முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்த நாள் உறுதிமொழிகள்




இந்த பிறந்தநாளுக்கான சில உறுதிமொழிகள்
அடுத்த வருடத்தில்

  • இன்னும் நிறைய நண்பர்களை அடைய வேண்டும்
  • நண்பர்கள் அல்லாதாவர்களிடமும் நிறைய பேசி அவர்களை அறிய வேண்டும்
  • எழுத வேண்டியதை எழுத வேண்டும்; பேச வேண்டியதை மட்டுமே பேச வேண்டும்
  • எந்த முடிவையும் ஆசை காரணமாக எடுக்கக் கூடாது – நிறைய ஆராய்ந்து கலந்தாலோசித்து சிறு ஐயம் இருந்தாலும் முடிவை கைவிட வேண்டும்
  • மிக முக்கியமானவர்களை மட்டுமே வெறுக்க வேண்டும். கணிசமானோர் நம் வெறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள்’
  • உணர்ச்சி உப்பைப் போல – ரொம்ப கொஞ்சமாய் இருந்தாலே சுவைக்கும்.
  • வேலை, பணம், அதிகாரம் சம்மந்தப்பட்ட எதிலும் உணர்ச்சிவசப்படக் கூடாது – திட்டமிட்டு அடைய வேண்டும். இயலாவிட்டால் மீண்டும் திட்டமிட்டுவது பற்றி திட்டமிட வேண்டும்.
  • லைட்டான விஷயங்களை படிப்பதை குறைத்து, தீவிரமான எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டும்
  • எழுத்து திட்டங்கள் குறித்து தினமும் பகற்கனவு காண வேண்டும்
  • தினமும் ரெண்டு பக்கமாவது எழுத வேண்டும்
  • எழுதுவதற்காக ஏதாவது ஒரு பெரிய திட்டம் வைத்துக் கொள்ள வேண்டும் – அது வெற்றி பெறாவிட்டால் இன்னொரு திட்டம் உடனே வகுக்க வேண்டும்
  • முனைவர் பட்ட ஆய்வு வேலையில் பாதியாவது அடுத்த பிறந்த நாளுக்குள் முடிக்க வேண்டும்
  • கராத்தேவை முடிந்தால் மீண்டும் பயில துவங்க வேண்டும்
  • உடல் எடையை 70க்குள் வைத்துக் கொள்ள வேண்டும்
  • நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்
  • நிறைய புதிய கவிதைகளை படித்து மொழியாக்க வேண்டும்
  • படிக்கும் புது சொற்களுக்கான ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும்
  • எழுத்தாளன் என்கிற பிரக்ஞை கூடாது – நான் உரையாடல்களை உருவாக்குபவன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்

கருத்துகள்

King Viswa இவ்வாறு கூறியுள்ளார்…
//நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்//

அபிலாஷ்,


தயவு செய்து நீங்களே காலையிலும் + மாலையிலும் (அல்லது இரவிலும்) ஒரு முறை நடை பயிற்ச்சிக்கென உங்கள் வீட்டு செல்லக்குட்டியை அழைத்து செல்லுங்கள்.


அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும்...

வாழ்த்துக்கள்...
Sai Ram இவ்வாறு கூறியுள்ளார்…
practical?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களின் குறிக்கோள் தமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயன்பட வல்லதாய் இருக்கின்றது. சிலவற்றை யாமும் சுவீகரித்துக் கொண்டு முயலப் போகின்றோம். நன்றிகள்.

---  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...