Skip to main content

பெண்களின் துப்பறியும் நாவலில் உள்ள பெண்மை




கேரின் ஸ்லாட்டரின் Fractured எனும் துப்பறியும் நாவல் படித்தேன். அதிக பரபரப்பில்லாத மென்மை கொண்ட குற்றவிசாரணை எழுத்து. ஒரு ஆண் மற்றும் பெண் விசாரணை அதிகாரியின் கண்ணோட்டத்தில் இருந்து பிரதானமாய் கதை நடக்கிறது.  


பெண்களுக்கு வலிமையான அதே சமயம் மென்மையான எளிதில் ஈகோவை துறந்து அழத் துணிகிற ஆண்களை பிடிக்கிறது. ஸ்லாட்டர் தன் நாயகனான வில் டிரண்டை அப்படித்தான் சித்தரிக்கிறார். எளிதில் மன்னிகிற, வன்மம் இல்லாத, குற்றவுணர்வு கொள்கிற, கூச்சம் மிக்க துப்பறியும் அதிகாரி. அதாவது கிட்டத்தட்ட பெண் போன்ற ஆண். பெண் அதிகாரியான பெயித்தின் கண்ணோட்டத்தில் பெண் பாத்திரங்கள் நிறைய விமர்சனத்துடன் குற்றம் குறைகளுடன் தோன்றுகிறார்கள். ஆண் எழுத்தாளர்கள் எப்படியும் கொஞ்சம் தேவதைத் தன்மை கொண்ட பெண் பாத்திரங்களை உருவாக்குவார்கள். ஆனால் பெண்கள் எழுதும் போது பெண் பாத்திரங்கள் மீது தான் அதிக விமர்சனங்களை வைக்கிறார்கள். நம்முடைய சிவசங்கரி, அனுராதா ரமணன்கள் ஆண்களின் பார்வையில் இருந்து பெண் பாத்திரங்களை உருவாக்கினார்கள் என்பது வேறு விசயம்.
நாவலில் ஓரிடத்தில் ஒரு விடுதிக்குள் நுழைகையில் ஏற்படும் பிரத்யேக பதின்வயது பையன்களின் வாசனை பற்றி எழுதுகிறார். அது போல் பெண் அதிகாரி பெயித்துக்கு தன் பதின்வயது மகன் மற்றும் காதலன் ஆகியோரை எதிர்கொள்கையில் வரும் குழப்பங்கள், தோன்றுகிற புதிர்கள் மேற்சொன்ன பெண்மை தீற்றல்களை அழுத்தமாய் கொண்டவை. எனக்கு நாவலில் பிடித்த இன்னொரு விசயம் பொதுவாக விசாரணையில் உள்ள சலிப்புத் தன்மையை சித்தரிக்க முயன்றுள்ளது. ஒரு போலியான விறுவிறுப்பு இல்லை. ஒரு முறையான அறிவியல்பூர்வமான விசாரணையில் உள்ள கையாகாத தன்மை, விசாரணை அதிகாரிகளுக்கு உள்ள அழுத்தங்களை நாவல் காட்டுகிறது. தொடர்ந்து கவனம், உழைப்பு, அக்கறை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் எப்படி ஒரு வழக்கு விசாரணையை முடிக்க உதவுகிறது எனவும் காட்டுகிறது. வழக்கம் போல ஒரு அதிகாரியின் அட்டகாச புத்திசாலித்தனத்தால் வழக்கு தீர்வாகிற நாயகத்தனம் எதுவும் இல்லை. இவையெல்லாம் சாதக அம்சங்கள். பொதுவாக வணிக நாவல்களில் உள்ள வலிந்து சொல்லப்பட்ட முடிவு, சைக்கோ கொலைகாரன் ஆகியவை பலவீனங்கள்.
இந்நாவல் குழந்தை பலாத்காரம் பற்றி நாவல் பேசும் போது கேட்க வேண்டிய பல தொந்தரவான ஆழமான கேள்விகளை தவிர்த்து விடுகிறது. வசதியாக குற்றவாளியை ஒரு கொடூரனாக காட்டி தாண்டி போகிறது. நல்ல வணிக நாவலுக்கும் சுமாரான இலக்கிய நாவலுக்குமான வித்தியாசமே இது தான். வணிக நாவல் வாளி. இலக்கிய நாவல் பாதாள கரண்டி. கிணற்றுக்குள் போய் வரும் போது பாதாள கரண்டி நாம் எதிர்பார்க்காத பல கசப்பான விருப்பமில்லாத ஆனால் முக்கியமான பொருட்களை ஆழத்தில் இருந்து நமக்கு எடுத்து காட்டும். ஆனாலும் தாகம் எடுக்கும் போது வாளியை இறக்கி நல்ல தண்ணீர் மொண்டு குடிப்பதும் அவசியம் தான். Broken அப்படி நல்ல சுவையான நீரை தருகிறது.

Comments

போலியான விறுவிறுப்பு இல்லை....

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...