முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேட்டை நாயும் காவல் நாயும்



கழிப்பறைக் கதவை
மூக்கால்
தள்ளித் திறந்து
பார்த்து விட்டுப் போகிறது
நாய்.
எப்போதும்
இந்த தன்னம்பிக்கை
என்னை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.

எவ்வளவு தான்
சமாதானப்படுத்தினாலும்
தன் கோபத்தை, எரிச்சலை
விட்டு அமைதியாக
மறுக்கிறது நாய்.
வருத்தப்படுகையில் கவனிக்கையில் யோசிக்கையில்
தோன்றும்
அதன் முகச்சுருக்கங்கள்
ஒவ்வொரு தடவை எண்ணும் போதும்
மாறுபடுகின்றன.

ஒரு அரசியல் விவாதத்தில் டி.வி ஒருங்கிணைப்பாளனைப் போல
தன் கோபத்தின் மீது ஆவேசத்தின் மீது தர்க்கத்தின் மீது
அபார கட்டுப்பாடுண்டு
அதற்கு
ஒரு பிரச்சனை என்பது
அதைத் தான் பிரச்சனை என்று
கருதும் வரையில் தான்.

கோபப்பட்டு கொந்தளிக்க துவங்கிய பின்
பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலா பக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது
அப்போது தான்
அதன் முகச்சுருக்கங்கள் ஒவ்வொன்றாய்
அதிகமாகின்றன.
பிறகு அது
களைத்து படுத்தபடி
தன் முகச்சுருக்கங்களைப் பற்றி
கவலைப்பட ஆரம்பிக்கிறது.

என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம் காண்பித்தேன்.
அவர் ஒரு இருட்டறையில் கிடத்தி
போர்வையை போர்த்தினதும்
உடனே கண்ணை மூடியது.
டாக்டர் சுட்டினார்,
“பாருங்கள் நன்றாக தூங்குகிறது”.
ஒரு சிறு சலனம்,
கண் விழித்து பாய எத்தனித்தது.
டி.வி விவாதத்தில் ஒருவர்
சற்று உணர்ச்சிவசப்பட்டு
குரலை உயர்த்தி விட்டார்
என அதற்கு
புரிய வைக்க முடியவில்லை.
முறுக்கப்பட்ட நாண் போல்
அதன் உடல் அதிர
வாயை மூடியவாறே உறுமிக் கொண்டிருந்தது.

நரம்புகளை அமைதிப்படுத்த
மருந்தூட்டி விட்டு
நாங்கள் முன்னறைக்கு வந்து டி.வி பார்த்தோம்.
நான்கு பேர் மாறி மாறி
குதறிக் கொண்டிருந்தார்கள்
அவர்களை “அப்படியே இருங்கள்” என்று
நிறுத்தி விட்டு “விளம்பர இடைவேளை” சொன்னார்கள்.
“காவல் நாய். அதனால் தான் எப்போதும் பதற்றம்”,
மருத்துவர் சொன்னார்.
நான் கேட்டேன்
“டாக்டர் காவல் நாய்க்கும் வேட்டை நாய்க்கும் என்ன வித்தியாசம்?”
“இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய்
அருகில் என்றால் காவல் நாய்”,
என்றார் அவர்.

டி.வி விவாதம் துவங்கியது
விட்ட இடத்தில் இருந்து.
இடது பக்கம் இருப்பவர்
வலது பக்கம் இருப்பவரை தாக்கினார்
ஆனால் வலது பக்கம் இருப்பவர்
இடதுபக்க ஆளை ஆதரித்தார்
ஒருங்கிணைப்பாளர்
எங்களைப் போல் அல்லாது
எந்த குழப்பமும் இன்றி இருந்தார்;
இன்னும் இன்னும்
எதுவரை போகும் என்று
அவர் முயன்று கொண்டிருந்தார்
ஒரு கொலைக்களத்தில் இருந்து அகல விரும்பாத கொலைகாரனைப் போல்.

மின்னும் கண்களுடன்
அப்போது
நாய்
மெல்லிய தடுமாற்றத்துடன்
இருட்டில் இருந்து வெளியேறி
வாசலை அடைந்தது.
எங்களை சில நொடிகள் பார்த்து விட்டு
சட்டென்று கண்களை மூடி
படுத்தது.
முகத்தில்
ஒரு சுருக்கம் கூட
இல்லை.
நிகழ்ச்சி முடிவுற்றது.
அடுத்த விவாதம்
ஆரம்பிக்கும் முன்னான இடைவேளை.
“எவ்வளவு அழகாக தூங்குகிறது பாருங்கள்”,
டாக்டர் சொன்னார்.
நான் ஆமோதித்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.