முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்டு 1: ஆடுதளத்தின் விந்தை



இந்த டெஸ்டுக்கான ஆடுதளம் எவ்வளவோ சர்ச்சைகளை அதில் அணிகள் ஆடும் முன்னரே தோற்றுவித்தது. அதிகப்படியாக சுழலை ஆதரிக்கும், சீக்கிரம் நொறுங்கி ஆடுவதே சிரமமாகும் என்றெல்லாம் இங்கிலாந்து ஆதரவாளர்கள் பயந்தார்கள்.
ஏனென்றால் ஆடுதளம் சமீபமாக புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று. அதிகமாக மணலும் குறைவாக களிமண்ணும் போட்டு தளத்தை தயாரித்ததால் அது எளிதில் சுழலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக தயாரிக்கப்பட்டது என்பதால் ஆடுதளம் மிக மெத்தனமாகவும் இருந்தது. இதில் ஒரு சிக்கல் மட்டையாடுவது, விக்கெட் எடுப்பது இரண்டுமே சிரமம் என்பது.

இந்த ஆடுதளத்தில் சில புள்ளிகளில் பந்து பட்டால் மணல் பெயர பந்து எகிறி சுழலுகிறது. ஓவருக்கு ஒன்றிரண்டு முறை இது நிகழ்கிறது. அதாவதூ பந்து தொடர்ச்சியாக ஒரேவித சுழல் மற்றும் துள்ளலை கொண்டிருப்பதில்லை. அதனால் ஒரேயடியாக அடித்தாடுவதோ தடுத்தாடுவதே ஆபத்தானது. இந்தியாவின் சேவாக், காம்பிர், சச்சின், கோலி ஆகியோர் இப்படித்தான் முழுமையான தாக்கியாடும் அணுகுமுறையால் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்து மட்டையாடிய போது அவர்கள் முழுமையாக தடுத்தாடிய போதெல்லாம் ஆட்டமிழந்ததை பார்த்தோம். பீட்டர்ஸன், டுரோட், காம்ப்டன் ஆகியோர் போன்று. ஆனால் பெல் ஒரேயடியாக அடித்தாட பார்த்து ஆட்டமிழந்தார். ஒரு இடைத்தரமான மட்டையாட்டம் தான் உசிதம். இந்தியாவின் புஜாரா, இங்கிலாந்தின் குக் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

குக் இன்று மிக அழகாக ஆடினார். அவரது வலிமை வெட்டி ஆடும் ஷாட்கள். அவர் விரட்டும் நீளத்தில் வரும் பந்துகளை தவிர்த்து பின்னங்காலில் காத்திருந்தார். முன்னங்காலில் அவரது தடுப்பாட்டம் உறுதியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் அவரை முன்னங்காலில் விரட்ட வைத்து வெளியேற்றினார்கள். முன்னங்காலில் ஆடுவது குக்கின் பலவீனமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் அவர் அஷ்வினை அற்புதமாக முன்னங்காலில் கவர் பகுதியில் நான்கு ஓட்டங்களுக்கு விரட்டினார். அது ஒரு வலுவான செய்தியாக அமைந்தது. அதற்கு பின் முன்னங்காலில் அவருக்கு பொறி அமைக்க அஷ்வின் அதிகம் முயல்வில்லை. குக்கின் சிறப்பு என்னவென்றால் அவர் அடித்தாடுவது என்று முன்கூட்டி முடிவெடுத்து இயங்குவதில்லை. பெரும்பாலான பந்துகளுக்கு மதிப்பதிளித்து ஆடி தேவையான போது மட்டுமே நல்ல நீள, முழுநீள பந்துகளை தாக்குகிறார். அதுவும் வீச்சாளர்களை குறைநீளத்துக்கு வீச தூண்டும் விதம் மட்டுமே இதை உத்தியாக பயன்படுத்துகிறார்.


ஒரு உதாரணம் பார்ப்போம். ஓஜ்ஜா முழுநீளத்தில் பந்தை உள்ளே கொண்டு வந்து அவரை எல்.பி.டபுள்யு ஆக்கப் பார்த்தார். அதைத் தவிர்ப்பதற்காக குக் மீண்டும் மீண்டும் அவரை ஸ்வீப் செய்து நான்கு அடித்தார். ஓஜ்ஜா ஆப் குச்சிக்கு வெளியே போட்டால் அவர் வெட்டி ஆடினார்.

ஓஜ்ஜாவுக்கு உள்ள பிரச்சனை ஆடுதளம் மெத்தனமாக உள்ளதே. அதனால் மட்டையாளர்கள் பந்து எகிறாது என்ற நம்பிக்கையில் ஸ்வீப் செய்யலாம். பன்னங்காலில் காத்திருந்து வெட்டலாம். அந்தளவுக்கு நேரம் உள்ளது. மேலும் எல்லா பந்துகளை இத்தளத்தில் சுழல்வதும் இல்லை. வேகவீச்சாளர்களும் வழமையான ஸ்விங்கோ ரிவர்ஸ் ஸ்விங்கோ கிடையாது. ஆனாலும் நல்ல சுழலர்கள் இருவர் இருப்பதாலும் இந்தியர்கள் தன்னம்பிக்கையாக சுழலை மட்டையாடுவார்கள் என்பதாலும் இந்த முதல் டெஸ்டை இதுவரை இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

இந்த ஆடுதளம் மட்டையாளம், வீச்சாளர் இருவரையும் காத்திருந்து ஆட நிர்பந்திக்கிறது. நாளை யார் அதிக பொறுமையுடன் இருக்கிறார்களோ அவர்கள் மேலெழுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மின்வெட்டு காரணமாக பார்க்க முடியவில்லை... விவரங்களுக்கு நன்றி... தொடர்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...