Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இளவரசனின் கொலைக்கு நடவடிக்கை எடுப்பாரா ஜெயலலிதா?


இளவரசனின் பிணம் போடப்பட்டுள்ள நிலை, அங்கு வைத்திருக்கும் மதுபுட்டி போன்றவை இது நிச்சயம் ஒரு செட்டப் செய்யப்பட்ட தற்கொலை என காட்டி விடுகிறது. மேலும் அவர் இறந்த நேரத்தில் அவ்வழி எந்த ரயிலும் போகவில்லை. 


திவ்யாவின் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளும் இந்த பின்னணியில் பார்க்க கொஞ்சம் தெளிவாகின்றன. உயிர்மிரட்டல் தான் இத்தனைக்கும் பின் இருந்தது.
திவ்யா முதலில் தன் அம்மாவின் உயிர் குறித்து அஞ்சுவதாக தெரிவித்தார். ஆனால் டி.வி பேட்டிகளின் போது அவரது அம்மா ஒன்றும் ஆரோக்கியம் குன்றியதாக தெரியவில்லை. ஆக அம்மாவின் உடல்நிலை அல்ல பிரச்சனை. அவரது உயிரை பறிப்போம் எனவோ திவ்யாவின் குடும்பத்தையே அழிப்போம் எனவோ வன்னியர் சங்கத்தை சேர்ந்த குண்டர்கள் மிரட்டி இருக்கலாம் என அப்போதே ஒரு சந்தேகம் நிலவியது. ஒரு கட்டத்தில் திவ்யா தனக்கு இளவரசனுடன் வாழ ஆசை எனவும் அம்மாவின் சம்மதத்துக்காக காத்திருப்பதாகவும் சொன்னார். அடுத்து உடனே அதை மறுக்கும் பொருட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து “நான் இளவரசனை விரும்புவதாக வந்த தகவலினால் இன்று நான் ஆதரவின்றி தவிக்கும் நிலை வந்துள்ளது” என்றார். அவர் யார் ஆதரவை குறிப்பிடுகிறார்? வன்னியர் சங்க ஆதரவையா? நிச்சயம் தன் அம்மாவின் ஆதரவை அல்ல. முதலில் சொன்ன கருத்தை மறுத்து பேட்டி அளிக்கும் படி அவரை வற்புறுத்தியது யார்? நிச்சயம் இது குடும்ப தரப்பில் இருந்து தோன்றிய தூண்டுதலாக இருக்காது. மீடியா பிம்பம் பற்றி வன்னியர் சங்கம் போன்ற அமைப்புகள் தான் கவலைப்படும். ஆக அவர்களின் வற்புறுத்தல் தான் திவ்யாவை இப்படி பேச வைத்திருக்கிறது.
அடுத்து “இனி எம் அப்பாவின் நினைவுக்காக, அவரது மரணத்துக்கு பரிகாரம் தேடுவதற்காக கணவனிடம் இருந்து பிரிந்து வாழப் போகிறேன்” என்று ஒரு அபத்தமான கருத்தை தெரிவித்தார் திவ்யா. அப்பாவின் மரணத்துக்கு பரிகாரம் தேட அவர் சாதிப்பிரச்சனையை அல்லவா தீர்க்க வழி தேட வேண்டும். கணவனை பிரிந்தால் அப்பா திரும்ப வந்து விடுவாரா? எந்த திருமணமான பெண்ணும் இப்படி ஒரு காரணம் சொல்லி தனிமையில் வாழ உத்தேசிக்க மாட்டார். ஆக இதுவும் வன்னியர் சங்கத்தின் மூளைச்சலவை தான்.
இணையத்தில் இன்று திவ்யா தான் இளவரசனின் கொலைக்கு காரணம் என பல கொந்தளித்து பேசுகிறார்கள்? ஆனால் எனக்கு இது உண்மையல்ல என படுகிறது. வன்னியர் சங்கத்தினர் இளவரசனை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியிருக்கக் கூடும். அதனால் தான் தன்னால் இனி கணவன், தாயார் ஆகியோர் கொல்லப்பட வேண்டாம் என தீர்மானித்து அந்த பெண் விலகி இருக்க முடிவு செய்திருக்கக் கூடும். ஒரு அப்பாவிப் பெண் எப்படி ஒரு கொலைகார கும்பலின் சதி மிரட்டல் வலையில் மாட்டி தன் வாழ்வை பலி கொடுத்திருக்கிறது பாருங்கள்!
திவ்யா தன் கணவனை பிரிந்து வாழ்வதற்கு கூறிய காரணம் நியாயமானது அல்ல. திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை. அதற்கு ஒரு பொறுப்பு உள்ளது. (இங்கே இளவரசனுக்கு போதுமான வயது ஆக வில்லை என்பவர்களுக்கு நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் பதினைந்தில் இருந்து இருபது வயதுக்குள் மணம் புரிந்து கொடுக்கப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் பிரித்து வைக்கப் போகிறீர்களா?) திவ்யாவுக்கு தன் திருமணம் மீது ஒரு பாத்தியதை உள்ளது. அம்மாவுடன் வாழ விருப்பம் என திவ்யா தெரிவித்ததும் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொண்டு அவரை போக அனுமதித்தார்கள். இறக்கும் முன் ஒரு முறை தன் மனைவியிடம் பேசக் கூட இளவரசனை அனுமதிக்கவில்லை. நீதிபதிகளின் இந்த முடிவில் உள்ள அபத்தம் கண்கூடானது. ஒரு தம்பதி பிரிய ஒரு தகுந்த காரணம் வேண்டும். அம்மாவை மிஸ் பண்ணுகிறேன் என்பதெல்லாம் தகுந்த நியாயம் என்றால் அது ஆண்களுக்கும் பொருந்த வேண்டுமே! நாளை ஒரு ஆண் ஒரு பெண்ணை மணம் புரிந்து கர்ப்பமாக்கிய ஆறுமாதத்தில் எனக்கு என் பெற்றோருடன் தனியாக இருக்க விருப்பம் என மனைவியை கைவிட்டால் அதுவும் நியாயம் தான். அப்படிப் பார்த்தால் இந்த காரணம் சொல்லி ஒரு ஆண் வருடத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். இப்படியான அற்பமான காரணங்களுக்காக ஒரு பெண் கணவனை பிரிய சட்டம் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்ததால் தான் இன்று ஒரு உயிர் பலி வாங்கப்பட்டிருக்கிறது.

