முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீண்டும் ஒரு திருமண நாள் கவிதை




இவளை மணக்க கொடுத்து வைத்திருக்கிறேன்
பலரும் சொல்கிறார்கள்
நம்ப முடியவில்லை
சோதிடர் அன்றே சொன்னார்
வேண்டாமென்று
நம்ப முடியவில்லை
இது திருமணமில்லை
அவள் பச்சாதாபப்பட்டு என்னுடனும்
நான் அறிவிழந்து அவளுடனும்
இருக்கிறோம்
அதையும் தான்
நாம் பிரிவதற்கான காரணங்களின்
பட்டியல் தயாரிப்பவருக்கு மூச்சுவாங்குகிறது
இணைவதற்கு காரணம் தேடும் எனக்கு
ஒன்றுமே கிடைக்கவில்லை
காரணமின்மையின் பரிசுத்தம் தவிர

நாமாக ஒப்பந்தம் இடவில்லை என்பதால்
இதை மறுக்கவும்
நாமாக சேர்க்கவில்லை என்பதால்
குவிந்த பொருட்களை விட்டுவிடவும்
நாமாக எதையும் கட்டவில்லை என்பதால்
எந்த வீட்டை விட்டு வெளியேறவும்
நாமாக எதையும் மறுக்கவில்லை என்பதால்
அனைத்திற்கும் இசையவும்
தயாராக உள்ளோம்

நான்கு வருடங்கள்
ஆக மெதுவாகவும்
பெரும் வேகத்திலும்
சென்று கடந்ததும் கூட
ஒரு பந்தயத்தில் இல்லை
ஒரு பந்தயத்தை தொடர்கிறோம்
என்பதால் இருக்கலாம்

ஒவ்வொரு புது வீட்டிலும்
ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறோம்
ஒவ்வொரு வேலையிலும்
நண்பர்கள், வளர்ப்புபிராணி, பொம்மை, புத்தகம்
புதிதாய் வந்த போதும்
புதுவீடு வேறு மாதிரி ஆயிருக்கிறது
நாம் நம்மை மெல்ல மெல்ல மாற்றியபடி
இறுதியில் ஒத்திசைவு காணும்
சற்று முன்
மீண்டும் மீண்டும் மாறியபடி இருந்திருக்கிறோம்


கசப்பு மருந்துக்கு பிறகு ஒவ்வொரு முறையும்
இனிப்பு தரப்படுகிறது
அல்லது இனிப்பு முன்னால் என்றும் கொள்ளலாம்
மதுவருந்தும் நபர் போதைக்குள் நுழைவது போல்
அல்லது
போதையில் நுழைந்து மதுவருந்துவது போலவும்
எனலாம்
நமது மணம்
இதற்கு முன்னரோ இனி பிறகோ
எப்போதென்று கணிக்க முடியாத
மற்றொரு தருணத்திலோ
அநேகமாய் மணநாள் மறந்து போய் நினைவுகொள்ள முயல்கிற எந்த நாளிலும்
நிகழட்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.