முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீண்டும் ஒரு திருமண நாள் கவிதை




இவளை மணக்க கொடுத்து வைத்திருக்கிறேன்
பலரும் சொல்கிறார்கள்
நம்ப முடியவில்லை
சோதிடர் அன்றே சொன்னார்
வேண்டாமென்று
நம்ப முடியவில்லை
இது திருமணமில்லை
அவள் பச்சாதாபப்பட்டு என்னுடனும்
நான் அறிவிழந்து அவளுடனும்
இருக்கிறோம்
அதையும் தான்
நாம் பிரிவதற்கான காரணங்களின்
பட்டியல் தயாரிப்பவருக்கு மூச்சுவாங்குகிறது
இணைவதற்கு காரணம் தேடும் எனக்கு
ஒன்றுமே கிடைக்கவில்லை
காரணமின்மையின் பரிசுத்தம் தவிர

நாமாக ஒப்பந்தம் இடவில்லை என்பதால்
இதை மறுக்கவும்
நாமாக சேர்க்கவில்லை என்பதால்
குவிந்த பொருட்களை விட்டுவிடவும்
நாமாக எதையும் கட்டவில்லை என்பதால்
எந்த வீட்டை விட்டு வெளியேறவும்
நாமாக எதையும் மறுக்கவில்லை என்பதால்
அனைத்திற்கும் இசையவும்
தயாராக உள்ளோம்

நான்கு வருடங்கள்
ஆக மெதுவாகவும்
பெரும் வேகத்திலும்
சென்று கடந்ததும் கூட
ஒரு பந்தயத்தில் இல்லை
ஒரு பந்தயத்தை தொடர்கிறோம்
என்பதால் இருக்கலாம்

ஒவ்வொரு புது வீட்டிலும்
ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறோம்
ஒவ்வொரு வேலையிலும்
நண்பர்கள், வளர்ப்புபிராணி, பொம்மை, புத்தகம்
புதிதாய் வந்த போதும்
புதுவீடு வேறு மாதிரி ஆயிருக்கிறது
நாம் நம்மை மெல்ல மெல்ல மாற்றியபடி
இறுதியில் ஒத்திசைவு காணும்
சற்று முன்
மீண்டும் மீண்டும் மாறியபடி இருந்திருக்கிறோம்


கசப்பு மருந்துக்கு பிறகு ஒவ்வொரு முறையும்
இனிப்பு தரப்படுகிறது
அல்லது இனிப்பு முன்னால் என்றும் கொள்ளலாம்
மதுவருந்தும் நபர் போதைக்குள் நுழைவது போல்
அல்லது
போதையில் நுழைந்து மதுவருந்துவது போலவும்
எனலாம்
நமது மணம்
இதற்கு முன்னரோ இனி பிறகோ
எப்போதென்று கணிக்க முடியாத
மற்றொரு தருணத்திலோ
அநேகமாய் மணநாள் மறந்து போய் நினைவுகொள்ள முயல்கிற எந்த நாளிலும்
நிகழட்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...