முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்த நாள் உறுதிமொழிகள்




இந்த பிறந்தநாளுக்கான சில உறுதிமொழிகள்
அடுத்த வருடத்தில்

  • இன்னும் நிறைய நண்பர்களை அடைய வேண்டும்
  • நண்பர்கள் அல்லாதாவர்களிடமும் நிறைய பேசி அவர்களை அறிய வேண்டும்
  • எழுத வேண்டியதை எழுத வேண்டும்; பேச வேண்டியதை மட்டுமே பேச வேண்டும்
  • எந்த முடிவையும் ஆசை காரணமாக எடுக்கக் கூடாது – நிறைய ஆராய்ந்து கலந்தாலோசித்து சிறு ஐயம் இருந்தாலும் முடிவை கைவிட வேண்டும்
  • மிக முக்கியமானவர்களை மட்டுமே வெறுக்க வேண்டும். கணிசமானோர் நம் வெறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள்’
  • உணர்ச்சி உப்பைப் போல – ரொம்ப கொஞ்சமாய் இருந்தாலே சுவைக்கும்.
  • வேலை, பணம், அதிகாரம் சம்மந்தப்பட்ட எதிலும் உணர்ச்சிவசப்படக் கூடாது – திட்டமிட்டு அடைய வேண்டும். இயலாவிட்டால் மீண்டும் திட்டமிட்டுவது பற்றி திட்டமிட வேண்டும்.
  • லைட்டான விஷயங்களை படிப்பதை குறைத்து, தீவிரமான எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டும்
  • எழுத்து திட்டங்கள் குறித்து தினமும் பகற்கனவு காண வேண்டும்
  • தினமும் ரெண்டு பக்கமாவது எழுத வேண்டும்
  • எழுதுவதற்காக ஏதாவது ஒரு பெரிய திட்டம் வைத்துக் கொள்ள வேண்டும் – அது வெற்றி பெறாவிட்டால் இன்னொரு திட்டம் உடனே வகுக்க வேண்டும்
  • முனைவர் பட்ட ஆய்வு வேலையில் பாதியாவது அடுத்த பிறந்த நாளுக்குள் முடிக்க வேண்டும்
  • கராத்தேவை முடிந்தால் மீண்டும் பயில துவங்க வேண்டும்
  • உடல் எடையை 70க்குள் வைத்துக் கொள்ள வேண்டும்
  • நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்
  • நிறைய புதிய கவிதைகளை படித்து மொழியாக்க வேண்டும்
  • படிக்கும் புது சொற்களுக்கான ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும்
  • எழுத்தாளன் என்கிற பிரக்ஞை கூடாது – நான் உரையாடல்களை உருவாக்குபவன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்

கருத்துகள்

King Viswa இவ்வாறு கூறியுள்ளார்…
//நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்//

அபிலாஷ்,


தயவு செய்து நீங்களே காலையிலும் + மாலையிலும் (அல்லது இரவிலும்) ஒரு முறை நடை பயிற்ச்சிக்கென உங்கள் வீட்டு செல்லக்குட்டியை அழைத்து செல்லுங்கள்.


அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும்...

வாழ்த்துக்கள்...
Sai Ram இவ்வாறு கூறியுள்ளார்…
practical?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களின் குறிக்கோள் தமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயன்பட வல்லதாய் இருக்கின்றது. சிலவற்றை யாமும் சுவீகரித்துக் கொண்டு முயலப் போகின்றோம். நன்றிகள்.

---  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.