முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போனபார்ட்டின் பின்னடைவு - சார்லஸ் புக்காவஸ்கி







அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள்
அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில்
கதவருகே
இருந்தார்.
திறப்பதில் இருந்து மூடும் வரை
அவர் எப்போதுமே
அங்கே தான் இருந்து கொண்டிருப்பார்.
என்னை விட அதிகமாகவே
அங்கே அவர் இருந்தார்,
அது ஒன்றும்
சாதாரண விசயமல்ல.
அவர் யாரிடமும்
எப்போதும் பேசினதில்லை.
கோப்பை கோப்பையாய்
குழாய் பியரை குடித்து
அங்கே வெறுமனே இருப்பார்.
பாருக்கு நேர் குறுக்காய்
தனக்கு முன்னார் பார்ப்பார்,
ஆனால் என்றுமே
யாரையுமே அவர் பார்த்ததில்லை.

மற்றொரு விசயமும்
உள்ளது.

அவ்வப்போது
எழுந்து
தானியங்கு இசை பெட்டியிடம்
செல்வார்;
எப்போதுமே
ஒரே இசைத்தட்டை தான் ஓட விடுவார்:
“போனபார்ட்டின் பின்னடைவு
அந்த பாடலை
இரவு பகலாய்
அவர் ஓட விட்டார்.

அது அவரது பாட்டு,
சரிதான்.

குழாய் பியர்
தலைக்கு ஏறியதும்
அவர் எழுந்து
“போனபார்ட்டின் பின்னடைவை
ஆறு ஏழு முறைகள்
ஓட விடுவார்.

அவர் யார் என்றோ
எப்படி வாழ்கிறார் என்றோ
யாருக்கும் தெரியவில்லை.
தெருவுக்கு குறுக்காய்
ஒரு விடுதி அறையில்
தங்கி இருந்தார்.
தினமும்
பார் திறந்ததும்
அதன் முதல் வாடிக்கையாளர்
அவர்
என்பதை தவிர

நான் பார் பணியாளர்
கிளைடிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்
கேள், அவர்
அதை வைத்து
எங்களை எல்லாம் பைத்தியமாக அடிக்கிறார்
ஒரு கட்டத்தில்
எல்லா இசைத்தட்டுகளும்
சுழற்சி வரிசையில் வருகின்றன
ஆனால்
‘போனபார்ட்டின் பின்னடைவு
போவதில்லை
இதன் பொருள்
என்ன?
“அது அவரது பாடல்
கிளைட் சொன்னார்.
“உங்களுக்கு என்று
ஒரு பாடல் இல்லையா?

சரி, இன்று நான்
ஒரு மணி போல் உள்ளே வந்தேன்;
வழமையனவர்கள் எல்லாரும்
இருந்தார்கள்
ஆனால் பிரெட் அங்கு
இல்லை

எனக்கான மதுவுக்கு உத்தரவிட்டேன்
பிறகு சத்தமாக கேட்டேன்
“அட இந்த பிரெட்
எங்கே?
“பிரெட் இறந்து விட்டான்
கிளைட் சொன்னார்.

பாரின் இறுதி வரை
பார்வையிட்டேன்
திரைச்சீலைகள் ஊடே
சூரியன் இறங்குயது
ஆனால் கடைசி
முக்காலியி;
யாரும் இல்லை.

“என்னிடம் விளையாடுகிறாயா,
நான் சொன்னேன்
“பிரெட் கழிப்பறைக்கோ
எங்கேயோவாவது
சென்றிருப்பான்
“இன்று காலை
பிரெட் வரவில்லை கிளைட்
சொன்னார், “அதனால்
நான அவரது
ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தேன்
அங்கே அவர்
இருந்தார்
ஒரு சுருட்டு பெட்டியை
போல்
விறைத்து போய்

எல்லாரும் மிகவும்
அமைதியானார்கள்
எப்படியும்
அந்த மக்கள்
அதிகம்
பேசுபவர்கள் அல்ல.

“சரிதான், நான் சொன்னேன், “குறைந்தது
போனபார்ட்டின் பின்னடைவை
நாம் இனிமேல்
கேட்க வேண்டி இராது
யாருமே
எதுவும் சொல்லவில்லை.
“அந்த இசைத்தட்டு
இன்னும்
தானியங்கி இசைப்பெட்டியில் தான் உள்ளதா?
நான் கேட்டேன்.
“ஆமாம், கிளைட்
சொன்னார்.
“சரி, நான் சொன்னேன்,
“நான் அதை மேலும் ஒருமுறை
போடப் போகிறேன்
நான் எழுந்தேன்
“நிறுத்து
கிளைட் சொன்னார்.
அவர் பாரை சுற்றி வந்து
தானியங்கி இசைப்பெட்டியிடம்
சென்றார்.
அவர்
கையில்
ஒரு சிறு சாவி இருந்தது.

தானியங்கி இசைப்பெட்டியில்
சாவியை நுழைத்து
அதை
திறந்தார்.
உள்ளே கைவிட்டு
ஒரு இசைத்தட்டை
வெளியே
எடுத்தார்.

பிறகு அந்த
இசைத்தட்டை
தன் முட்டியில்
மோதி உடைத்தார்.
“அது அவரது
பாடல் கிளைட்
சொன்னார்.
பிறகு அவர்
தனையங்கி இசைப்பெட்டியை பூட்டினார்,
உடைந்த இசைத்தட்டை
பாருக்கு பின்புறம்
கொண்டு சென்று
குப்பையில் எறிந்தார்.

பாரின்
பெயர்
ஜுவல்ஸ்
அது
கெரன்ஷா மற்றும்
ஆடம்ஸில்
இருந்தது
இப்போது
அது
அங்கில்லை



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...