Skip to main content

ரவீந்திர ஜடேஜா: திறமை என்றால் தான் என்ன?





முன்னர் கும்பிளேவுடனான ஒரு பேட்டியில்கிரிக்கெட்டில் முன்னேற அடிப்படை தகுதி என்ன?” என கேட்டார்கள். “திறமைஎன்றார் கும்பிளே. வியப்பாக இருந்தது. ஏனென்றால் கும்பிளே ”திறமையானவராக” அல்ல கடுமையாக உழைப்பவராக ஒழுக்கமாக நேர்த்தியாக ஆடுபவராக அறியப்பட்டவர். ரவீந்திர ஜடேஜா தன் பந்து வீச்சு பாணியால் கும்பிளேவுடன் ஒப்பிடப்படுபவர். அதே போல் வேகமாக வீசுபவர். அதே போல் பந்தைப் திருப்பும் அபரித திறமை அற்றவர். அப்படி என்றால் திறமை என்றால் என்ன? கூர்மையாக வேகமாக வீசுவது கூட ஒரு திறமை தானா? 

இன்றுள்ள பல சிறந்த சுழலர்கள் – பனேசர், அப்ரிடி, ஹபீஸ் – இந்த வகை தான். சுழற்றாத சுழலர்கள். வேகமாக வீசும் சுழலர்களில் நன்றாக சுழற்றுபவர்களான ஸ்வான், நரைன், அஜ்மல் இன்னும் மேலான நிலையில் உள்ளவர்கள். ஆனால் இன்று பொதுவாக வேகமாக நிதானமாக வீசும் சுழலர்கள் அதிக வெற்றி பெறுகிறார்கள். கனத்த மட்டையை ஆவேசமாக வீசி அடிக்க துணியும் மட்டையாளர்கள், குறுகிப் போன எல்லைக் கோடுகள் மற்றும் மெத்தனமான ஆடுதளங்கள் காரணங்கள் எனலாம். பந்தை மெல்ல காற்றில் மிதக்க விட்ட good lengthஇல் விழ வைப்பவர்கள் பெரும்பாலும் விக்கெட் எடுப்பதோ ஓட்டங்களை கட்டுப்படுத்துவதோ இல்லை. ஓஜா நல்ல உதாரணம். அவர் மெல்ல மெல்ல காலாவதி ஆகி வருகிறார். மிஷ்ரா மீதான பிரதான குற்றச்சாட்டு கூட அவர் மிக மெல்ல வீசுகிறார் என்பது தான்.
யோசித்துப் பார்த்தால் நமக்கு வேக சுழலர்களின் ஒரு மரபு உள்ளது. முன்னர் சந்திரசேகர், பின்னர் கும்பிளே, அடுத்து ஹர்பஜன். நமது ஆட்டநாய சுழலர்கள் சற்று வேகமாக வீசுபவர்கள் தாம். ஜடேஜா இவர்களுக்கு வெகுகீழ் தான் வருகிறார். டெஸ்டுகளில் நன்றாக சுழலும் ஆடுதளத்தில் போல் அவரால் ஒரு தட்டையான தளத்தில் விக்கெட் வீழ்த்த முடியுமா? ஜடேஜா முன்னேறி வரும் ஒரு நேர்த்தியான வீச்சாளர். பிரமாதமான களத்தடுப்பாளர். சுமாரான ஆனால் கடப்பாடுள்ள மட்டையாளர்.
ஜடேஜாவை நான் முதலில் பார்த்தது சென்னையில் ஒரு ஆட்டத்தில். தென்னாப்பிரிக்க ஏ அணியும் இந்திய ஏ அணியும் ஆடிய ஆட்டம். அப்போது தான் முதன்முறை மோர்னெ மோர்க்கலை பார்த்தேன். தொலைவில் இருந்து பார்க்க பொலாக் வீசுவது போன்றே இருந்தது. ஜடேஜாவை பற்றி அப்போது பரபரப்பு இருந்தது. அதாவது உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில். அவர் 19 வயதினருக்கு கீழுள்ள வீரர்களுக்கான ஆட்டங்களில் இருந்து நல்ல பெயருடன் இருந்தார். திறமையான ஆல்ரவுண்டர் என்றார்கள். ஆனால் அவர் என்னை எந்த விதத்திலும் கவரவில்லை. அடுத்து அவர் இந்திய