முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசுக்கொலை காணொளி: மனிதர்கள் சாகும் போதும்…




தற்போது பரபரப்பாக பரவி வரும் கொடூர காணொளி ஒன்று கசாப்புக்காக பசுக்களை தலையில் சுத்தியால் அடித்து கொல்லுவதைக் காட்டுகிறது. நெஞ்சை பதற வைக்கும் காட்சி. பசுக்கள் எதிர்ப்புணர்வற்று திமிறாமல் காட்டிக் கொடுக்கின்றன. அதைப் பார்க்க ஒரு குழந்தையை மயங்க வைத்து நெரித்துக் கொல்லுவதற்கு இணையாக உள்ளது. ஆனால் நெஞ்சை உறுதியாக்கிக் கொண்டு பார்த்து விடுமாறு நண்பர்களைக் கேட்கிறேன்.

இது பசுவதைக்கு எதிரான காணொளி அல்ல. மேற்கத்திய நாடுகளில் மாட்டுக்கறி அதிகமாக புசிக்கப்படுவதால் இதைவிட எண்ணிக்கை அதிகமான பசுமாடுகள் தொழிற்சாலையில் எந்திரங்கள் மூலம் சில நொடிகளில் அடித்து வீழ்த்தப்பட்டு எந்திரம் மூலமே தோலுரித்து துண்டு துண்டாக்கப்படுகின்றன. இங்கு நம் ஆட்கள் முரட்டுத்தனமாக நேர்த்தியற்று சின்ன சுத்தி கொண்டு அதைப் பண்ணுகிறார்கள். அது தான் வித்தியாசம்.
எனக்கு இதைப் பார்க்கையில் குற்றவுணர்வு ஏதும் எழவில்லை. நான் இன்னும் கூட தயங்காது மாட்டுக்கறி உண்பேன். ஏனென்றால் இந்த உலகத்து ஜீவராசிகளை என் சுயகட்டுப்பாட்டால் வலியில் இருந்து வதையில் இருந்து காப்பாற்றிட முடியும் என நான் கற்பனாவாத கிளர்ச்சி நிலைக்கு போக விரும்பவில்லை. காந்தியைப் போன்றவர்கள் செய்த தவறை நானும் செய்ய விரும்பவில்லை. உலகம் பிரம்மாண்டமானது, சிக்கலானது. இங்கு இதெல்லாம் நடந்தவாறு தான் இருக்கும்.
நான் இதனை நமது அண்டை நாடுகளில் நடந்து வரும் போரின், இனச்சுத்தீகரிப்பின் பெயரிலான மனிதக் கொலைகள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் நடத்தும் கலவரக் கொலைகள், மலம் அள்ள நிர்பந்திக்கப்படும் மக்களின் அவலம், சாதி ஒடுக்குமுறை, பெண்களின் மீதான வன்முறை, குடும்பத்தில் இருந்து வேலையிடம் மற்றும் அரசியல் அதிகார மட்டம் வரையிலான ஒருவரின் வளர்ச்சிக்காக இன்னொருவரை தயையின்றி பலிகொடுக்கும் நடைமுறை ஆகியற்றோடு பொருத்தித் தான் பார்க்க விரும்புவேன். நாம் தொடர்ந்து மிகப்பெரிய தீமைகளின், கொடூரங்களின், சுரண்டல்களின், வெறுப்பின் இடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காணொளி அதன் ஒரு சிறுபகுதி. ஒரு ஆதாரம்.
தலையில் அடித்துக் கொல்லப்படும் ஒவ்வொரு பசுவும் எனக்கு ஒரு தனி மனிதன் தான். நாம் இந்த கொடுமைகளின் மத்தியில் கண்ணை மூடிக் கொண்டு வாழ்ந்தபடி இருக்கிறோம். அடிக்கடி கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டு இரவெல்லாம் தூக்கம் வராமல் அவதிப்படுகிறோம்.
இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கடந்த பத்து வருடங்களில் அமெரிக்க, சிங்களப்படையினரால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான மனித உயிர்களின் காணொளியையும் யுடியூபில் பார்த்து எதிர்வினை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போகிறது போகட்டும் ஒரு பசு தானே என்றிருந்து விட வேண்டும். மனிதர்கள் சாகும் போதும் அப்படித் தானே இருந்தோம்!

மேலும் படிக்கவும் பார்க்கவும்:

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
1. வலிக்காமல் கொல்லும் இயந்திரம் மூலம் மாடுகளை கொல்ல வைக்கலாமே...

2. இவர்கள் மனம் மறத்துப் போய் விட்டது...ஒன்றுமே செய்ய முடியாது...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...