முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞன் பாமரனாக தோன்றும் வேளை






நேற்று ஆனந்த காந்தியுடன் கூகிள் ஹாங்கவுட்டில் அரட்டையில் கலந்து கொண்டேன். துடிப்பாக பேசும் இளைஞர். விமர்சனபூர்வமான கேள்விகளை எதிர்கொள்கையில் பதற்றமாகிறார். தீஷியஸின் கப்பல் படத்தில் உள்ள தெளிவு, ஆழம், அமைதி எல்லாம் பார்க்கிற போது அதன் இயக்குநரிடம் நேரில் உள்ள முதிர்ச்சியின்மை வியப்பளிக்கிறது. பொதுவாக கலைஞர்களை நேரில் சந்திக்கையில் நாம் எல்லோருக்கும் தோன்றுகிற குழப்பம் தான் இது.


அவரது படத்தில் பேசப்படுகிற தத்துவ பிரச்சனைகளில் மேற்கத்திய தாக்கம் அதிகம் என்றேன். குறிப்பாக freewill கோட்பாடு, தனிமனித பொறுப்பு, உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் ஆகியவை. அவர் இக்கேள்வியை விவாதிக்கவே தயாரில்லை. இன்னொரு பார்வையாளர் மற்றொரு நல்ல கேள்வி கேட்டார். தீஷியஸின் கப்பல் உள்ளடக்கத்துக்கு அதிக அழுத்தம் கொடுப்பது பற்றி ஒரு கேள்வி. அவர் கேட்டார் இன்றைய பின்நவீனத்துவ காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை நம்பி விவாதிக்கும் உறுதிப்பாடு யாருக்கும் இல்லை; அதனால் பின்நவீனத்துவ சினிமாவில் கதையை விட கதை கூறும் மொழி தானே முக்கியம் என்று. அவர் கேட்டது தியாகராஜன் குமாரராஜா பாணியிலான கதைகூறல் தானே இன்றைய சினிமாவுக்கு ஏற்றது என்று. இக்கேள்வியும் ஆனந்த காந்தியை பதற்றமாக்கி விட்டது. இதையும் கருத்திற்கொள்ளாமல் ஒரேயடியாய் மறுத்து விட்டார். 

இதையெல்லாம் பார்த்த போது எனக்கு தோன்றியது அவர் தன் படத்தில் வரும் சார்வாகா போன்றவர் என்று. வாழ்க்கை புரிந்து கொள்வதற்கான பிரச்சனைகளை அவ்வளவு ஆழமாக தெளிவாக அலசும் ஒரு படத்தின் இயக்குநரிடம் அதே தெளிவோ கூர்மையோ இல்லை. ஒரு இளங்கலை முதலாம் வகுப்பு மாணவன் போல் இருக்கிறார். அது தான் கலையின் சிறப்பு இல்லையா! 
ஒரு கலைப்படைப்பு கலைஞனை தனக்கான ஊடகமாக பயன்படுத்துகிறது. கலை எப்போதும் கலைஞனை கடந்து மகத்துவம் கொள்ளுகிறது. இப்படத்தில் வரும் கண் தெரியாத புகைப்பட கலைஞர் வெறுமனே தன் உள்ளுணர்வு கொண்டு அற்புதமான படங்கள் எடுப்பார். தீஷியஸின் கப்பல் படமும் அப்படித் தான் நிகழ்ந்திருக்கிறது. கலைஞன் ஒரு விளக்கை போல இருக்கிறான். ஒளிதரும் சுடர் மறைந்ததும் அவன் ஒரு வெற்று உலோகமாகி விடுகிறான். சுடர் ஒரு ஞான தெறிப்பை போல் அவனிடம் வந்து அமர்ந்து பின் மறைந்து போகிறது.
ஆனந்த் காந்தியின் இப்பிரச்சனையை பற்றி விமர்சிக்கும் மற்றொரு பதிவு
http://www.firstpost.com/bollywood/why-is-anand-gandhi-irked-by-allegations-of-plagiarism-in-ship-of-theseus-1008795.html 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.