விஜய் டி.வி "நீயா நானா” நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று விருந்தினனாக பங்கெடுத்தேன். நான் பேசின பகுதியை கீழே காணலாம்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்
பொய் இல்லையென்றால் தொலைக்காட்சி சேனலை எல்லாம் இழுத்து மூடி விட வேண்டியதுதான் என்று சுஜாதா சொல்லியுள்ளது ஞாபகத்திற்கு வருகின்றது.
எது உண்மையோ?
நிகழ்ச்சி ஒரு controlled atmosphereஇல் ஓரளவு spontaneity உடன் நடக்கிறது. அந்தந்த சூழலில் அவர்களுக்கு தேவையான படி உரையாடலை வழிநடத்துகிறார்கள் என்பது உண்மை தான். ஒரு டி.வி விவாதத்தை அதன் போக்கில் விட முடியாதே! நம்மூரில் பலரையும் பேச விட்டால் டைனொசர் பற்றி கூட பத்து மணிநேரம் பேசுவார்கள்.