Skip to main content

“ஸ்டீவ் ஜோப்ஸ் நிறைய டிப்ஸ் வழங்கக் கூடியவர்”





ஸ்டீவ் ஜோப்ஸின் அம்மா ஜோனா ஒரு ஜெர்மானிய வம்சாவளியில் தோன்றியவர். அப்பா ஜிந்தாலி ஒரு சிரியன் முஸ்லீம். இருவரும் காதலித்தனர். ஜோனா கர்ப்பமாக அவரை உடனடியாக மணம் புரிய முடியாது என ஜிந்தாலி மறுத்தார். விளைவாக ஜோனா ஜோப்ஸை பிறந்து சில மாதங்களில் தத்து கொடுத்தார். கொடுக்கும் போது தன் மகனுக்கு கட்டாயம் கல்லூரி கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 


சிலவருடங்களுக்கு பின் ஜிந்தாலியும் ஜோனாவும் மணம் புரிந்தனர். அவர்களுக்கு மோனா என்றொரு மகள் தோன்றினாள். ஆனால் தத்து மகனை கண்டுபிடித்து மீட்க முடியவில்லை. ஜோப்ஸுக்கு இறுதி வரை தன்னை தன் நிஜ பெற்றோர் கைவிட்டு விட்டார்கள் என்ற கோபமும் பச்சாதாபமும் இருந்தது. அது அவரது ஆளுமையை, ஆட்களை நடத்தும் விதத்தை, பல்வேறு நம்பிக்கைகளை பாதித்தது. பின்னர் ஜோப்ஸ் வடிவமைத்து உருவாக்கிய ஆப்பிள் கணினி, ஐபேட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் இந்த பாதிப்பு மறைமுகமாக இருந்தது என ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கைக் கதை எழுதிய வால்டர் நுணுக்கமாக விளக்குகிறார். இதில் ஜோப்ஸ் தன் நிஜ பெற்றோரை கண்டுபிடிக்கும் இடம் நெகிழ்ச்சியானது, நாடகீயமானது.
தத்தெடுத்த அம்மா உயிரோடு இருக்கும் வரை தன் நிஜபெற்றோரை தேட அவருக்கு தயக்கம் இருந்தது. அவர்களை காயப்படுத்தக் கூடும் என பயந்தார். அம்மா இறந்த பின் அப்பாவிடம் அனுமதி பெற்றபின் ஒரு துப்பறியும் நிறுவனம் மூலம் மிக சிரமப்பட்டே தன் நிஜ பெற்றோரை கண்டறிகிறார். அப்போது ஜோப்ஸ் மிக பிரபலமான பணக்காரர். அம்மாவையும் தங்கையையும் ஒரு உணவகத்தில் சந்திக்கிறார். அதற்கு முன் அம்மா தன் மகள் மோனாவிடம் தொலைபேசியில் “உனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவர் மிக பிரபலமானவர்” என மட்டும் சொல்லி இருக்கிறார். அவள் தன் தோழிகளுடன் சேர்ந்து அவர் யாராக இருக்கக் கூடும் என பல பெயர்களை ஊகிக்கிறார்கள். பெரும்பாலும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் தாம். ஒரு பெண் மட்டும் சொல்லுகிறாள்: “ஒருவேளை இந்த ஆப்பிள் கணினியை கண்டுபிடித்த அணியில் யாராவதாக இருக்குமோ?”.
உணவகத்தில் சந்திக்கையில் தான் தன் அண்ணன் ஜாப்ஸ் என மோனாவுக்கு தெரியும். இருவருக்கும் ஆளூமையில் நிறைய ஒற்றுமைகள். பார்த்து பேச ஆரம்பித்ததும் நெருங்கிய பந்தம் தோன்றுகிறது. ஆனால் ஜோப்ஸுக்கு அம்மாவுடன் அத்தனை எளிதில் நெருங்க முடியவில்லை. அம்மா தான் ஜோப்ஸை மிகுந்த வற்புறுத்தலின் பெயரிலே அவரை தத்துக் கொடுத்ததாகவும், அதற்காக பின்னர் மிக வருந்தி ஏங்கியதாகவும் சொல்கிறார். பலமுறை மன்னிப்பு கேட்கிறார். பின்னரும் தொடர்ந்து அடிக்கடி அம்மா அவரை சந்திக்கிறார். அவருக்குள் அந்த குற்றவுணர்வு மறையவே இல்லை. ஒவ்வொரு முறை கண்ணீருடன் மன்னிப்பு கேட்கிறார். அல்லது எப்படியாவது ஏதாவது ஒரு தருணத்தில் ஜோப்ஸை தத்துக் கொடுக்க நேர்ந்த மனநிலையை பற்றி குறிப்பிடுகிறார்.
