பன்னிரெண்டு
வருடங்களுக்கு முன் ஒருநாள் அவசரமாக நண்பர் முஸ்தபாவின் புத்தகக்கடை அரட்டையில்
இருந்து அவசரமாக துண்டித்து “படிக்கணும்” என்று
கிளம்ப முற்பட்ட போது கவிஞர் நட.சிவகுமார் “என்ன படிக்கணும்?” என்றார். இளங்கலை பாடத்திட்டத்தில் உள்ள ஒரு நூலின்
பெயரை சொன்னேன். அவர் “டேய் நாங்கெல்லாம் பாடபொஸ்தகம் படிச்சதே இல்ல. உன்னால்
எப்படி பாடத்துல உள்ளத படிக்க முடியுது?” என்று
வினவினார். நான் அவரிடம் படித்து உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை பெற வேண்டிய
கனவை சொன்னேன். அவர் நக்கலாக சிரித்து விட்டு திரும்பிக் கொண்டார். பிறகு
பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு நான் என் மாணவர்களிடம் முதல் மதிப்பெண்
பெறுவதனால் எந்த பயனுமில்லை என்ற உண்மையை விளக்கி வருகிறேன். முதல் ரேங்க்
வாங்கினவர்கள் எல்லாரும் உயர்பதவி பெறுவதில்லை. பணம், அதிகாரம், அந்தஸ்துக்கும்
மதிப்பெண்ணுக்கும் சம்மந்தமில்லை. பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களை
உசுப்பேற்றுவதற்காக படித்தால் முன்னேறலாம் என பொய் சொல்லுகிறார்கள். கல்லூரிக்கு
வெளியே செய்யும் வேலைகள், அது அரசுத் தேர்வுகளோ தனியார் நுழைவுத்தேர்வுகளோ, தாம்
முக்கியம். இவை எதுவும் இல்லாமல் கூட மிக நன்றாக வாழலாம். பள்ளியில் இருந்து
கல்லூரி வரை ஒழுங்காய் தேர்வாகி சான்றிதழோடு வெளியேறினால் போதும்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கருத்துகள்