முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழகியசிங்கரின் அப்பாவும் புத்தகங்களும்



இந்த மாத அமிர்தாவில் அழகிய சிங்கர் புத்தகங்கள் வாங்கி சேர்க்கும் பழக்கம் பற்றியும் அது சம்மந்தமாக வரும் தொந்தரவுகள் பற்றியும் சுருக்கென்ற நகைச்சுவை மிக்க பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதில் என்னை கவர்ந்தவை:


அழகிய சிங்கரின் புத்தக அடுக்குகளை பார்க்கும் போதெல்லாம் அவரது அப்பா “நீ இவ்வளவு புத்தகங்களையும் படித்து முடிக்க எத்தகை சகாப்தங்கள் ஆகும்?” என்று கிண்டலடிக்கிறார். தொடர்ந்து புத்தகங்கள் வாங்கியே தன் மகன் போண்டியாகிப் போனதாகவும் வருத்தப்படுகிறார். இதில் அபத்தம் என்னவென்றால் அழகிய சிங்கருக்கு 60 வயது. அவர் அப்பாவுக்கு  வயது 90. இந்த வயதிலும் போய் என்னை எல்.கெ.ஜி பையன் போல கண்டிப்பதா என அழுகிறார் சிங்கர்.

அழகிய சிங்கரின் நண்பர் ஒருவருக்கு ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் அவர் வீட்டுக்கு வந்தாலும் இரண்டு புத்தகங்களையாவது வாங்கிக் கொண்டு போய் விடுகிறார். இலக்கிய நட்பின் விதிப்படி அது திரும்ப வராது. இதைத் தவிர்க்க சிங்கர் அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்து சந்திப்பதாய் சொல்லும் போது புத்தக அறையை பூட்டி வைத்து விட்டு வேறு அறையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். நண்பர்: “ஏன் இங்கே இருக்கிறாய்? வழக்கமாய் அந்த புத்தக அறையில் தானே இருப்பாய்?” சிங்கர்: “அந்த அறையின் சாவி தொலைந்து போ விட்டது”. அப்போதிருக்கும் அறையில் ஜெ.கெயின் சில உரைகளைக் கொண்ட ஆடியோ கேசட்டுகள் இருக்கின்றன. நண்பர் புத்தகம் கிடைக்காவிட்டால் இருக்கட்டும் என அவற்றில் இரண்டை எடுத்துக் கொண்டு போய் விடுகிறாய். இறுதியில் அழகிய சிங்கர் இப்போதைய காலத்தில் இப்படி புத்தக அபேஸ் பண்ணுவதற்கு கூட யாரும் தன்னை வந்து பார்ப்பதில்லையே என விசனிக்கிறார்.

இத்துடன் புத்தகம் சேமிப்பவர்கள், எழுதுபவர்களுக்கு உள்ள சங்கடங்கள், அவமானங்கள், அவலம் என துயரம் இழையோடு அங்கதத்துடன் பேசிப் போகிறார். எஸ்.ரா முன்பு இதுபோல் புத்தகம் வாங்குவது பற்றி தன் இணையதளத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. புத்தகம் ஒன்று வாங்கி சேமிக்கும் போது நம்முடன் அந்நூல் இருக்கும் கிளர்ச்சியே ஒரு பெருமிதத்தை தரும் என்கிறார் எஸ்.ரா. புத்தகம் என்பது வாசிக்க மட்டுமே அல்ல. அது நம் வாழ்க்கைத்தரத்தை உளவியல் ரீதியாக ஒரு ஏத்து ஏத்துகிறது. அழகிய சிங்கரும் தான் வாங்கிக் குவித்த நூல்களில் பலவற்றை படித்ததே இல்லை, ஆனாலும் அவை தனக்கு முக்கியம் என்கிறார்.

அழகிய கட்டுரை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...