முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போனபார்ட்டின் பின்னடைவு - சார்லஸ் புக்காவஸ்கி







அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள்
அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில்
கதவருகே
இருந்தார்.
திறப்பதில் இருந்து மூடும் வரை
அவர் எப்போதுமே
அங்கே தான் இருந்து கொண்டிருப்பார்.
என்னை விட அதிகமாகவே
அங்கே அவர் இருந்தார்,
அது ஒன்றும்
சாதாரண விசயமல்ல.
அவர் யாரிடமும்
எப்போதும் பேசினதில்லை.
கோப்பை கோப்பையாய்
குழாய் பியரை குடித்து
அங்கே வெறுமனே இருப்பார்.
பாருக்கு நேர் குறுக்காய்
தனக்கு முன்னார் பார்ப்பார்,
ஆனால் என்றுமே
யாரையுமே அவர் பார்த்ததில்லை.

மற்றொரு விசயமும்
உள்ளது.

அவ்வப்போது
எழுந்து
தானியங்கு இசை பெட்டியிடம்
செல்வார்;
எப்போதுமே
ஒரே இசைத்தட்டை தான் ஓட விடுவார்:
“போனபார்ட்டின் பின்னடைவு
அந்த பாடலை
இரவு பகலாய்
அவர் ஓட விட்டார்.

அது அவரது பாட்டு,
சரிதான்.

குழாய் பியர்
தலைக்கு ஏறியதும்
அவர் எழுந்து
“போனபார்ட்டின் பின்னடைவை
ஆறு ஏழு முறைகள்
ஓட விடுவார்.

அவர் யார் என்றோ
எப்படி வாழ்கிறார் என்றோ
யாருக்கும் தெரியவில்லை.
தெருவுக்கு குறுக்காய்
ஒரு விடுதி அறையில்
தங்கி இருந்தார்.
தினமும்
பார் திறந்ததும்
அதன் முதல் வாடிக்கையாளர்
அவர்
என்பதை தவிர

நான் பார் பணியாளர்
கிளைடிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்
கேள், அவர்
அதை வைத்து
எங்களை எல்லாம் பைத்தியமாக அடிக்கிறார்
ஒரு கட்டத்தில்
எல்லா இசைத்தட்டுகளும்
சுழற்சி வரிசையில் வருகின்றன
ஆனால்
‘போனபார்ட்டின் பின்னடைவு
போவதில்லை
இதன் பொருள்
என்ன?
“அது அவரது பாடல்
கிளைட் சொன்னார்.
“உங்களுக்கு என்று
ஒரு பாடல் இல்லையா?

சரி, இன்று நான்
ஒரு மணி போல் உள்ளே வந்தேன்;
வழமையனவர்கள் எல்லாரும்
இருந்தார்கள்
ஆனால் பிரெட் அங்கு
இல்லை

எனக்கான மதுவுக்கு உத்தரவிட்டேன்
பிறகு சத்தமாக கேட்டேன்
“அட இந்த பிரெட்
எங்கே?
“பிரெட் இறந்து விட்டான்
கிளைட் சொன்னார்.

பாரின் இறுதி வரை
பார்வையிட்டேன்
திரைச்சீலைகள் ஊடே
சூரியன் இறங்குயது
ஆனால் கடைசி
முக்காலியி;
யாரும் இல்லை.

“என்னிடம் விளையாடுகிறாயா,
நான் சொன்னேன்
“பிரெட் கழிப்பறைக்கோ
எங்கேயோவாவது
சென்றிருப்பான்
“இன்று காலை
பிரெட் வரவில்லை கிளைட்
சொன்னார், “அதனால்
நான அவரது
ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தேன்
அங்கே அவர்
இருந்தார்
ஒரு சுருட்டு பெட்டியை
போல்
விறைத்து போய்

எல்லாரும் மிகவும்
அமைதியானார்கள்
எப்படியும்
அந்த மக்கள்
அதிகம்
பேசுபவர்கள் அல்ல.

“சரிதான், நான் சொன்னேன், “குறைந்தது
போனபார்ட்டின் பின்னடைவை
நாம் இனிமேல்
கேட்க வேண்டி இராது
யாருமே
எதுவும் சொல்லவில்லை.
“அந்த இசைத்தட்டு
இன்னும்
தானியங்கி இசைப்பெட்டியில் தான் உள்ளதா?
நான் கேட்டேன்.
“ஆமாம், கிளைட்
சொன்னார்.
“சரி, நான் சொன்னேன்,
“நான் அதை மேலும் ஒருமுறை
போடப் போகிறேன்
நான் எழுந்தேன்
“நிறுத்து
கிளைட் சொன்னார்.
அவர் பாரை சுற்றி வந்து
தானியங்கி இசைப்பெட்டியிடம்
சென்றார்.
அவர்
கையில்
ஒரு சிறு சாவி இருந்தது.

தானியங்கி இசைப்பெட்டியில்
சாவியை நுழைத்து
அதை
திறந்தார்.
உள்ளே கைவிட்டு
ஒரு இசைத்தட்டை
வெளியே
எடுத்தார்.

பிறகு அந்த
இசைத்தட்டை
தன் முட்டியில்
மோதி உடைத்தார்.
“அது அவரது
பாடல் கிளைட்
சொன்னார்.
பிறகு அவர்
தனையங்கி இசைப்பெட்டியை பூட்டினார்,
உடைந்த இசைத்தட்டை
பாருக்கு பின்புறம்
கொண்டு சென்று
குப்பையில் எறிந்தார்.

பாரின்
பெயர்
ஜுவல்ஸ்
அது
கெரன்ஷா மற்றும்
ஆடம்ஸில்
இருந்தது
இப்போது
அது
அங்கில்லை



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.