Skip to main content

மது நீரிழிவை தடுக்க உதவுமா? நீரிழிவு இருந்தால் குடிக்கலாமா?




நீரிழிவு தீவிரமான வாழ்வு முறை மாற்றங்களை கோருவது என்பது நமக்கு தெரியும். காப்பியில் சர்க்கரையை தவிர்க்கும் அளவுக்கு அது எளிதல்ல. உதாரணமாய், செரிமானத்தின் போது எளிதில் சர்க்கரையாக மாறக் கூடிய மாவுச் சத்து உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும், அது என்ன உணவுப் பொருள் என்று தெரிய வேண்டும்? இனிப்பில்லாத ஆனால் கலோரி எனப்படும் ஆற்றல் கணக்கு அதிகமான உணவை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டும். இனிப்பில்லாத ஆனால் காரமான பொரித்த தின்பண்டம் சாப்பிடக் கூடியதல்ல என்று தெரிய வேண்டும். ரத்த சர்க்கரையை உயர்த்தக் கூடிய சங்கதிகள் நம் உணவில் மறைமுகமாகவே அதிகம் உள்ளது. சுருக்கமாக ஒரு வாய் அருந்தும் முன் மென்று முழுங்கும் முன் யோசித்து அலச வேண்டும். இது மனிதனின் உணவுக் கலாச்சாரத்துக்கு பொதுவான இயற்கை பண்புக்கே விரோதமானது. இதனாலே உணவு முறை மாற்றங்கள் ஆரம்ப கால நீரிழிவாளனை எரிச்சலூட்டுகின்றன. யோசித்து உண்பது யோசித்து பின் புணர்வது போல். எங்கோ உதைக்கிறது!

இதனாலே நாம் இங்கு இது குறித்து யோசிக்கிறோம். குறிப்பாக குடி பற்றி. மது மற்றும் புகை பழக்கம் நிச்சயம் ரத்த சர்க்கரையை திமிற வைக்கும். ஆனால் நான் சமீபமாக படித்த ஆய்வொன்று மது சர்க்கரையை அளவை குறைக்கும் என்கிறது. குறிப்பாய் இதுவரை நீரிழிவு இல்லாதவர்களுக்கு அதை தவிர்க்க மது உதவும் என்கிறது இவ்வாய்வு. குறிப்பாய் மதுவுக்கு சர்க்கரை அளவை எகிறாமல் பார்க்கும் பண்பு உள்ளது. ஆய்வாளர்களை பொறுத்த மட்டில் ஒரு நாளைக்கு ஒரு பெக் குடித்தால் இருபது சதவீதம் வரை நீரிழிவு வரும் வாய்ப்பை தவிர்க்கலாம். சிக்கல் என்னவென்றால் இது ஐரோப்பிய பண்பாட்டுக்கு பொருந்தும் ஒரு கலாச்சார பழக்கம். அவர்கள் சாதாரணமாக்வே உணவின் போது ஒரு பெக் மது அருந்தக் கூடியவர்கள் தாம். அது பெரும்பாலும் வைனாக இருக்கிறது. ஆனால் வைனும் பீரும் அதிக கலோரிகள் கொண்ட மது வகைகள். விஸ்கி போன்று ஹாட்டானவை ஒப்பீட்டளவில் குறைந்த ஆற்றல் உள்ளவை. அதாவது சர்க்கரையை அதிகமாய் எகிற வைக்காது. ஆனால் ஒரு பெக் விஸ்கி ஒரு கோப்பை சர்க்கரை சேர்க்காத பழரசத்தை போன்றது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இயற்கையான சர்க்கரை அல்லது கலோரிகள் அதில் உண்டு. நீரிழிவாளர்கள் தினமும் குடிக்கலாம். ஆனால் மூன்று விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.

முதலில் தொடர்ச்சியாக ரத்த சர்க்கரையை பரிசோதிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும். இதை அக்யு செக் போன்ற ரத்த சர்க்கரை சோதனை எந்திரங்கள் மூலம் எளிதாக ஐந்து நொடிகளில் செய்யலாம். வாரத்துக்கு சில முறையேனும் இவ்வாறு செய்தால் உங்கள் ரத்த சர்க்கரை அளவாக உள்ளதா என்று அறியலாம். கட்டுப்பாடில் உள்ளதென்றால் முதல் பச்சை விளக்கு.
அடுத்து குடிக்கும் முன் அந்த வேளையில் ஒரு முறை சோதித்து பார்ப்பது நல்லது. அப்போதும் கட்டுப்பாட்டில் இருந்தால் மிகவும் நல்லது. ஒரு பெக் மட்டும் சாப்பிடப் போகிறீர்கள் என்றால் உங்கள் வழக்கமான உணவில் கொஞ்சம் குறைத்து கொள்ளலாம். உதாரணமாய் ஒரு தோசை அல்லது சப்பாத்தியை குறைக்கலாம். சைட் டிஷ்ஷாக வெள்ளரிக்காய் தக்காளி, அதிக எண்ணெயில்லாமல் செய்த காலி பிளவர் மசாலா போன்ற சாதுவானவற்றை உட்கொள்ளலாம். முக்கியமாக குடிக்கும் ஆர்வத்தில் அல்லது குடித்த போதையில் வழக்கமாக எடுக்கும் மருந்தை மறக்காதீர்கள். மறந்தால் நீங்கள் அடுத்த நாள் ஒருவேளை ஆஸ்பத்திரி படுக்கையில் விழிக்கலாம். இன்சுலின் எடுப்பவர்கள் பெக்குக்கு ஏற்றபடி இன்சுலின் மற்றும் உணவு கணக்கை கூட்டி குறைக்கலாம். எல்லாம் மிதமாகத் தான்.

மூன்றாவதாக, குடித்து இரண்டு மணிநேரம் கழித்து ரதத சர்க்கரையை பரிசோதிக்கலாம். நானூறை தாண்டி விட்டால் நள்ளிரவு என்றாலும் மருத்துவரை அழையுங்கள். இல்லாவிட்டால் முன்னர் சொன்னது போல் மருத்துவமனை படுக்கையில் வழக்கமான சினிமா வசனத்துடன் விழிப்பீர்கள்.

ஒரு மன திருப்திக்காக கொஞ்சம் குடித்து அதிகமாய் சலம்பலாம். எனக்கு கொஞ்சம் சாப்டாலே ஏறிடும் என்று ஒரு வசனம் சேர்த்துக் கொள்ளலாம். இத்தனையும் கொஞ்ச நாளில் பழகி விடும்.

ஆனால் ... குடிக்க ஆரம்பித்து அன்றைய கலாச்சார மனநிலையில் ஒன்றிய பின் இத்தனையும் நினைவில் வைத்திருப்பது எப்படி என்று தான் தெரியவில்லை!

Comments

Ashok D said…
oru largea? naalu large ulla ponna thaan... etho kudicha mathiri irukku :)

unmaiyil ithu ubayogamana pathivu..

(no taameel fonts)
நன்றி டி,ஆர் அஷோக்
Unknown said…
பகிர்வுக்கு நன்றி

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...