முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழகியசிங்கரின் அப்பாவும் புத்தகங்களும்



இந்த மாத அமிர்தாவில் அழகிய சிங்கர் புத்தகங்கள் வாங்கி சேர்க்கும் பழக்கம் பற்றியும் அது சம்மந்தமாக வரும் தொந்தரவுகள் பற்றியும் சுருக்கென்ற நகைச்சுவை மிக்க பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதில் என்னை கவர்ந்தவை:


அழகிய சிங்கரின் புத்தக அடுக்குகளை பார்க்கும் போதெல்லாம் அவரது அப்பா “நீ இவ்வளவு புத்தகங்களையும் படித்து முடிக்க எத்தகை சகாப்தங்கள் ஆகும்?” என்று கிண்டலடிக்கிறார். தொடர்ந்து புத்தகங்கள் வாங்கியே தன் மகன் போண்டியாகிப் போனதாகவும் வருத்தப்படுகிறார். இதில் அபத்தம் என்னவென்றால் அழகிய சிங்கருக்கு 60 வயது. அவர் அப்பாவுக்கு  வயது 90. இந்த வயதிலும் போய் என்னை எல்.கெ.ஜி பையன் போல கண்டிப்பதா என அழுகிறார் சிங்கர்.

அழகிய சிங்கரின் நண்பர் ஒருவருக்கு ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் அவர் வீட்டுக்கு வந்தாலும் இரண்டு புத்தகங்களையாவது வாங்கிக் கொண்டு போய் விடுகிறார். இலக்கிய நட்பின் விதிப்படி அது திரும்ப வராது. இதைத் தவிர்க்க சிங்கர் அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்து சந்திப்பதாய் சொல்லும் போது புத்தக அறையை பூட்டி வைத்து விட்டு வேறு அறையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். நண்பர்: “ஏன் இங்கே இருக்கிறாய்? வழக்கமாய் அந்த புத்தக அறையில் தானே இருப்பாய்?” சிங்கர்: “அந்த அறையின் சாவி தொலைந்து போ விட்டது”. அப்போதிருக்கும் அறையில் ஜெ.கெயின் சில உரைகளைக் கொண்ட ஆடியோ கேசட்டுகள் இருக்கின்றன. நண்பர் புத்தகம் கிடைக்காவிட்டால் இருக்கட்டும் என அவற்றில் இரண்டை எடுத்துக் கொண்டு போய் விடுகிறாய். இறுதியில் அழகிய சிங்கர் இப்போதைய காலத்தில் இப்படி புத்தக அபேஸ் பண்ணுவதற்கு கூட யாரும் தன்னை வந்து பார்ப்பதில்லையே என விசனிக்கிறார்.

இத்துடன் புத்தகம் சேமிப்பவர்கள், எழுதுபவர்களுக்கு உள்ள சங்கடங்கள், அவமானங்கள், அவலம் என துயரம் இழையோடு அங்கதத்துடன் பேசிப் போகிறார். எஸ்.ரா முன்பு இதுபோல் புத்தகம் வாங்குவது பற்றி தன் இணையதளத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. புத்தகம் ஒன்று வாங்கி சேமிக்கும் போது நம்முடன் அந்நூல் இருக்கும் கிளர்ச்சியே ஒரு பெருமிதத்தை தரும் என்கிறார் எஸ்.ரா. புத்தகம் என்பது வாசிக்க மட்டுமே அல்ல. அது நம் வாழ்க்கைத்தரத்தை உளவியல் ரீதியாக ஒரு ஏத்து ஏத்துகிறது. அழகிய சிங்கரும் தான் வாங்கிக் குவித்த நூல்களில் பலவற்றை படித்ததே இல்லை, ஆனாலும் அவை தனக்கு முக்கியம் என்கிறார்.

அழகிய கட்டுரை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.