முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்த நாள் உறுதிமொழிகள்




இந்த பிறந்தநாளுக்கான சில உறுதிமொழிகள்
அடுத்த வருடத்தில்

  • இன்னும் நிறைய நண்பர்களை அடைய வேண்டும்
  • நண்பர்கள் அல்லாதாவர்களிடமும் நிறைய பேசி அவர்களை அறிய வேண்டும்
  • எழுத வேண்டியதை எழுத வேண்டும்; பேச வேண்டியதை மட்டுமே பேச வேண்டும்
  • எந்த முடிவையும் ஆசை காரணமாக எடுக்கக் கூடாது – நிறைய ஆராய்ந்து கலந்தாலோசித்து சிறு ஐயம் இருந்தாலும் முடிவை கைவிட வேண்டும்
  • மிக முக்கியமானவர்களை மட்டுமே வெறுக்க வேண்டும். கணிசமானோர் நம் வெறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள்’
  • உணர்ச்சி உப்பைப் போல – ரொம்ப கொஞ்சமாய் இருந்தாலே சுவைக்கும்.
  • வேலை, பணம், அதிகாரம் சம்மந்தப்பட்ட எதிலும் உணர்ச்சிவசப்படக் கூடாது – திட்டமிட்டு அடைய வேண்டும். இயலாவிட்டால் மீண்டும் திட்டமிட்டுவது பற்றி திட்டமிட வேண்டும்.
  • லைட்டான விஷயங்களை படிப்பதை குறைத்து, தீவிரமான எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டும்
  • எழுத்து திட்டங்கள் குறித்து தினமும் பகற்கனவு காண வேண்டும்
  • தினமும் ரெண்டு பக்கமாவது எழுத வேண்டும்
  • எழுதுவதற்காக ஏதாவது ஒரு பெரிய திட்டம் வைத்துக் கொள்ள வேண்டும் – அது வெற்றி பெறாவிட்டால் இன்னொரு திட்டம் உடனே வகுக்க வேண்டும்
  • முனைவர் பட்ட ஆய்வு வேலையில் பாதியாவது அடுத்த பிறந்த நாளுக்குள் முடிக்க வேண்டும்
  • கராத்தேவை முடிந்தால் மீண்டும் பயில துவங்க வேண்டும்
  • உடல் எடையை 70க்குள் வைத்துக் கொள்ள வேண்டும்
  • நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்
  • நிறைய புதிய கவிதைகளை படித்து மொழியாக்க வேண்டும்
  • படிக்கும் புது சொற்களுக்கான ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும்
  • எழுத்தாளன் என்கிற பிரக்ஞை கூடாது – நான் உரையாடல்களை உருவாக்குபவன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்

கருத்துகள்

King Viswa இவ்வாறு கூறியுள்ளார்…
//நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்//

அபிலாஷ்,


தயவு செய்து நீங்களே காலையிலும் + மாலையிலும் (அல்லது இரவிலும்) ஒரு முறை நடை பயிற்ச்சிக்கென உங்கள் வீட்டு செல்லக்குட்டியை அழைத்து செல்லுங்கள்.


அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும்...

வாழ்த்துக்கள்...
Sai Ram இவ்வாறு கூறியுள்ளார்…
practical?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களின் குறிக்கோள் தமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயன்பட வல்லதாய் இருக்கின்றது. சிலவற்றை யாமும் சுவீகரித்துக் கொண்டு முயலப் போகின்றோம். நன்றிகள்.

---  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...