Skip to main content

மோடியும் இந்தியர்களும்: நமக்கு அறத்தில் நம்பிக்கை இல்லையா?




இன்றைய ஹிந்துவில் தீமையின் சகஜத்தன்மை (The Banality of Evil) என்றொரு முக்கிய கட்டுரை வந்துள்ளது. எவ்வளவு எளிதாக நம்மால் இனப்படுகொலைகள், குற்றங்களை மன்னித்து மோடி போன்றவர்களை முன்னேற்றத்தின் பெயரில் ஏற்க முடிகிறது என இக்கட்டுரை வியக்கிறது. இன்றைய காலத்தின் மிகப்பெரிய துரதிஷ்டம் நமக்கு இப்படியெல்லாம் மோடியை நியாயப்படுத்த தோன்றுவது தான். அதேவேளை இது வெறும் ஒரு காலகட்டத்தின் பிரச்சனை என நாம் சுருக்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். மோடியின் குற்றங்களை மட்டுமல்ல ராஜீவ் காந்தியின் கீழ் சீக்கியர்களை காங்கிரசார் எண்பதுகளின் இறுதியில் வேட்டையாடி கொன்றதையும் தான் எளிதில் மன்னித்து கடந்து விட்டோமே என கட்டுரையாளர் நிஸிம் கேட்கிறார். இங்கிருந்து நாம் விவாத்த்தை துவக்க வேண்டும். ஒருவேளை இந்தியர்களுக்கு அடிப்படையில் நீதி, அறம் மீதெல்லாம் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லையோ? நாம் அறம் என இன்று நினைப்பது ஒரு ஐரோப்பிய அளவுகோலோ?

