முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூட்டங்களை நிகழ்ச்சிகளை எப்படி ஜனநாயகபூர்வமாக்குவது?



இப்போது இலக்கிய பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் அரங்குகள் கட்டாய வதை முகாம்கள் போல இருக்கின்றன. பிடிக்கவில்லை என்றால் எழுந்து வீட்டுக்குத் தான் போக  வேண்டும். இவ்வளவு தூரம் வந்து விட்டு என்ற சலிப்பில் பலரும் அப்படியே அமர்ந்து விடுகிறார்கள்.


மூடப்பட்ட அரங்குகள் சிறைக்கூடங்கள் போல் தோன்றுகின்றன. எனக்கு பல சமயங்களில் உள்ளே போனதும் மாட்டிக் கொண்டு விட்ட உணர்வு தோன்றும். மனிதனை தொடர்ந்து மணிக்கணக்காக ஓரிடத்தில் அமர வைப்பது ஒரு சர்வாதிகார நடவடிக்கை தானே!

இதை ஒட்டி எனக்கு சில கோரிக்கைகள் உள்ளன. அவை கீழே:


  •  நம்மூர் இலக்கிய கூட்டங்கள், நாடகங்களை ஒரு பெரிய திறந்த வெளியில் நடத்த வேண்டும். 

  • ஓரிடத்தில் கூட்டம் நடக்க பக்கத்தில் பார், புட் கோர்ட், நீச்சல் குளம், லவுஞ்ச், WiFi தொடர்பு எல்லாம் இருக்க வேண்டும். 

  • கூட சின்னதாய் ஒரு தியான அறையும் வைக்கலாம். அங்கு எந்த சத்தமும் வராது. 

  • பார்வையாளர்கள் விருப்பப்படி அமர்வதும் எழுந்து போய் வேறு வேலை பார்ப்பதுமாக இருக்கலாம். 

  • கூட்டங்கள் சலிப்பாகும் போது, மூச்சு முட்டும் போது, அல்லது நமக்கே பேசும் ஆசை வரும் போது ஒரு வெளிப்பாடாக இது அமையும். 
  • கூட்டங்களில் மொக்கையானவர்களை முதலிலும் சிறந்த பேச்சாளர்களையும் கடைசியிலும் பேச வைக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் தந்திரத்தை இதன் மூலம் ஒருங்கிணைக்கலாம்.


சில எச்சரிக்கைகள்:


  • குடிப்பவர்களுக்கு நீச்சல் குளத்தில் அனுமதி இல்லை. 

  • கூட்டம் நடக்கும் ஹாலுக்குள்ளும் ஓரளவுக்கு மேல் குடித்தவர்களுக்கு இடம் இல்லை.

  • லவுஞ்சில் புகைப்பவர்களுக்கு தனி இடம்.

  • வெளியே பேசும் இரைச்சல் கூட்டம் நடக்கும் ஹாலில் கேட்காதபடி அமைப்பு வேண்டும்.

  • கண்டிப்பாக உள்ளே கூட்டம் பிடிக்காதவர்கள் வெளியே தனியே ஒரு கூட்டம் போட்டு “அன்புள்ள மதிப்புற்குரிய” என்று பேச்சு நிகழ்த்தக் கூடாது.

  • நீச்சல் குளத்தில் இருந்து சொட்ட சொட்ட கூட்டத்துக்குள் நுழையக் கூடாது. அதே போன்று சாப்பாடு, சரக்கையும் கொண்டு போகக் கூடாது.

  • கூட்டத்தில் பேச இருப்பவர்களுக்கு குடிக்கவோ நீந்தவோ உரிமை இல்லை.

  • கூட்டத்தை நேரலையாக டிவியில் வெளியே காட்டக் கூடாது.


இது ஜனநாயக பூர்வமாகவும் இருக்கும். வசதி உள்ள இடம் கிடைக்காதவர்கள் கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் நடத்தலாம். லவுஞ்ச், நீச்சல் குளம், புட் கோர்ட் எல்லாம் தேவை இல்லை.


கருத்துகள்

சர்வோத்தமன் சடகோபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன், சமீபத்தில் எங்காவது சென்று மாட்டிக்கொண்டீர்களா?
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னை வந்த பிறகு தொடர்ந்து இதே போல் கசப்பான அனுபவங்கள் தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...