முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞன் பாமரனாக தோன்றும் வேளை






நேற்று ஆனந்த காந்தியுடன் கூகிள் ஹாங்கவுட்டில் அரட்டையில் கலந்து கொண்டேன். துடிப்பாக பேசும் இளைஞர். விமர்சனபூர்வமான கேள்விகளை எதிர்கொள்கையில் பதற்றமாகிறார். தீஷியஸின் கப்பல் படத்தில் உள்ள தெளிவு, ஆழம், அமைதி எல்லாம் பார்க்கிற போது அதன் இயக்குநரிடம் நேரில் உள்ள முதிர்ச்சியின்மை வியப்பளிக்கிறது. பொதுவாக கலைஞர்களை நேரில் சந்திக்கையில் நாம் எல்லோருக்கும் தோன்றுகிற குழப்பம் தான் இது.


அவரது படத்தில் பேசப்படுகிற தத்துவ பிரச்சனைகளில் மேற்கத்திய தாக்கம் அதிகம் என்றேன். குறிப்பாக freewill கோட்பாடு, தனிமனித பொறுப்பு, உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் ஆகியவை. அவர் இக்கேள்வியை விவாதிக்கவே தயாரில்லை. இன்னொரு பார்வையாளர் மற்றொரு நல்ல கேள்வி கேட்டார். தீஷியஸின் கப்பல் உள்ளடக்கத்துக்கு அதிக அழுத்தம் கொடுப்பது பற்றி ஒரு கேள்வி. அவர் கேட்டார் இன்றைய பின்நவீனத்துவ காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை நம்பி விவாதிக்கும் உறுதிப்பாடு யாருக்கும் இல்லை; அதனால் பின்நவீனத்துவ சினிமாவில் கதையை விட கதை கூறும் மொழி தானே முக்கியம் என்று. அவர் கேட்டது தியாகராஜன் குமாரராஜா பாணியிலான கதைகூறல் தானே இன்றைய சினிமாவுக்கு ஏற்றது என்று. இக்கேள்வியும் ஆனந்த காந்தியை பதற்றமாக்கி விட்டது. இதையும் கருத்திற்கொள்ளாமல் ஒரேயடியாய் மறுத்து விட்டார். 

இதையெல்லாம் பார்த்த போது எனக்கு தோன்றியது அவர் தன் படத்தில் வரும் சார்வாகா போன்றவர் என்று. வாழ்க்கை புரிந்து கொள்வதற்கான பிரச்சனைகளை அவ்வளவு ஆழமாக தெளிவாக அலசும் ஒரு படத்தின் இயக்குநரிடம் அதே தெளிவோ கூர்மையோ இல்லை. ஒரு இளங்கலை முதலாம் வகுப்பு மாணவன் போல் இருக்கிறார். அது தான் கலையின் சிறப்பு இல்லையா! 
ஒரு கலைப்படைப்பு கலைஞனை தனக்கான ஊடகமாக பயன்படுத்துகிறது. கலை எப்போதும் கலைஞனை கடந்து மகத்துவம் கொள்ளுகிறது. இப்படத்தில் வரும் கண் தெரியாத புகைப்பட கலைஞர் வெறுமனே தன் உள்ளுணர்வு கொண்டு அற்புதமான படங்கள் எடுப்பார். தீஷியஸின் கப்பல் படமும் அப்படித் தான் நிகழ்ந்திருக்கிறது. கலைஞன் ஒரு விளக்கை போல இருக்கிறான். ஒளிதரும் சுடர் மறைந்ததும் அவன் ஒரு வெற்று உலோகமாகி விடுகிறான். சுடர் ஒரு ஞான தெறிப்பை போல் அவனிடம் வந்து அமர்ந்து பின் மறைந்து போகிறது.
ஆனந்த் காந்தியின் இப்பிரச்சனையை பற்றி விமர்சிக்கும் மற்றொரு பதிவு
http://www.firstpost.com/bollywood/why-is-anand-gandhi-irked-by-allegations-of-plagiarism-in-ship-of-theseus-1008795.html 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...