முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கிறித்துவர் படம் பார்க்கிறார்




குமரி மாவட்ட கிறுத்துவர்கள் பொதுவாக திரையரங்குக்கு குடும்பமாக போக மாட்டார்கள். வாலிபர்கள் ஒளிந்து பதுங்கி ஏ படம் பார்ப்பது போல் சினிமாவுக்கு போவார்கள். வீட்டில் டி.வியில் அல்லது திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

திருநெல்வேலி கிறித்துவர்கள் இன்னும் கட்டுப்பெட்டியாம். என்னுடைய நண்பர் அப்படி ஒரு ஆச்சார கிறித்துவப் பெண்ணை காதலித்து மணந்தார். அப்பெண் தன் வாழ்நாளில் படமே பார்த்தது இல்லை. அவரை முதன்முதலாக நண்பர் திரையரங்குக்கு அழைத்துப் போனார். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று மனைவி ஜெர்க்காகி கணவனிடம் “எனக்கு படமே புரியவில்லை” என புகார் செய்தார். அவர் விசாரிக்க மனைவி பிளேஷ் பேக் காட்சியை குறிப்பிட்டு “ஏன் திடீரென்று படம் பின்னால் போகிறது, எனக்கு குழப்பமாய் இருக்கிறது” என்றார். நண்பர் எவ்வளவு விளக்கியும் அவருக்கு பிளேஷ் பேக் என்கிற உத்தி புரியவில்லை. அத்தோடு அவர்கள் சேர்ந்து படம் பார்க்க போவதும் நின்று போனது.
இதில் எனக்கு ரெண்டு விசித்திரங்கள் பட்டன. ஒன்று தமிழகம் சினிமாவை வழிபடும் மாநிலம் எனப்படுகிறது. ஆனால் இங்கு பெரிதும் கொண்டாடப்படுகிற சமகால படங்களைக் கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் சினிமாவின் பாதிப்பே இல்லை. ஒரு கறுப்புவெள்ளை புகைப்படம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடும் ஆச்சாரங்களை மேற்கொள்ளுகிற பிராமணர்கள் கூட இப்படி இல்லை. இஸ்லாமியர்களைப் பற்றி தெரியாது. ஆனால் மேற்கில் கிறித்துவ நாடுகளில் கூட இல்லாத ஒரு ஒழுக்கம் இங்கு ஆங்கிலப் பெயர் வைத்திருக்கும், நவீனப்பட்டதாய் நாம் நம்பிக் கொண்டிருக்கும் கிறித்துவர்களிடம் உள்ளது.
அடுத்தது பிளேஷ் பேக். பிளேஷ்பேக் புரியாத ஒருவருக்கு எந்த கதையையும் வாசிக்க கேட்க அறிய முடியாது. நம் சிந்தனைகளை கோர்ப்பது, நினைவை மீட்பது, சம்பவங்களை கதைப்பது என அனைத்திலும் பிளேஷ் பேக் உள்ளது. அதை புரிய முடியாத ஒருவர் எப்படி ஒரு மொழியில் உரையாடுகிறார் என்பதே புரியாத பெரும் விசித்திரம்.

கருத்துகள்

Ranchit இவ்வாறு கூறியுள்ளார்…
அவர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புரிந்துவிட்டால் கிறிஸ்துவத்தை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். என்னுடன் பணியாற்றும் எல்லா ஐரோப்பிய நண்பர்களுக்கும் கிறித்துவத்தின் மீது துளி நம்பிக்கையும் இல்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.