Skip to main content

போனபார்ட்டின் பின்னடைவு - சார்லஸ் புக்காவஸ்கி







அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள்
அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில்
கதவருகே
இருந்தார்.
திறப்பதில் இருந்து மூடும் வரை
அவர் எப்போதுமே
அங்கே தான் இருந்து கொண்டிருப்பார்.
என்னை விட அதிகமாகவே
அங்கே அவர் இருந்தார்,
அது ஒன்றும்
சாதாரண விசயமல்ல.
அவர் யாரிடமும்
எப்போதும் பேசினதில்லை.
கோப்பை கோப்பையாய்
குழாய் பியரை குடித்து
அங்கே வெறுமனே இருப்பார்.
பாருக்கு நேர் குறுக்காய்
தனக்கு முன்னார் பார்ப்பார்,
ஆனால் என்றுமே
யாரையுமே அவர் பார்த்ததில்லை.

மற்றொரு விசயமும்
உள்ளது.

அவ்வப்போது
எழுந்து
தானியங்கு இசை பெட்டியிடம்
செல்வார்;
எப்போதுமே
ஒரே இசைத்தட்டை தான் ஓட விடுவார்:
“போனபார்ட்டின் பின்னடைவு
அந்த பாடலை
இரவு பகலாய்
அவர் ஓட விட்டார்.

அது அவரது பாட்டு,
சரிதான்.

குழாய் பியர்
தலைக்கு ஏறியதும்
அவர் எழுந்து
“போனபார்ட்டின் பின்னடைவை
ஆறு ஏழு முறைகள்
ஓட விடுவார்.

அவர் யார் என்றோ
எப்படி வாழ்கிறார் என்றோ
யாருக்கும் தெரியவில்லை.
தெருவுக்கு குறுக்காய்
ஒரு விடுதி அறையில்
தங்கி இருந்தார்.
தினமும்
பார் திறந்ததும்
அதன் முதல் வாடிக்கையாளர்
அவர்
என்பதை தவிர

நான் பார் பணியாளர்
கிளைடிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்
கேள், அவர்
அதை வைத்து
எங்களை எல்லாம் பைத்தியமாக அடிக்கிறார்
ஒரு கட்டத்தில்
எல்லா இசைத்தட்டுகளும்
சுழற்சி வரிசையில் வருகின்றன
ஆனால்
‘போனபார்ட்டின் பின்னடைவு
போவதில்லை
இதன் பொருள்
என்ன?
“அது அவரது பாடல்
கிளைட் சொன்னார்.
“உங்களுக்கு என்று
ஒரு பாடல் இல்லையா?

சரி, இன்று நான்
ஒரு மணி போல் உள்ளே வந்தேன்;
வழமையனவர்கள் எல்லாரும்
இருந்தார்கள்
ஆனால் பிரெட் அங்கு
இல்லை

எனக்கான மதுவுக்கு உத்தரவிட்டேன்
பிறகு சத்தமாக கேட்டேன்
“அட இந்த பிரெட்
எங்கே?
“பிரெட் இறந்து விட்டான்
கிளைட் சொன்னார்.

பாரின் இறுதி வரை
பார்வையிட்டேன்
திரைச்சீலைகள் ஊடே
சூரியன் இறங்குயது
ஆனால் கடைசி
முக்காலியி;
யாரும் இல்லை.

“என்னிடம் விளையாடுகிறாயா,
நான் சொன்னேன்
“பிரெட் கழிப்பறைக்கோ
எங்கேயோவாவது
சென்றிருப்பான்
“இன்று காலை
பிரெட் வரவில்லை கிளைட்
சொன்னார், “அதனால்
நான அவரது
ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தேன்
அங்கே அவர்
இருந்தார்
ஒரு சுருட்டு பெட்டியை
போல்
விறைத்து போய்

எல்லாரும் மிகவும்
அமைதியானார்கள்
எப்படியும்
அந்த மக்கள்
அதிகம்
பேசுபவர்கள் அல்ல.

“சரிதான், நான் சொன்னேன், “குறைந்தது
போனபார்ட்டின் பின்னடைவை
நாம் இனிமேல்
கேட்க வேண்டி இராது
யாருமே
எதுவும் சொல்லவில்லை.
“அந்த இசைத்தட்டு
இன்னும்
தானியங்கி இசைப்பெட்டியில் தான் உள்ளதா?
நான் கேட்டேன்.
“ஆமாம், கிளைட்
சொன்னார்.
“சரி, நான் சொன்னேன்,
“நான் அதை மேலும் ஒருமுறை
போடப் போகிறேன்
நான் எழுந்தேன்
“நிறுத்து
கிளைட் சொன்னார்.
அவர் பாரை சுற்றி வந்து
தானியங்கி இசைப்பெட்டியிடம்
சென்றார்.
அவர்
கையில்
ஒரு சிறு சாவி இருந்தது.

தானியங்கி இசைப்பெட்டியில்
சாவியை நுழைத்து
அதை
திறந்தார்.
உள்ளே கைவிட்டு
ஒரு இசைத்தட்டை
வெளியே
எடுத்தார்.

பிறகு அந்த
இசைத்தட்டை
தன் முட்டியில்
மோதி உடைத்தார்.
“அது அவரது
பாடல் கிளைட்
சொன்னார்.
பிறகு அவர்
தனையங்கி இசைப்பெட்டியை பூட்டினார்,
உடைந்த இசைத்தட்டை
பாருக்கு பின்புறம்
கொண்டு சென்று
குப்பையில் எறிந்தார்.

பாரின்
பெயர்
ஜுவல்ஸ்
அது
கெரன்ஷா மற்றும்
ஆடம்ஸில்
இருந்தது
இப்போது
அது
அங்கில்லை



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...