Skip to main content

பேஸ்புக் சண்டையும் வாழும் கலையும்




காலையில் ஒரு பஞ்சாயத்து. எங்க குடியிருப்பில் ஒரு நாய். தெரு நாய் தான். உள்ளேயே படுத்திருக்கும். கொரியர் பையன், கேஸ் சிலிண்டர் சப்ளையர், வேலைக்காரர்கள் என யாரைப் பார்த்தாலும் சமீபமாய் துரத்த ஆரம்பித்துள்ளது. அந்த நாய்க்கு என் மனைவி சாப்பாடு போடுவதால் காலையிலேயே என்னிடம் தகராறுக்கு மொத்த குடியிருப்பு ஆட்களும் வந்து விட்டார்கள். எனக்கு அப்போது பேஸ்புக்கில் விவாதித்த (சண்டை போட்ட) அனுபவம் வெகுவாக கை கொடுத்தது.


அவர்கள் பக்கம் நியாயம் என்பதால் அமைதி காத்தேன். ஏறிக் கொண்டே போனார் ஒருவர். கோபத்தில் என் வீட்டுக் கதவை போகும் போது அவர் வேகமாக சாத்திக் கொண்டு போனார். உடனே பிடித்துக் கொண்டேன். ”எப்பிடி நீங்க அப்பிடி கதவை உடைக்கிற மாதிரி சாத்தலாம்?” எனக் கேட்டேன். “நான் என்ன உடைத்தா விட்டேன்” என்றார். ”நீங்கள் உடைக்க வேண்டியதில்லை, அப்படி சாத்துவதன் மூலமாக என்னை அவமானப்படுத்த முயல்கிறீர்கள்” என்றேன். அவருக்கு இன்னும் டென்ஷனாகி விட்டது. பேச்சுவாக்கில் என்னை ஒருமையில் அழைத்தார். உடனே அதையும் பிடித்துக் கொண்டு ஏறினேன். அடுத்து அவர் மனைவி வந்துஅவரு கோபத்துல தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்குங்க தம்பிஎன்றார். உடனே நான்பரவாயில்ல வயசில மூத்தவர் தானே. ஆனா சார் உங்க வைப் எவ்வளவு டீசெண்டா பேசறாங்க பாருங்க. பாத்து கத்துக்கிங்கஎன்றேன். அவர் முகம் செத்து விட்டது.
அடுத்து பிரச்சனையை நானே இப்பவே சரி பண்ணுகிறேன் என்று உறுதியளித்து விட்டு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பொதுப்பிரச்சனையை நோக்கி சர்ச்சையை திருப்பினேன். மெயிண்டெனன்ஸ் தொகை நிறைய பாக்கி வைத்திருக்கும் குடியிருப்பின் பொது எதிரி ஒருவர் இருக்கிறார். அவரால் தான் தண்ணீர் பிரச்சனை என்றார்கள். அவரை ஆளாளுக்கு திட்டி விட்டு நாயை மறந்து விட்டு கலைந்து போனார்கள்.

இப்பிடித் தானே பேஸ்புக்கிலயும் எல்லா சண்டையும் நடக்குது. எதையோ யாரோ ஆரம்பிச்சு விடுவாங்க. அப்புறம் மையத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு விசயத்தை நோக்கி அது போகும். யாராவது வாய் விட அதற்காக அவரை பிடித்து சாத்துவோம். கடைசியில் ஒரு புது பொது எதிரியை உருவாக்கி விட்டு கலைந்து போவோம்.

பேஸ்புக் சண்டையின் முக்கிய பாடம். எந்த பிரச்சனை எழுந்தாலும் அதுக்கு நேரடியா பதில் சொல்லக் கூடாது. அதை ஒட்டி எதிரி பேசும் போது ஒரு வார்த்தையை தப்பாய் விடுவார். அல்லது ஒரு அபத்தமான கருத்து சொல்லுவார். அதை வைத்து சாத்து சாத்தென்று சாத்த வேண்டும். கடைசி வரை நம்மள எதுக்கு திட்ட வந்தான்னு அவனுக்கே நினைவு வரக் கூடாது.

Comments

Unknown said…
can i share this in my blog and face book?
நன்றி கோவம் நல்லது ஷேர் பண்ணுங்க
பேஸ்புக் சண்டையின் முக்கிய பாடம். எந்த பிரச்சனை எழுந்தாலும் அதுக்கு நேரடியா பதில் சொல்லக் கூடாது.

வாழும் கலை பாடம் அருமை..!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...