முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீராமல் பசித்த நாள்




இன்று முழுக்க
பசித்தபடியே இருக்கிறது
பசி நெருப்பில்
தசைகளும் எலும்புகளும் கொழுப்பும்
மெல்ல மெல்ல
வேகிறது

இன்று முழுக்க
எல்லாரிடமும் இனிமையாக பேசிக் கொண்டிருக்க
கரித்து கொட்டியவாறிருக்க
வருகிறது
வலிக்கும் இடங்களையும்
கிளர்ச்சியான பிரதேசங்களையும்
வருடியவாறு உள்ளேன்
அடுத்தவர் கவிதைகளில்
அவசியமற்றவை
என்று பென்சிலால் வெட்டித் தள்ளிய
வரிகளை மீண்டும் கண்டடைந்து
பொருத்துகிறேன்
இன்று முழுக்க
சொன்னவற்றை விட
விட்டுவிட்ட வார்த்தைகளில்
உத்தேசித்த பொருள் இருந்ததை
விசனிக்கிறேன்

நடந்ததை நினைக்க நினைக்க
மனம்
இன்னொரு பக்கம்
ஒரு ரப்பர் கொண்டு
என் நாளை அழித்து கொண்டு வருவதை
நினைக்க பதற்றமாகிறது
தொடர்ந்து நினைக்கிறேன்.

வீடு காற்றால் நிரம்பி
இருக்கிறது
சமையலறையில்
இன்று அதிகமாய் சமைத்த உணவு பண்டங்கள்
கலவையான சமையல் வாசம்
ஒரு நொதிக்கும் ஆவியை போல்
எழுந்து கொண்டிருக்கிறது
உணவுகள் என்னை
புறமொதுக்குகின்றன
பசிப்பதற்கும்
பசிக்காமல் இருப்பதற்கும் இடையிலான
ஆசுவாசம்
வெறும் கற்பனை என்று நினைத்து கொள்கிறேன்
ஒவ்வொரு உணவுப் பொருளும்
துக்கமாய் இருப்பதாய் தோன்றுவது
கூட
வெறும் கற்பனை தான்
இன்றைய கடும் கோடையில்
தொடர்ந்து தண்ணீர் குடிப்பது மட்டும்தானே
நியாயம் என்கிறான் நண்பன்
ஆனால் மூடி திறந்திட
உணவுகளும்
நானும்
வேர்த்திருக்கிறோம்
மிருதுவாகி
கெட்டிதட்டி போய்
அந்த ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மலையை
போல் அல்லாமல்
சலனித்தபடி
எதற்கோ காத்திருக்கிறோம்

இன்று முழுக்க பசிக்க கூடாது
என்று
ஒரு செடி தொட்டிக்கு பரிவாய் சொட்டு சொட்டாய்
இருட்டில் நீரூற்றுவது போல்
இரவில் உண்டு கொண்டு
படுக்கிறேன்
யாரோ தூங்காமல்
அடிக்கடி கவனித்தபடி இருக்கிறார்கள்
ரகசியமாய்

இன்று முழுக்க
பசியில் இருப்பது
இன்று முழுக்க
அழிவது ஆகாதா
என்று எண்ணி
வெளியே உற்று பார்க்கிறேன்
மரங்களும் புல் பூண்டும்
பறவைகளும் மிருகங்களும் பூச்சிகளும்
தெரியாத வெளியில்
மழையாக கொட்டுகிறது
என்னை அறியாமல்
கவனிக்கிறேன்
பசித்துக் கொண்டிருக்கும் இரவில்
தன்னந்தனியாக
வெற்றாக
முழுதாக
இருக்கும் உலகை

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
என்னை அறியாமல்
கவனிக்கிறேன்
பசித்துக் கொண்டிருக்கும் இரவில்
தன்னந்தனியாக
வெற்றாக
முழுதாக
இருக்கும் உலகை


........கவிதை கரு, நல்லா இருக்குதுங்க. வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...