு பரிவினாலே அணியில் பாதுகாக்கப்பட்டார். தென்னாப்ப்ரிக்கா போன்ற ஒரு சீரிய அணியில் அரசியல் தான் ஒரே கோளாறு. ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதும் இதன் அடிப்படையில் அணித்தலைமையும் தேர்வாளர்களும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி சுமப்பதும் மாபெரும் கிரிக்கெட் வேடிக்கைகளில் ஒன்று. சமூக அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் கிரிக்கெட்டில் நிச்சயம் இல்லை. கிரிக்கெட்டில் ஒரு நிறபேதம் மட்டும் தான். அது பந்தின் நிறம்.

Comments

பார்ப்போம் .. டிராவிட் நின்னா வாய்ப்பு
"ராஜா" said…
இந்தியா ஆட்டத்தை காபாற்றுவது திராவிட் லக்ஷுமணன் கையில் தான் உள்ளது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...