வடநாட்டில் இது போன்ற கௌரவக் கொலைகள் வாடிக்கை என அறிவோம். நம்மூரிலும் இது அரிது அல்ல. காதலுக்காக சொந்த பெண்ணையே கொன்று வீட்டுக்குள் புதைப்பது மதுரைப்பக்கம் சாதாரணமாக நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நம் கண் முன்னாலே ஒரு அமைப்பு திட்டம் இட்டு ஒரு காதல் திருமணத்தை முன்னிட்டு இரு கிராமங்களை அழித்து, திருமண ஜோடியை பிரித்து வைத்து, காலையில் அப்பெண்ணை எனக்கு கணவன் வேண்டாம் என பேட்டி கொடுக்க வைத்து மதியம் கணவனை கொன்று ரயில் தண்டவாளத்தில் போடுவது நடந்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு வன்னியர் சங்கத்தால் இதை செய்ய முடிகிறது என்றால் தம்மை தண்டிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தானே காரணம்.
இந்த கொலைக்காக வன்னியர் சங்கத்தை தடை செய்து கொலைகாரர்களை கைது செய்து அவர்களுக்கு வழி காட்டிய ராமதாஸையும் உள்ளே தள்ள வேண்டும். அரசியல் அனுகூலங்கள் கருதி ஜெயலலிதா தாமதித்தார் என்றால் இந்த அப்பாவி இளைஞனின் கொலையில் அவருக்கும் மறைமுக பங்கு உண்டு என அர்த்தம். கடவுளும் இளவரசனின் ஆன்மாவும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். ஜெயலலிதா கலைஞர், வைக்கோவை கைது செய்த தருணங்களில் அது ஒரு அரசியல் பழிவாங்கல் என நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ராமதாஸை கைது செய்து தூக்கில் போட்டால் கூட வழக்கமாக தூக்குத்தண்டனையை எதிர்க்கும் பலர் கூட அதை ஆதரிப்போம். அஜ்மல் கசாபை விட கொடூரமானவர் அவர்.

Comments

Desingh said…
சரியா சொன்னிங்க,, ஜாதி வெறி நாய்கள் இருக்கும் வரை இது ஓயாது.
ARUN said…
Sariyana idathil irunthu sariyana kattalaigal vanthirunthal intha kolai nadanthirukkathu. Vanniyarin sathiveriku mudivu kattum orey thalaivan engal thirumavalavan.
Orangur ARUN.
இந்த கொலைக்காக வன்னியர் சங்கத்தை தடை செய்து கொலைகாரர்களை கைது செய்து அவர்களுக்கு வழி காட்டிய ராமதாஸையும் உள்ளே தள்ள வேண்டும். -----
அப்படி பாத்தா இதுவரைக்கும் நடந்த எத்தனையோ கொலைகளுக்கு கருணாநிதி,ஜெயலலிதா-ன்னு உயிரோட இருக்குற தலைவர்கள் இல்லாம செத்தவங்களையும் தோண்டி எடுத்துக்கொண்டுவரணும்.....அட இதுல திருமாவளவன விட்டுட்டேனே.......
Anonymous said…
இப்படி ராமதாசை வெளிப்படையாக திட்டி எழுதினால் உங்களை எவனும் வந்து அடித்து விட மாட்டானா?
Ravichandran said…
10 நாட்கள் கழிந்த பின்னர்,போஸ்ட்மார்ட்டம் நடந்துள்ள நிலையிலும் ட்ரெயின் ட்ரைவர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரும் உங்கள் கருத்து இதுதானா?

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...