முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேட்டை நாயும் காவல் நாயும்



கழிப்பறைக் கதவை
மூக்கால்
தள்ளித் திறந்து
பார்த்து விட்டுப் போகிறது
நாய்.
எப்போதும்
இந்த தன்னம்பிக்கை
என்னை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.

எவ்வளவு தான்
சமாதானப்படுத்தினாலும்
தன் கோபத்தை, எரிச்சலை
விட்டு அமைதியாக
மறுக்கிறது நாய்.
வருத்தப்படுகையில் கவனிக்கையில் யோசிக்கையில்
தோன்றும்
அதன் முகச்சுருக்கங்கள்
ஒவ்வொரு தடவை எண்ணும் போதும்
மாறுபடுகின்றன.

ஒரு அரசியல் விவாதத்தில் டி.வி ஒருங்கிணைப்பாளனைப் போல
தன் கோபத்தின் மீது ஆவேசத்தின் மீது தர்க்கத்தின் மீது
அபார கட்டுப்பாடுண்டு
அதற்கு
ஒரு பிரச்சனை என்பது
அதைத் தான் பிரச்சனை என்று
கருதும் வரையில் தான்.

கோபப்பட்டு கொந்தளிக்க துவங்கிய பின்
பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலா பக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது
அப்போது தான்
அதன் முகச்சுருக்கங்கள் ஒவ்வொன்றாய்
அதிகமாகின்றன.
பிறகு அது
களைத்து படுத்தபடி
தன் முகச்சுருக்கங்களைப் பற்றி
கவலைப்பட ஆரம்பிக்கிறது.

என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம் காண்பித்தேன்.
அவர் ஒரு இருட்டறையில் கிடத்தி
போர்வையை போர்த்தினதும்
உடனே கண்ணை மூடியது.
டாக்டர் சுட்டினார்,
“பாருங்கள் நன்றாக தூங்குகிறது”.
ஒரு சிறு சலனம்,
கண் விழித்து பாய எத்தனித்தது.
டி.வி விவாதத்தில் ஒருவர்
சற்று உணர்ச்சிவசப்பட்டு
குரலை உயர்த்தி விட்டார்
என அதற்கு
புரிய வைக்க முடியவில்லை.
முறுக்கப்பட்ட நாண் போல்
அதன் உடல் அதிர
வாயை மூடியவாறே உறுமிக் கொண்டிருந்தது.

நரம்புகளை அமைதிப்படுத்த
மருந்தூட்டி விட்டு
நாங்கள் முன்னறைக்கு வந்து டி.வி பார்த்தோம்.
நான்கு பேர் மாறி மாறி
குதறிக் கொண்டிருந்தார்கள்
அவர்களை “அப்படியே இருங்கள்” என்று
நிறுத்தி விட்டு “விளம்பர இடைவேளை” சொன்னார்கள்.
“காவல் நாய். அதனால் தான் எப்போதும் பதற்றம்”,
மருத்துவர் சொன்னார்.
நான் கேட்டேன்
“டாக்டர் காவல் நாய்க்கும் வேட்டை நாய்க்கும் என்ன வித்தியாசம்?”
“இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய்
அருகில் என்றால் காவல் நாய்”,
என்றார் அவர்.

டி.வி விவாதம் துவங்கியது
விட்ட இடத்தில் இருந்து.
இடது பக்கம் இருப்பவர்
வலது பக்கம் இருப்பவரை தாக்கினார்
ஆனால் வலது பக்கம் இருப்பவர்
இடதுபக்க ஆளை ஆதரித்தார்
ஒருங்கிணைப்பாளர்
எங்களைப் போல் அல்லாது
எந்த குழப்பமும் இன்றி இருந்தார்;
இன்னும் இன்னும்
எதுவரை போகும் என்று
அவர் முயன்று கொண்டிருந்தார்
ஒரு கொலைக்களத்தில் இருந்து அகல விரும்பாத கொலைகாரனைப் போல்.

மின்னும் கண்களுடன்
அப்போது
நாய்
மெல்லிய தடுமாற்றத்துடன்
இருட்டில் இருந்து வெளியேறி
வாசலை அடைந்தது.
எங்களை சில நொடிகள் பார்த்து விட்டு
சட்டென்று கண்களை மூடி
படுத்தது.
முகத்தில்
ஒரு சுருக்கம் கூட
இல்லை.
நிகழ்ச்சி முடிவுற்றது.
அடுத்த விவாதம்
ஆரம்பிக்கும் முன்னான இடைவேளை.
“எவ்வளவு அழகாக தூங்குகிறது பாருங்கள்”,
டாக்டர் சொன்னார்.
நான் ஆமோதித்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...