அணிக்குள் வந்த போது மட்டையாட்டம் தான் பிரதானமாக பார்த்தார்கள். கால் ஸ்பூனுக்கு மேல் கடவுள் இவருக்கு திறமை அளிக்கவில்லை என நினைத்தேன். பின்னர் பல ஆட்டங்களில் தோனி அவரை பாதுகாத்து வாய்ப்பளிக்க பல ரசிகர்களையும் போல நானும் எரிச்சலுற்றேன். பிறகு ஜடேஜாவின் பந்து வீச்சு மேம்பட்டது. ஆனால் ஐபிஎல்லில் தடை செய்யப்பட்ட பின் அதுவும் கடுமையாக வீழ்ந்தது. அவர் ஒழுங்காய் மட்டையாடவும் பந்து வீசவும் முடியாதவரானார். அணியில் இருந்து விலக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வந்தார். இன்னும் கூர்மையாக வேகத்தில் சின்ன சின்ன மாறுபாடுகளுடன் சிறப்பாக வீசினார். அடுத்து போக போக ஜடேஜாவின் பந்துவீச்சு மேம்பட்டுக் கொண்டே வந்தது எனலாம். திருப்புமுனை ஆஸி தொடர் தான். தன்னால் டெஸ்டிலும் விக்கெட்கள் வீழ்த்த முடியும் என நிரூபித்தார். குறிப்பாக கிளார்க்கை அவர் வீழ்த்தியது உள்ளுக்குள் ஒரு தனி போட்டியாக நடந்தது. கிளார்க்கால் ஜடேஜாவை ஆப் பக்கமும் அடிக்க முடியவில்லை கால் பக்கமும் திருப்ப முடியவில்லை. அவர் பந்தை இடையிடையே கொஞ்சமாய் திருப்பினார். அதனால் நம்பி நேராகவும் ஆட முடியவில்லை. தொடர்ந்து கிளார்க் அவரை ஆப் பக்கமாய் அடிக்க முயன்று வெளியேறினார். இன்னொரு முறை நேராக அடிக்க இறங்கி வந்து ஸ்டெம்பிங் ஆனார் – பந்து திரும்பி விட்டது. இவர் பந்தை திருப்புவாரா மாட்டாரா எந்தளவுக்கு திருப்புவார் என புரியாமல் கிளார்க் தொடர்ந்து அவரிடம் வெளியேறினார்.
வேகமாய் முழுநீளத்தில் வீசியதால் அவரை பிற மட்டையாளர்களால் வாரியடிக்கவும் முடியவில்லை. கணிசமான விக்கெட்டுகள் ஜடேஜாவை மட்டையாளர்கள் மதிக்காததனாலும் அவர் இறுக்கமாய் வீசி ஏற்படுத்திய நெருக்கடியினாலும் வீழ்ந்தது. என்னுடைய கேள்வி இனி மட்டையாளர்கள் அவரை சீரியஸாக பொறுமையாக ஆடினால் என்னவாகும் என்பது? ஜடேஜா நெருக்கடிக்கு உள்ளாவாரா?
இதெல்லாம் வருங்கால சவால்கள். ஆனால் இப்போதைக்கு ஐ.சி.சி தரவரிசைப்படி அவர் தான் ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் சுழலர். 96இல் கும்பிளேவுக்கு பிறகு இதை சாதித்த ஒரே இந்திய சுழலர். வெற்றிக்கு தேவையான திறமை என்பது வேறு ஏதோ ஒன்று என இந்த இளைஞர் நிரூபிக்கிறார். உழைப்பு, கவனம், பொறுமை, உன்னிப்பு இதெல்லாம் கூட திறமை தானே. இதெல்லாம் இல்லாமல் அபரிதமான ஆட்டத்திறமை மட்டும் கொண்ட ரோஹித் ஷர்மாவை விட ஜடேஜா தான் நம்பர் ஒன்.
கடவுள் நமக்கு என்ன தருகிறார் என்பதல்ல, நாம் நம்மை வைத்து என்ன செய்கிறோம்? அது தான் திறக்காத கதவுகளையும் திறக்கிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...