Skip to main content

இந்திய ஊழல் லீக்

"நீங்க கவலைப்படாதேள், குத்தம் பண்றாவாளை ஸ்வாமி காப்பாத்துவா. ஷேமமா வச்சுப்பா. தட்டில கொஞ்சம் தாராளமா அள்ளிப் போடுங்கோ"

ஊழல் குற்றச்சாட்டு காரணமாய் உச்சநீதி மன்றத்தால் பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பிடிவாதக்காரர். வரும் செப்டம்பரோடு அவரது பதவிக் காலம் முடிகிறது. நீதிமன்றத் தலையீட்டால் அவர் பதவி இழந்த பின்னரும் தன்னை மீள் அமர்த்தும் படி கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிமன்றம் “முக்தல் விசாரணை குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நீங்க தான் முதல் ஆள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று அவரை மீண்டும் கண்டித்த்து. இப்படி அவர் பதவியை அண்டிக் கொண்டே இருப்பதால் தான் இன்னொரு புறம் ஐ.பி.எல் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க முடியாமலே போகின்றன. தலைவர் தான் பிரதான குற்றவாளி, அவரை பாதுகாப்பதிலேயே வாரியத்தின் ஆற்றல் எல்லாம் செலவாகும் என்றால் வேறு குற்றங்களை எப்படி விசாரிப்பது? இன்னொரு புறம் ஸ்ரீனிவாசன் வாரியத்தின் மீது தனக்குள்ள பிடியை விடாமல் இருப்பதிலும் உன்னிப்பாக இருக்கிறார். ச்சாங்க் மனோகர் போன்று அவருக்கு எதிரான ஒரு குழுவும் வாரியத்தினுள் உள்ளது. தன் பிடி இளகினால் ஊழல் வழக்கில் இருந்து தன் மருமகன் மெய்யப்பனை காப்பாற்றுவது சிரம்மாகும் என அவர் அறிவார்.

ஸ்ரீனிவாசன் பதவி நீங்கியதும் அவ்விடத்தில் தனக்கு அணுக்கமான ஷிவ்லால் யாதவை கொண்டு வந்தார். அவரும் ஊழல் பார்ட்டி தான். அதனால் அவர் இருந்தால் தன்னை கேட்டே எதையும் செய்வார் என ஸ்ரீனி அறிவார். இப்பிரச்சனையை மேம்போக்காய் விசாரிக்க ஒரு போங்கு குழுவை அமைத்தனர். இதை நீதிமன்றம் நிராகரித்த்து. இப்போது இன்னொரு விசாரணைக் குழுவின் பட்டியலை பரிசீலனைக்காக நீதிமன்றத்திடம் வாரியம் கொடுத்துள்ளது. முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன், முன்னாள் தலைமை நீதிபதி ஜெய்நாராயண் பட்டேல் மற்றும் ரவி சாஸ்திரி. மேம்போக்காய் ரொம்ப பந்தாவாய் தெரிந்தாலும் இப்பட்டியலும் தவறான நோக்கம் கொண்டதே.
ராகவன் கம்யுத் எனும் தமிழக TNCA கிரிக்கெட் கிளப் ஒன்றின் செயலாளர். இதன் தலைவர் ஸ்ரீனிவாசன். மேலும் இவ்வூழல் குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதி முக்தலிடம் தனக்கு ஸ்ரீனிவாசனை தனிப்பட்ட முறையில் தெரியும் எனக் கூறியுள்ளார். அதாவது ஸ்ரீனிவாசன் ஒருவித்த்தில் ராகவனுக்கு முதலாளியை போன்றவர்.
ரவிசாஸ்திரி வாரியத்திடம் சம்பளம் வாங்கும் வர்ணனையாளர். அவர் சமீபமாக ஸ்ரீனிவாசனை மிகவும் புகழ்ந்து பேசி வருபவர். இவரும் ஸ்ரீனிவாசனின் வேலைக்கார்ர் தான்.
இறுதியாக ஜெய்நாராயண் பட்டேல் ஷிவ்லால் யாதவின் மச்சான்.
இப்படி குடும்பத்துக்குள்ளே மாமன் மச்சான் சேர்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விசாரிக்க போகிறார்களாம். இந்த பட்டியலை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்தது. இவ்வழக்கை வாரியம் நீர்த்துப் போக வைக்க எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது. தற்போது வந்துள்ள செய்திப்படி நீதிமன்றம் இக்குழுவை நிராகரித்துள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்றமும் போதுமானபடி கராறாய் இல்லை. நியாயப்படி நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ போல் ஒரு வெளி அமைப்பு தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இதனால் சில நட்த்திர வீர்ர்களின் பெயர் அடிபடும் என நீதிமன்றம் அறியும். அப்படி நடந்தால் அது ஐ.பி.எல் வணிகத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் பொருளாதார மதிப்பை பாதிக்கும். இதே போல் தான் சஞ்சய் தத்தின் தண்டனையிலும் நடந்த்து. தத்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், அல்லாவிட்டால் காசு நஷ்டமாகும் என பெயிலில் போக அனுமதித்தார்கள். இதையே ஒரு சாதாரண ஆள் கேட்டால் அனுமதிப்பார்களா? இல்லை. நம்மூரில் பணக்கார்ர்களுக்காக நீதி இப்படித் தான் வளைக்கபடுகிறது. அந்த 13 பேரின் பெயர்களையாவது நீதிமன்றம் வெளியிட வேண்டும். குறிப்பாய் சென்னை சூப்பர் கிங்ஸில் ஊழல் செய்த அந்த வீர்ர்கள் யார்? அவர்களை காப்பாற்ற முயல்வது யார்? இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நாங்கள் நம்பவில்லை. குறைந்த்து உண்மையாவது வெளியாகட்டும். நாங்கள் இவர்களின் முகங்களில் சாணி வாரி அடிக்கிறோம். எங்களால் அது மட்டுமே செய்ய முடியும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...