ஒரு நல்லது நடக்க பொய் சொல்ல்லாம் என வள்ளுவர் சொன்னார். ஒரு போரில் நன்மை ஜெயிக்க எவ்வளவு மாபாதகங்களையும் செய்யலாம் என கிருஷ்ணர் சொன்னார். உண்மை ஜெயிக்க பொய் சொல்லுபவர் பொய்யன் ஆக மாட்டாரா? நன்மை ஜெயிக்க தீமை செய்பவர் தீயவர் ஆக மாட்டாரா? இந்த கேள்வியெல்லாம் ஒரு ஐரோப்பிய மனம் கேட்க்க் கூடியது. இந்திய அறம் என்பது நன்மை - தீமை, சரி – தவறு ஆகியவற்றை கடந்த்தாக இருக்கிறது. எல்லாம் மொத்த்த்தில் சம்மாகி விடும் என்பது இந்திய மனப்பான்மை. அதனால் தான் மோடி 2002இல் இஸ்லாமிய படுகொலைகளுக்கு வழிகாட்டி ஆதரித்திருக்கலாம். ஆனால் அதன் பிறகு அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. இஸ்ரத் ஜெஹானை என்கவுண்டர் செய்தார்களே? இருக்கலாம். ஆனால் அதன் பிறகு ஒன்றும் செய்யவில்லையே, அவர் குஜராத்தை பெருமளவில் முன்னேற்றி இருக்கிறாரே என கேட்கிறது சராசரி இந்தியனின் குரல். இதே சராசரி இந்தியன் தான் பெரும் ஊழல்களில் ஈடுபட்டோரை, கொலைக்குற்றம் சுமத்தப்பட்டோரை மீண்டும் மீண்டும் தேரதலில் தேர்ந்தெடுத்து அதிகாரம் அளிக்கிறான். குஜராத்தில் இஸ்லாமியர் வேறு வழியின்றி மோடியை ஆதரிக்கிறார்கள் என நியாயப்படுத்த பார்த்தாலும் அவர் எப்படி மீண்டும் அங்கு ஜெயித்தார் என்பது முக்கியமான கேள்வி.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது குற்றம் இழைத்த வெள்ளை அதிகாரிகளை விசாரித்து தண்டிக்கும் வழக்கம் இருந்த்து. என்னதான் கொள்ளை அடித்தாலும் சட்டரீதியாய் சரியாய் இருக்க அவர்கள் முயன்றார்கள். பொதுவாக அவர்களுக்கு ஒரு அறவுணர்வு இருந்த்து. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான டையரை ஆங்கில பாராளுமன்றம் கண்டித்து ஓய்வு பெற்று இந்தியாவை விட்டு வெளியேறும் படி கட்டளையிட்டது. இந்தியாவில் இப்படி ஒரு விசயத்தை தொண்ணூறுகளில் ராஜீவ் காந்திக்கு எதிராகவோ, 2002இல் மோடிக்கு எதிராகவோ ஒரு அதிகாரபூர்வ அமைப்பு, நீதிமன்றமோ பாராளுமன்றமோ, செய்யுமா? இல்லை. இந்திய மக்களின் மனசாட்சி மோடியை வெறுத்து ஒதுக்குமா? இல்லை.
மோடி தன் அமைச்சர்களுடன் சேர்ந்து சில கன்னிப்பெண்களை கற்பழித்து கொன்றிருந்தால் அவரது அரசியல் வாழ்வு எப்போதோ முடிந்திருக்கும். இந்தியாவில் இரு விசயங்கள் தான் கடுமையாக கண்டிக்கப்படுபவை, மன்னிப்பற்றவை. ஒன்று கற்பழிப்பு. இன்னொன்று பெரும்பான்மையினரின் மத சின்னங்களை, சமூக அடையாளத்தை அவமானித்தல். ஒரு நாஸ்திகரான அரசியல் தலைவர் பெரிய கோயிலுக்கு சென்று சிவன் அல்லது பெருமாள் போன்ற தெய்வத்தின் சிலை மீது ஒன்றுக்கடித்து அவமதித்தார் என்று கற்பனை செய்வோம். அதன் ஒரு புகைப்படமும் வெளியாகி பதிவாகிறது. அதன் பின் அவரால் இந்திய அரசியலில் இயங்கவே முடியாது. இங்கு மத்த்தை விமர்சித்து கேள்வி கேட்கலாம். ஆனால் அவமானப்படுத்த முடியாது. சட்டத்தை, கலைகளை, ஞானத்தை எதை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். ஆயிரம் பேரைக் கொல்ல்லாம். ஆனால் இரண்டு விசயங்களை மட்டும் தொடாமல் இருந்தால் இந்தியர்கள் உங்களை மன்னித்து விடுவார்கள்.
 ஐரோப்பியர்கள் போல் நமக்கு ஒரு கராறான அறவுணர்வு இல்லை. யூதர்களை ஹிட்லர் கொன்றதற்கு கடுமையான விசாரணை நட்த்தி அவருக்கு உதவிய அதிகாரிகளை பின்னர் தண்டித்தார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு கொடூரம் நடந்திருந்தால் விசாரித்து தண்டிக்க மக்கள் ஒருக்காலும் கோர மாட்டார்கள். மறந்து மன்னித்து கடந்து விடுவார்கள்.
ஒன்று நாம் அறத்தை ஐரோப்பியர்களைப் போல் சரி தவறு என்றல்லாமல் வேறுவிதமாய் புரிந்து கொள்கிறோம். அல்லது அடிப்படையில் நமக்கு அறத்தில் நம்பிக்கையில்லை. நமக்கு பாலியல் ஒழுக்கம் மற்றும் மதம், சாதி போன்ற குழு அடையாளங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. ஏதோ ஒரு கோளாறு உள்ளது.
ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஒரு சாதியினரை மலம் அள்ள மட்டுமே பயன்படுத்தின சமூகம் நாம். அதற்காய் சிறிதும் நாம் குற்றவுணர்வு அடைந்ததில்லை. லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட சாதியினரை மலம் அள்ள வைக்கும் வேலையை இன்றும் இந்திய ரயில்வே கூச்சமில்லாமல் செய்து வருகிறது. இது நம் கூட்டுமனசாட்சியை கொஞ்சமும் தொந்தரவு செய்யவில்லை கேரளா படித்த மக்கள் கொண்ட மாநிலம். அங்கே ஏகப்பட்ட பொது கழிப்பறைகள் உள்ளன, ஆனால் மக்களுக்கு அவற்றை சுத்தப்படுத்துவதில் அக்கறை இல்லை என்கிறது ஒரு சேதி. இதில் ஒரு சாதிய மனப்பான்மை ஒளிந்துள்ளது. படித்து பண்பாட்டில் மேம்பட்ட மாநிலத்தவர் கூட அறமற்றவர்கள் தான். ஆக இதை மக்களின் பின்புலம் சம்மந்தப்பட்ட விசயமாகவும் கருதமுடியாது. மோடியின் படுகொலைகளை தீவிரமாக ஆதரிப்போர் நல்ல கல்வியறிவு பெற்று சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர் தான்.
இந்திய மனம் எனும் எந்திரம் கோளாறாகி உள்ளது – சில நட் போல்டுகளை காணவில்லை. இதை சரி செய்யாமல் மோடிகள் உருவாவதையோ பதவியை பிடிப்பதையோ தடுக்க முடியாது.

Comments

ப்ளாட்டுகளில் வசிப்போர் அவர்களாகவேதானே கழிவறையை சுத்தம் செய்து கொள்கின்றனர்.கழிவறை கோப்பைகளை சுத்தம் செய்ய பயன் படுத்தும் கிளீனர்கள் மலம் அள்ளும் சாதியினருக்காக விளம்பரப்படுத்த படுவதில்லை என்பது என் எண்ணம்.துணிகளை துவைப்பது,சாப்பாட்டு பாத்திரங்களை கழுவுவது,அல்லது நமக்கு நாமே கழுவிக்கொள்ளுவதை குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதை போன்று கழிவறைகளை சுத்தப்படுத்துவதையும் சொல்லிக்கொடுத்தால் மாற்றம் நிகழுமல்லவா.அதை தொழிலாய் செய்யும் மக்களை பார்த்து முகம் சுழிப்பதாவது குறையுமே.
Unknown said…
நம் அறமே சாதியின் பின்னால் தான் இருக்கிறது. கற்பழிப்பு கூட நடுத்தரவர்க்க, உயர்சாதி, இடைச்சாதி பெண்ணாக இருந்தால் தான் நீங்க சொல்ற effect எல்லாம்...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...