முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களின் துப்பறியும் நாவலில் உள்ள பெண்மை




கேரின் ஸ்லாட்டரின் Fractured எனும் துப்பறியும் நாவல் படித்தேன். அதிக பரபரப்பில்லாத மென்மை கொண்ட குற்றவிசாரணை எழுத்து. ஒரு ஆண் மற்றும் பெண் விசாரணை அதிகாரியின் கண்ணோட்டத்தில் இருந்து பிரதானமாய் கதை நடக்கிறது.  


பெண்களுக்கு வலிமையான அதே சமயம் மென்மையான எளிதில் ஈகோவை துறந்து அழத் துணிகிற ஆண்களை பிடிக்கிறது. ஸ்லாட்டர் தன் நாயகனான வில் டிரண்டை அப்படித்தான் சித்தரிக்கிறார். எளிதில் மன்னிகிற, வன்மம் இல்லாத, குற்றவுணர்வு கொள்கிற, கூச்சம் மிக்க துப்பறியும் அதிகாரி. அதாவது கிட்டத்தட்ட பெண் போன்ற ஆண். பெண் அதிகாரியான பெயித்தின் கண்ணோட்டத்தில் பெண் பாத்திரங்கள் நிறைய விமர்சனத்துடன் குற்றம் குறைகளுடன் தோன்றுகிறார்கள். ஆண் எழுத்தாளர்கள் எப்படியும் கொஞ்சம் தேவதைத் தன்மை கொண்ட பெண் பாத்திரங்களை உருவாக்குவார்கள். ஆனால் பெண்கள் எழுதும் போது பெண் பாத்திரங்கள் மீது தான் அதிக விமர்சனங்களை வைக்கிறார்கள். நம்முடைய சிவசங்கரி, அனுராதா ரமணன்கள் ஆண்களின் பார்வையில் இருந்து பெண் பாத்திரங்களை உருவாக்கினார்கள் என்பது வேறு விசயம்.
நாவலில் ஓரிடத்தில் ஒரு விடுதிக்குள் நுழைகையில் ஏற்படும் பிரத்யேக பதின்வயது பையன்களின் வாசனை பற்றி எழுதுகிறார். அது போல் பெண் அதிகாரி பெயித்துக்கு தன் பதின்வயது மகன் மற்றும் காதலன் ஆகியோரை எதிர்கொள்கையில் வரும் குழப்பங்கள், தோன்றுகிற புதிர்கள் மேற்சொன்ன பெண்மை தீற்றல்களை அழுத்தமாய் கொண்டவை. எனக்கு நாவலில் பிடித்த இன்னொரு விசயம் பொதுவாக விசாரணையில் உள்ள சலிப்புத் தன்மையை சித்தரிக்க முயன்றுள்ளது. ஒரு போலியான விறுவிறுப்பு இல்லை. ஒரு முறையான அறிவியல்பூர்வமான விசாரணையில் உள்ள கையாகாத தன்மை, விசாரணை அதிகாரிகளுக்கு உள்ள அழுத்தங்களை நாவல் காட்டுகிறது. தொடர்ந்து கவனம், உழைப்பு, அக்கறை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் எப்படி ஒரு வழக்கு விசாரணையை முடிக்க உதவுகிறது எனவும் காட்டுகிறது. வழக்கம் போல ஒரு அதிகாரியின் அட்டகாச புத்திசாலித்தனத்தால் வழக்கு தீர்வாகிற நாயகத்தனம் எதுவும் இல்லை. இவையெல்லாம் சாதக அம்சங்கள். பொதுவாக வணிக நாவல்களில் உள்ள வலிந்து சொல்லப்பட்ட முடிவு, சைக்கோ கொலைகாரன் ஆகியவை பலவீனங்கள்.
இந்நாவல் குழந்தை பலாத்காரம் பற்றி நாவல் பேசும் போது கேட்க வேண்டிய பல தொந்தரவான ஆழமான கேள்விகளை தவிர்த்து விடுகிறது. வசதியாக குற்றவாளியை ஒரு கொடூரனாக காட்டி தாண்டி போகிறது. நல்ல வணிக நாவலுக்கும் சுமாரான இலக்கிய நாவலுக்குமான வித்தியாசமே இது தான். வணிக நாவல் வாளி. இலக்கிய நாவல் பாதாள கரண்டி. கிணற்றுக்குள் போய் வரும் போது பாதாள கரண்டி நாம் எதிர்பார்க்காத பல கசப்பான விருப்பமில்லாத ஆனால் முக்கியமான பொருட்களை ஆழத்தில் இருந்து நமக்கு எடுத்து காட்டும். ஆனாலும் தாகம் எடுக்கும் போது வாளியை இறக்கி நல்ல தண்ணீர் மொண்டு குடிப்பதும் அவசியம் தான். Broken அப்படி நல்ல சுவையான நீரை தருகிறது.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
போலியான விறுவிறுப்பு இல்லை....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.