விஜய் டி.வி "நீயா நானா” நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று விருந்தினனாக பங்கெடுத்தேன். நான் பேசின பகுதியை கீழே காணலாம்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்
பொய் இல்லையென்றால் தொலைக்காட்சி சேனலை எல்லாம் இழுத்து மூடி விட வேண்டியதுதான் என்று சுஜாதா சொல்லியுள்ளது ஞாபகத்திற்கு வருகின்றது.
எது உண்மையோ?
நிகழ்ச்சி ஒரு controlled atmosphereஇல் ஓரளவு spontaneity உடன் நடக்கிறது. அந்தந்த சூழலில் அவர்களுக்கு தேவையான படி உரையாடலை வழிநடத்துகிறார்கள் என்பது உண்மை தான். ஒரு டி.வி விவாதத்தை அதன் போக்கில் விட முடியாதே! நம்மூரில் பலரையும் பேச விட்டால் டைனொசர் பற்றி கூட பத்து மணிநேரம் பேசுவார்கள்.