ஜோப்ஸின் அப்பா திருமணமாகி ஐந்தாவது வருடத்திலேயே குடும்பத்தை கைவிட்டு போய் விடுகிறார். அதற்கு பின் சில பெண்களை மணம் புரிந்து விலகுகிறார். அவர் பல உணவகங்களை நடத்தினார். இறுதியில் வியாபாரம் தளர்ந்து ஒரு சின்ன உணவகத்தில் வேலை செய்கிறார். அவரை பார்ப்பதற்கு தங்கை மோனாவை அனுப்புகிறார் ஜோப்ஸ். எந்த காரணம் கொண்டும் ஜோப்ஸ் தான் அவர் மகன் என சொல்லக் கூடாது என கூறுகிறார்.
மோனா அப்பாவை அந்த சின்ன உணவகத்தில் சந்திக்கிறார். அவர் சொல்லுகிறார்: “நான் இதற்கு முன் நல்ல வளமாக இருந்தேன். மெடிட்டரேனியன் என ஒரு பெரிய உணவகத்தை நடத்தினேன். அப்போது நீ வந்து என்னை பார்த்திருக்க வேண்டும். அங்கே பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வருவார்கள். உனக்குத் தெரியுமா ஸ்டீவ் ஜோப்ஸ் அவர் கூட அங்கு சிலமுறை வந்திருக்கிறார். நிறைய டிப்ஸ் கொடுப்பார்.” மோனாவுக்கு அவர் மகன் தான் ஜோப்ஸ் என சொல்லும் அவா தொண்டை வரை வந்து நின்று விடுகிறது.
சில வருடங்களுக்கு பின் ஒரு இணைய பக்கத்தில் ஜோப்ஸின் உண்மை தந்தை ஒரு சிரியன் என்று அவரது பெயருடம் விபரம் வெளியிட்டிருந்தார்கள். அதைப் படித்த அவரது அப்பா தன் மகளிடம் கேட்டு உறுதி செய்கிறார். “ஆனால் ஜோப்ஸ் உங்களை பார்க்க விரும்பவில்லை” என்றார் மோனா. அப்பா கோபப்படவோ மறுக்கவோ இல்லை. அவர் அமைதியாக தன் மகனின் நிராகரிப்பை ஏற்றுக் கொண்டார்.
சிறுவயதில் தன் பெற்றோரால் கைவிடப்பட்ட ஜோப்ஸ் யாரையும் எப்போதும் தயக்கமின்றி கைவிடக் கூடியவராக இருந்திருக்கிறார். அவரை துறக்கையில் அம்மாவுக்கு வயது 23. அதே 23 வயதில் ஜோப்ஸும் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு ஒரு மகளுக்கு தந்தையாகிறார். ஆனால் உண்மை தெரிந்திருந்தும் பொய்யாக அவள் தன் மகள் அல்ல என மறுத்து விடுகிறார். அவருக்கு ஒரு காத்திரமான பொறுப்பான உறவை ஏற்கும் பயம் இருந்தது. வலுவான உறவுகள் அவருக்கு பதற்றத்தை ஏற்படுத்தின. வழக்கு நீதிமன்றத்தில் கொஞ்ச காலம் நடக்கிறது. பின்னர் ஜோப்ஸ் தன் தவறை உணர்ந்து தன் மகளை ஏற்றுக் கொண்டார். அவள் பெயரை தான் உருவாக்கிய ஒரு மெக்கிண்டோஷ் கணினிக்கு இட்டார். லிஸா. தன் இறுதிக் காலத்தில் தான் வாழ்வில் செய்த குற்றங்களில் மிக அதிகமாக வருந்துவது தன் மகளை ஏற்றுக் கொள்ள மறுத்தது தான் என்கிறார்.
மனித மனம் எவ்வளவு நுணுக்கமாக சிக்கலாக இயங்குகிறது என்பதை வால்டர் ஐசக்சன் எழுதிய ”ஸ்டீவ் ஜோப்ஸ்” நூல் சித்தரிக்கிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...