முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்டு 1: ஆடுதளத்தின் விந்தை



இந்த டெஸ்டுக்கான ஆடுதளம் எவ்வளவோ சர்ச்சைகளை அதில் அணிகள் ஆடும் முன்னரே தோற்றுவித்தது. அதிகப்படியாக சுழலை ஆதரிக்கும், சீக்கிரம் நொறுங்கி ஆடுவதே சிரமமாகும் என்றெல்லாம் இங்கிலாந்து ஆதரவாளர்கள் பயந்தார்கள்.
ஏனென்றால் ஆடுதளம் சமீபமாக புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று. அதிகமாக மணலும் குறைவாக களிமண்ணும் போட்டு தளத்தை தயாரித்ததால் அது எளிதில் சுழலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக தயாரிக்கப்பட்டது என்பதால் ஆடுதளம் மிக மெத்தனமாகவும் இருந்தது. இதில் ஒரு சிக்கல் மட்டையாடுவது, விக்கெட் எடுப்பது இரண்டுமே சிரமம் என்பது.

இந்த ஆடுதளத்தில் சில புள்ளிகளில் பந்து பட்டால் மணல் பெயர பந்து எகிறி சுழலுகிறது. ஓவருக்கு ஒன்றிரண்டு முறை இது நிகழ்கிறது. அதாவதூ பந்து தொடர்ச்சியாக ஒரேவித சுழல் மற்றும் துள்ளலை கொண்டிருப்பதில்லை. அதனால் ஒரேயடியாக அடித்தாடுவதோ தடுத்தாடுவதே ஆபத்தானது. இந்தியாவின் சேவாக், காம்பிர், சச்சின், கோலி ஆகியோர் இப்படித்தான் முழுமையான தாக்கியாடும் அணுகுமுறையால் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்து மட்டையாடிய போது அவர்கள் முழுமையாக தடுத்தாடிய போதெல்லாம் ஆட்டமிழந்ததை பார்த்தோம். பீட்டர்ஸன், டுரோட், காம்ப்டன் ஆகியோர் போன்று. ஆனால் பெல் ஒரேயடியாக அடித்தாட பார்த்து ஆட்டமிழந்தார். ஒரு இடைத்தரமான மட்டையாட்டம் தான் உசிதம். இந்தியாவின் புஜாரா, இங்கிலாந்தின் குக் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

குக் இன்று மிக அழகாக ஆடினார். அவரது வலிமை வெட்டி ஆடும் ஷாட்கள். அவர் விரட்டும் நீளத்தில் வரும் பந்துகளை தவிர்த்து பின்னங்காலில் காத்திருந்தார். முன்னங்காலில் அவரது தடுப்பாட்டம் உறுதியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் அவரை முன்னங்காலில் விரட்ட வைத்து வெளியேற்றினார்கள். முன்னங்காலில் ஆடுவது குக்கின் பலவீனமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் அவர் அஷ்வினை அற்புதமாக முன்னங்காலில் கவர் பகுதியில் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டினார். அது ஒரு வலுவான செய்தியாக அமைந்தது. அதற்கு பின் முன்னங்காலில் அவருக்கு பொறி அமைக்க அஷ்வின் அதிகம் முயல்வில்லை. குக்கின் சிறப்பு என்னவென்றால் அவர் அடித்தாடுவது என்று முன்கூட்டி முடிவெடுத்து இயங்குவதில்லை. பெரும்பாலான பந்துகளுக்கு மதிப்பதிளித்து ஆடி தேவையான போது மட்டுமே நல்ல நீள, முழுநீள பந்துகளை தாக்குகிறார். அதுவும் வீச்சாளர்களை குறைநீளத்துக்கு வீச தூண்டும் விதம் மட்டுமே இதை உத்தியாக பயன்படுத்துகிறார்.


ஒரு உதாரணம் பார்ப்போம். ஓஜ்ஜா முழுநீளத்தில் பந்தை உள்ளே கொண்டு வந்து அவரை எல்.பி.டபுள்யு ஆக்கப் பார்த்தார். அதைத் தவிர்ப்பதற்காக குக் மீண்டும் மீண்டும் அவரை ஸ்வீப் செய்து நான்கு அடித்தார். ஓஜ்ஜா ஆப் குச்சிக்கு வெளியே போட்டால் அவர் வெட்டி ஆடினார்.

ஓஜ்ஜாவுக்கு உள்ள பிரச்சனை ஆடுதளம் மெத்தனமாக உள்ளதே. அதனால் மட்டையாளர்கள் பந்து எகிறாது என்ற நம்பிக்கையில் ஸ்வீப் செய்யலாம். பன்னங்காலில் காத்திருந்து வெட்டலாம். அந்தளவுக்கு நேரம் உள்ளது. மேலும் எல்லா பந்துகளை இத்தளத்தில் சுழல்வதும் இல்லை. வேகவீச்சாளர்களும் வழமையான ஸ்விங்கோ ரிவர்ஸ் ஸ்விங்கோ கிடையாது. ஆனாலும் நல்ல சுழலர்கள் இருவர் இருப்பதாலும் இந்தியர்கள் தன்னம்பிக்கையாக சுழலை மட்டையாடுவார்கள் என்பதாலும் இந்த முதல் டெஸ்டை இதுவரை இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

இந்த ஆடுதளம் மட்டையாளம், வீச்சாளர் இருவரையும் காத்திருந்து ஆட நிர்பந்திக்கிறது. நாளை யார் அதிக பொறுமையுடன் இருக்கிறார்களோ அவர்கள் மேலெழுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மின்வெட்டு காரணமாக பார்க்க முடியவில்லை... விவரங்களுக்கு நன்றி... தொடர்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.