முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மலைப்பிரசங்கத்துக்கான குறிப்புகள் -- நின் ஆண்டிரூவ்ஸ்


  1. அல்குல்கள் கடவுள்கள் அல்ல. அவை படைக்கப்பட்டவை.
  2.   கடவுளைப் போலல்லாது அவை நித்தியமானவை அல்ல.
  3.  கண்ணியமாய், கம்பீரமாய், புத்திசாலித்தனமாய் உள்ள அவற்றை நாம் எப்படியும் கவனத்தில் கொள்ளத் தான் வேண்டும்.
  4.    எல்லா ஆன்மீக தோற்றங்களையும் போல அல்குல்களும் ஒரு நாளில் எப்போது வேண்டுமெனிலும் மனிதக் கண்ணால் காணக் கூடியவை அல்ல. 
  5.   அல்குல்கள் கண்ணுக்கு புலப்படுபவை, புலப்படாதவை, புனிதமானவை, பங்கமானவை என இரண்டையும் பிரநுத்துவப்படுத்துகின்றன.
  6.   அவை ஒரே நேரத்தில் எங்கும் தோன்றுவதில்லை, எங்கும் தோன்றுகின்றன. அந்தரங்கமானவையாகவும் பொதுவானவையாகவும், மனிதனாகவும் இறையாகவும் உள்ளன.
  7.  ஆதாம் மற்று ஏவாளின் மாந்திரிகக் கதையில் ஆண்டவர் தெய்வீக அல்குலின் நுழைவாயிலில் வாளேந்திய தேவன் ஒருவனை நிறுத்தி திரும்பி வருகிற பத்தாம்பசலிகளை தடுக்கும்படி செய்தார்.
  8.  தரிசனங்கள் அவற்றை “ஒரு மேகத்தால் மூடப்பட்டு தலைக்கு மேல் வானவில்லுடன் உள்ளதாய்” விவரிக்கின்றன.
  9.  பல சமயங்களில் ஒரு அல்குல் ஒரு நிஜப்பெண்ணின் உருவை எடுப்பதுண்டு; அப்போது அதற்கு சிலவேளை மனித ஆன்மா உள்ளதாகவும் தவறாக நினைக்கப்பட்டுள்ளது.
  10. ஒருவர் அந்நியர்களை வரவேற்க மறக்கக் கூடாது, ஏனெனில் ஒரு அல்குலை அவர் அறியாமலே உபசரிக்க நேரிடலாம்.
  11. எப்போது நினைவில் கொள்ளுங்கள்: ஒருவர் ஒருக்காலும் அல்குல்களை வணங்குதல் கூடாது. அல்லது பிற பொன்னிற பசுக்கன்றுகளையும்.
  12. அல்லது ஒருவர் தனது ஆன்மாவை வழிநடத்தும் வண்ணம் ஒரு அல்குலை பூமிக்கு அனுப்பும் படி வேண்டுதலோ கூடாது.
  13. ஒரு அல்குல் தன்னிச்சைப்படி வரவேண்டும். ஏனெனில் ஒரு அல்குலின் மார்க்கம் அதுவே, ஆதி அந்தத்தினுடையதும் அதுவே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...