முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கிறித்துவர் படம் பார்க்கிறார்




குமரி மாவட்ட கிறுத்துவர்கள் பொதுவாக திரையரங்குக்கு குடும்பமாக போக மாட்டார்கள். வாலிபர்கள் ஒளிந்து பதுங்கி ஏ படம் பார்ப்பது போல் சினிமாவுக்கு போவார்கள். வீட்டில் டி.வியில் அல்லது திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

திருநெல்வேலி கிறித்துவர்கள் இன்னும் கட்டுப்பெட்டியாம். என்னுடைய நண்பர் அப்படி ஒரு ஆச்சார கிறித்துவப் பெண்ணை காதலித்து மணந்தார். அப்பெண் தன் வாழ்நாளில் படமே பார்த்தது இல்லை. அவரை முதன்முதலாக நண்பர் திரையரங்குக்கு அழைத்துப் போனார். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று மனைவி ஜெர்க்காகி கணவனிடம் “எனக்கு படமே புரியவில்லை” என புகார் செய்தார். அவர் விசாரிக்க மனைவி பிளேஷ் பேக் காட்சியை குறிப்பிட்டு “ஏன் திடீரென்று படம் பின்னால் போகிறது, எனக்கு குழப்பமாய் இருக்கிறது” என்றார். நண்பர் எவ்வளவு விளக்கியும் அவருக்கு பிளேஷ் பேக் என்கிற உத்தி புரியவில்லை. அத்தோடு அவர்கள் சேர்ந்து படம் பார்க்க போவதும் நின்று போனது.
இதில் எனக்கு ரெண்டு விசித்திரங்கள் பட்டன. ஒன்று தமிழகம் சினிமாவை வழிபடும் மாநிலம் எனப்படுகிறது. ஆனால் இங்கு பெரிதும் கொண்டாடப்படுகிற சமகால படங்களைக் கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் சினிமாவின் பாதிப்பே இல்லை. ஒரு கறுப்புவெள்ளை புகைப்படம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடும் ஆச்சாரங்களை மேற்கொள்ளுகிற பிராமணர்கள் கூட இப்படி இல்லை. இஸ்லாமியர்களைப் பற்றி தெரியாது. ஆனால் மேற்கில் கிறித்துவ நாடுகளில் கூட இல்லாத ஒரு ஒழுக்கம் இங்கு ஆங்கிலப் பெயர் வைத்திருக்கும், நவீனப்பட்டதாய் நாம் நம்பிக் கொண்டிருக்கும் கிறித்துவர்களிடம் உள்ளது.
அடுத்தது பிளேஷ் பேக். பிளேஷ்பேக் புரியாத ஒருவருக்கு எந்த கதையையும் வாசிக்க கேட்க அறிய முடியாது. நம் சிந்தனைகளை கோர்ப்பது, நினைவை மீட்பது, சம்பவங்களை கதைப்பது என அனைத்திலும் பிளேஷ் பேக் உள்ளது. அதை புரிய முடியாத ஒருவர் எப்படி ஒரு மொழியில் உரையாடுகிறார் என்பதே புரியாத பெரும் விசித்திரம்.

கருத்துகள்

Ranchit இவ்வாறு கூறியுள்ளார்…
அவர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புரிந்துவிட்டால் கிறிஸ்துவத்தை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். என்னுடன் பணியாற்றும் எல்லா ஐரோப்பிய நண்பர்களுக்கும் கிறித்துவத்தின் மீது துளி நம்பிக்கையும் இல்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...