முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஊழல் லீக்

"நீங்க கவலைப்படாதேள், குத்தம் பண்றாவாளை ஸ்வாமி காப்பாத்துவா. ஷேமமா வச்சுப்பா. தட்டில கொஞ்சம் தாராளமா அள்ளிப் போடுங்கோ"

ஊழல் குற்றச்சாட்டு காரணமாய் உச்சநீதி மன்றத்தால் பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பிடிவாதக்காரர். வரும் செப்டம்பரோடு அவரது பதவிக் காலம் முடிகிறது. நீதிமன்றத் தலையீட்டால் அவர் பதவி இழந்த பின்னரும் தன்னை மீள் அமர்த்தும் படி கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிமன்றம் “முக்தல் விசாரணை குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நீங்க தான் முதல் ஆள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று அவரை மீண்டும் கண்டித்த்து. இப்படி அவர் பதவியை அண்டிக் கொண்டே இருப்பதால் தான் இன்னொரு புறம் ஐ.பி.எல் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க முடியாமலே போகின்றன. தலைவர் தான் பிரதான குற்றவாளி, அவரை பாதுகாப்பதிலேயே வாரியத்தின் ஆற்றல் எல்லாம் செலவாகும் என்றால் வேறு குற்றங்களை எப்படி விசாரிப்பது? இன்னொரு புறம் ஸ்ரீனிவாசன் வாரியத்தின் மீது தனக்குள்ள பிடியை விடாமல் இருப்பதிலும் உன்னிப்பாக இருக்கிறார். ச்சாங்க் மனோகர் போன்று அவருக்கு எதிரான ஒரு குழுவும் வாரியத்தினுள் உள்ளது. தன் பிடி இளகினால் ஊழல் வழக்கில் இருந்து தன் மருமகன் மெய்யப்பனை காப்பாற்றுவது சிரம்மாகும் என அவர் அறிவார்.

ஸ்ரீனிவாசன் பதவி நீங்கியதும் அவ்விடத்தில் தனக்கு அணுக்கமான ஷிவ்லால் யாதவை கொண்டு வந்தார். அவரும் ஊழல் பார்ட்டி தான். அதனால் அவர் இருந்தால் தன்னை கேட்டே எதையும் செய்வார் என ஸ்ரீனி அறிவார். இப்பிரச்சனையை மேம்போக்காய் விசாரிக்க ஒரு போங்கு குழுவை அமைத்தனர். இதை நீதிமன்றம் நிராகரித்த்து. இப்போது இன்னொரு விசாரணைக் குழுவின் பட்டியலை பரிசீலனைக்காக நீதிமன்றத்திடம் வாரியம் கொடுத்துள்ளது. முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன், முன்னாள் தலைமை நீதிபதி ஜெய்நாராயண் பட்டேல் மற்றும் ரவி சாஸ்திரி. மேம்போக்காய் ரொம்ப பந்தாவாய் தெரிந்தாலும் இப்பட்டியலும் தவறான நோக்கம் கொண்டதே.
ராகவன் கம்யுத் எனும் தமிழக TNCA கிரிக்கெட் கிளப் ஒன்றின் செயலாளர். இதன் தலைவர் ஸ்ரீனிவாசன். மேலும் இவ்வூழல் குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதி முக்தலிடம் தனக்கு ஸ்ரீனிவாசனை தனிப்பட்ட முறையில் தெரியும் எனக் கூறியுள்ளார். அதாவது ஸ்ரீனிவாசன் ஒருவித்த்தில் ராகவனுக்கு முதலாளியை போன்றவர்.
ரவிசாஸ்திரி வாரியத்திடம் சம்பளம் வாங்கும் வர்ணனையாளர். அவர் சமீபமாக ஸ்ரீனிவாசனை மிகவும் புகழ்ந்து பேசி வருபவர். இவரும் ஸ்ரீனிவாசனின் வேலைக்கார்ர் தான்.
இறுதியாக ஜெய்நாராயண் பட்டேல் ஷிவ்லால் யாதவின் மச்சான்.
இப்படி குடும்பத்துக்குள்ளே மாமன் மச்சான் சேர்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விசாரிக்க போகிறார்களாம். இந்த பட்டியலை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்தது. இவ்வழக்கை வாரியம் நீர்த்துப் போக வைக்க எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது. தற்போது வந்துள்ள செய்திப்படி நீதிமன்றம் இக்குழுவை நிராகரித்துள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்றமும் போதுமானபடி கராறாய் இல்லை. நியாயப்படி நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ போல் ஒரு வெளி அமைப்பு தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இதனால் சில நட்த்திர வீர்ர்களின் பெயர் அடிபடும் என நீதிமன்றம் அறியும். அப்படி நடந்தால் அது ஐ.பி.எல் வணிகத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் பொருளாதார மதிப்பை பாதிக்கும். இதே போல் தான் சஞ்சய் தத்தின் தண்டனையிலும் நடந்த்து. தத்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், அல்லாவிட்டால் காசு நஷ்டமாகும் என பெயிலில் போக அனுமதித்தார்கள். இதையே ஒரு சாதாரண ஆள் கேட்டால் அனுமதிப்பார்களா? இல்லை. நம்மூரில் பணக்கார்ர்களுக்காக நீதி இப்படித் தான் வளைக்கபடுகிறது. அந்த 13 பேரின் பெயர்களையாவது நீதிமன்றம் வெளியிட வேண்டும். குறிப்பாய் சென்னை சூப்பர் கிங்ஸில் ஊழல் செய்த அந்த வீர்ர்கள் யார்? அவர்களை காப்பாற்ற முயல்வது யார்? இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நாங்கள் நம்பவில்லை. குறைந்த்து உண்மையாவது வெளியாகட்டும். நாங்கள் இவர்களின் முகங்களில் சாணி வாரி அடிக்கிறோம். எங்களால் அது மட்டுமே செய்ய முடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...