புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments
பாலாஜி சக்திவேல் முழுமையாக படித்து வந்து பேசினார். அவர் பேச்சாளர் அல்ல என்பதால் சின்ன இடறல்கள் இருக்கலாம். ஆனால் அவரது நேர்மையும் ஈடுபாடும் பாராட்டத்தக்கது.
சரளமாக சுவாரஸ்யமாக பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களை கால்களை விட்டு கைகளை பற்றி பேசுவார்கள்.