முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பரிசு



1
குணா வீட்டுக்குள் நுழைந்ததும் வெம்மையை உணர்ந்தான். திரைகளை விலக்கி காற்றை நுழைய விட்டான். உஷ்ணத்தில் திரைகள் விம்மின. அவன் கற்பனையை அது பலவிதங்களில் கிளர்த்தியது. குடியிருப்புக்கு வலமாய் ரயில் தண்டவாளம். அதை சைக்கிள், பைக், கால்கள் தயக்கமின்றி குறுக்கிட்டன. ஒரு குழந்தை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பா மன்றாடி வலுக்கட்டாயமாக தூக்க முயன்று இடுப்பில் வைத்ததில் அது பொத்தென்று விழுந்தது.  நழுவி குதித்ததோ? ரயில் சைரன். மக்கள் தண்டவாளத்தை சுற்றி கூடினர். குணா திரையை மூடினான்.

அன்று பூரா வீடு பற்றின நினைவுகள் அலுவலகத்தில் அவனை அலைகழித்தன. அவனை ஒரு நரம்பு இசைக்கருவி போல் கற்பனை உருவங்கள் தொடர்ந்து முறுக்கேற்றின. விரல் நுனியிலும் கிறுகிறுப்பு. இரண்டு முறை தனிமையான கழிப்பறைக்கு சென்று குறியை தளர்த்த முயன்று அநாகரிகமாய் பட திரும்பினான். ரம்யா வேறு இதைக் குறித்து அறிவுறுத்தி இருக்கிறாள். அவளை நினைத்ததும் பேண்டுக்குள் மீண்டும் அழுத்தியது.

உடல் கிளர்ச்சி கொள்ளும் போது அபாரமான தனிமை குடி கொள்கிறது. அலுவலகத்தில் கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின் கணினி ஓசைகள், கிசுகிசுப்பு, காலடிகளின் பரபரப்பு அவனுக்கு தனது இருப்பை விட இல்லாமையையே உணர்த்தின. போர்னோவின் கதையின் பக்கங்கள் போல் வீடு அவன் காலத்திலும், அதற்கு வெளியிலும் வளர்ந்தது.  ரம்யா நாளை வருவாள்.
முதன் முறையாய் சொந்தபந்தங்கள் இல்லாத வீட்டுக்குள் அவனுக்கென ஒரு அவள். பெற்றோர்களும் சொந்தங்களும் அவனுடன் அவ்வீட்டில் இருந்ததுண்டு. ஆனால் அந்நியமான பெண்மையின் அருகாமை போல் யாரும் பாதுகாப்பை தர முடியாது. ரம்யாவின் ஆகிருதி வீட்டில் நினைத்த இடங்களை எல்லாம் நிரப்பியது. வீட்டுடன் சேர்த்து அவளது அங்கங்களை குளோசப்பில் யோசிப்பத்தை தவிர்க்க முடியவில்லை. குளோசப் காட்சிகளுக்கு மூச்சுத் திணறடிக்கும் குணம் உண்டு. அந்த அலுவலகம் தான் எத்தனை சிறியது.

வீட்டுக்கு வந்ததும் பரபரப்பானான். வீட்டில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும். ஹால் சுவர் கண்ணாடியை மூட வேண்டும். சோபா உறைகளை மாற்ற வேண்டும். புது கார்ப்பெட் மாற்றி, புத்தக அடுக்குகளை சுத்தம் செய்து, துவைக்காத துணிகளை மூட்டை கட்டி பீரோவில் பூட்டி, குளிர்பதனப் பெட்டியில் பீருடன் விஸ்கி பாட்டில்களும் அடுக்கணும். அவளுக்கு விஸ்கி அவ்வளவாய் பழக்கமில்லை. நாளை பழக்கமாகலாம். சாப்பாடு ஆர்டர் செய்ய …. அவனுக்கு அப்போது சட்டென பூனை நினைவு வந்தது. இருந்த சுவடே கூடாது, விரட்ட வேண்டும். அப்புறம் பிங்க் வண்ணத்தில் படுக்கை விரிப்பு விரிக்க வேண்டும். மென்வெளிச்சத்தில் துலங்கும் ஆப்பிரிக்க ஜோடியின் அணைப்பு ஓவியத்தை எதிரிலே மாட்ட வேண்டும். அந்த மார்புக் கூர்மை பார்த்து அவளுக்கு பொறாமை வருமா? மூக்கு வழி சிரித்தான். படுக்கை அறை ரூம் பிரஷ்ணருக்கான வாசனையை கிளர்ச்சியூட்டக்கூடியதாக தேர்வு செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.