முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பரிசு



1
குணா வீட்டுக்குள் நுழைந்ததும் வெம்மையை உணர்ந்தான். திரைகளை விலக்கி காற்றை நுழைய விட்டான். உஷ்ணத்தில் திரைகள் விம்மின. அவன் கற்பனையை அது பலவிதங்களில் கிளர்த்தியது. குடியிருப்புக்கு வலமாய் ரயில் தண்டவாளம். அதை சைக்கிள், பைக், கால்கள் தயக்கமின்றி குறுக்கிட்டன. ஒரு குழந்தை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பா மன்றாடி வலுக்கட்டாயமாக தூக்க முயன்று இடுப்பில் வைத்ததில் அது பொத்தென்று விழுந்தது.  நழுவி குதித்ததோ? ரயில் சைரன். மக்கள் தண்டவாளத்தை சுற்றி கூடினர். குணா திரையை மூடினான்.

அன்று பூரா வீடு பற்றின நினைவுகள் அலுவலகத்தில் அவனை அலைகழித்தன. அவனை ஒரு நரம்பு இசைக்கருவி போல் கற்பனை உருவங்கள் தொடர்ந்து முறுக்கேற்றின. விரல் நுனியிலும் கிறுகிறுப்பு. இரண்டு முறை தனிமையான கழிப்பறைக்கு சென்று குறியை தளர்த்த முயன்று அநாகரிகமாய் பட திரும்பினான். ரம்யா வேறு இதைக் குறித்து அறிவுறுத்தி இருக்கிறாள். அவளை நினைத்ததும் பேண்டுக்குள் மீண்டும் அழுத்தியது.

உடல் கிளர்ச்சி கொள்ளும் போது அபாரமான தனிமை குடி கொள்கிறது. அலுவலகத்தில் கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின் கணினி ஓசைகள், கிசுகிசுப்பு, காலடிகளின் பரபரப்பு அவனுக்கு தனது இருப்பை விட இல்லாமையையே உணர்த்தின. போர்னோவின் கதையின் பக்கங்கள் போல் வீடு அவன் காலத்திலும், அதற்கு வெளியிலும் வளர்ந்தது.  ரம்யா நாளை வருவாள்.
முதன் முறையாய் சொந்தபந்தங்கள் இல்லாத வீட்டுக்குள் அவனுக்கென ஒரு அவள். பெற்றோர்களும் சொந்தங்களும் அவனுடன் அவ்வீட்டில் இருந்ததுண்டு. ஆனால் அந்நியமான பெண்மையின் அருகாமை போல் யாரும் பாதுகாப்பை தர முடியாது. ரம்யாவின் ஆகிருதி வீட்டில் நினைத்த இடங்களை எல்லாம் நிரப்பியது. வீட்டுடன் சேர்த்து அவளது அங்கங்களை குளோசப்பில் யோசிப்பத்தை தவிர்க்க முடியவில்லை. குளோசப் காட்சிகளுக்கு மூச்சுத் திணறடிக்கும் குணம் உண்டு. அந்த அலுவலகம் தான் எத்தனை சிறியது.

வீட்டுக்கு வந்ததும் பரபரப்பானான். வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். ஹால் சுவர் கண்ணாடியை மூட வேண்டும். சோபா உறைகளை மாற்ற வேண்டும். புது கார்ப்பெட் மாற்றி, புத்தக அடுக்குகளை சுத்தம் செய்து, துவைக்காத துணிகளை மூட்டை கட்டி பீரோவில் பூட்டி, குளிர்பதனப் பெட்டியில் பீருடன் விஸ்கி பாட்டில்களும் அடுக்கணும். அவளுக்கு விஸ்கி அவ்வளவாய் பழக்கமில்லை. நாளை பழக்கமாகலாம். சாப்பாடு ஆர்டர் செய்ய …. அவனுக்கு அப்போது சட்டென பூனை நினைவு வந்தது. இருந்த சுவடே கூடாது, விரட்ட வேண்டும். அப்புறம் பிங்க் வண்ணத்தில் படுக்கை விரிப்பு விரிக்க வேண்டும். மென்வெளிச்சத்தில் துலங்கும் ஆப்பிரிக்க ஜோடியின் அணைப்பு ஓவியத்தை எதிரிலே மாட்ட வேண்டும். அந்த மார்புக் கூர்மை பார்த்து அவளுக்கு பொறாமை வருமா? மூக்கு வழி சிரித்தான். படுக்கை அறை ரூம் பிரஷ்ணருக்கான வாசனையை கிளர்ச்சியூட்டக்கூடியதாக தேர்வு செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...