முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமணநாள் பரிசுகள்




திருமணநாள் பரிசுகள்
குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.
வருடங்கள் முன் பின் சென்று
தூசு படிந்து
நிறம் மங்கி வரும்
ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட
விளையாட்டுப் பொருட்களைப் போல்

இன்று மாலை
பழைய பரிசுகளுடன்
அமர்ந்திருக்கிறேன்.

மஞ்சளான மாலை
அழுகும் இலைகளின் சலசலப்புடன்
இரவில் வெடிக்கும் பூக்களின்
வாசனையையும்
கொண்டு வருகிறது.

மாடி ஜன்னலுக்கு வெளியே
நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால்
ஒரு சோர்வுற்ற சூரியன்
இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும்
தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல்
எதையாவது பற்றிக் கொள்ள
விழைகிறான்.

எதிர்பாராது
மழை பெய்ய துவங்குகிறது
தயாரற்ற மனிதர்கள்
கூரைகள் தேடி சிதறுகிறார்கள்.

கால் இடறி தடுமாறுகிறேன்
உனது பரிசுப் பொருட்கள்
கலந்து விடுகின்றன
எனதுடன்.

மீண்டும் மீண்டும்
அவற்றை
இரு பகுதியாய் பிரிக்க முயன்று
தோல்வியடைகிறேன்
பின் காலவரிசைப்படி
கலைத்துக் கலைத்து
அடுக்குகிறேன்.

மழை நிற்க வெகுநேரமாகிறது
வெப்பம் கிளம்பி
பின்
பனி பொழியும் போது
திகைத்துப் போய்
பரிசுப் பொருட்கள் மத்தியில்
தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல
அமர்ந்திருக்கிறேன்.

வாசலில்
மெல்ல தும்மியபடி
நுழைகிறாய்.

உன்னிடமிருந்து
பரிசுப் பொருளை வாங்கி
அருகில் வைத்து
உனக்கான புதுப் பரிசை
குவியலில் தேடி
தோற்று
வேறுவழியின்றி
கண்களில் மன்னிப்பை வைத்தபடி
அங்கு
ஆகப் பழசான பரிசு ஒன்றை
பொறுக்கி
நீட்டுகிறேன்
அதில் மிகச்சரியாய்
குறிக்கப்பட்டுள்ளது
இன்றைய தேதி...

கருத்துகள்

வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathan இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ்,

நிறைய கவிதைகளை நீங்கள் மொழிபெயர்த்ததன்(?) விளைவு அல்லது அபாயம் இக்கவிதையில் தெரிவதாய் தோன்றுகிறது எனக்கு. இலக்கணப் பிழைகள் கண்டிப்பாக கவிதையை உருக்குலையவே செய்கிறது. கவனம் தேவை என்றே சொல்ல தோன்றுகிறது. அடிக்கடி எழுத தேவையில்லை; அரிதான ஒன்றென்றாலும் கவிதை அற்புதமான ஒன்றாக‌ நிகழ வேண்டும்.
எனது பின்னூட்டத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் குறிப்பிட்டு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் வேறு எங்கும் பின்னூட்டங்கள் இட்டதுமில்லை.

- வேல்முருகன் ரெங்கநாதன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...