முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஊழல் லீக்

"நீங்க கவலைப்படாதேள், குத்தம் பண்றாவாளை ஸ்வாமி காப்பாத்துவா. ஷேமமா வச்சுப்பா. தட்டில கொஞ்சம் தாராளமா அள்ளிப் போடுங்கோ"

ஊழல் குற்றச்சாட்டு காரணமாய் உச்சநீதி மன்றத்தால் பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பிடிவாதக்காரர். வரும் செப்டம்பரோடு அவரது பதவிக் காலம் முடிகிறது. நீதிமன்றத் தலையீட்டால் அவர் பதவி இழந்த பின்னரும் தன்னை மீள் அமர்த்தும் படி கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிமன்றம் “முக்தல் விசாரணை குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நீங்க தான் முதல் ஆள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று அவரை மீண்டும் கண்டித்த்து. இப்படி அவர் பதவியை அண்டிக் கொண்டே இருப்பதால் தான் இன்னொரு புறம் ஐ.பி.எல் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்க முடியாமலே போகின்றன. தலைவர் தான் பிரதான குற்றவாளி, அவரை பாதுகாப்பதிலேயே வாரியத்தின் ஆற்றல் எல்லாம் செலவாகும் என்றால் வேறு குற்றங்களை எப்படி விசாரிப்பது? இன்னொரு புறம் ஸ்ரீனிவாசன் வாரியத்தின் மீது தனக்குள்ள பிடியை விடாமல் இருப்பதிலும் உன்னிப்பாக இருக்கிறார். ச்சாங்க் மனோகர் போன்று அவருக்கு எதிரான ஒரு குழுவும் வாரியத்தினுள் உள்ளது. தன் பிடி இளகினால் ஊழல் வழக்கில் இருந்து தன் மருமகன் மெய்யப்பனை காப்பாற்றுவது சிரம்மாகும் என அவர் அறிவார்.

ஸ்ரீனிவாசன் பதவி நீங்கியதும் அவ்விடத்தில் தனக்கு அணுக்கமான ஷிவ்லால் யாதவை கொண்டு வந்தார். அவரும் ஊழல் பார்ட்டி தான். அதனால் அவர் இருந்தால் தன்னை கேட்டே எதையும் செய்வார் என ஸ்ரீனி அறிவார். இப்பிரச்சனையை மேம்போக்காய் விசாரிக்க ஒரு போங்கு குழுவை அமைத்தனர். இதை நீதிமன்றம் நிராகரித்த்து. இப்போது இன்னொரு விசாரணைக் குழுவின் பட்டியலை பரிசீலனைக்காக நீதிமன்றத்திடம் வாரியம் கொடுத்துள்ளது. முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன், முன்னாள் தலைமை நீதிபதி ஜெய்நாராயண் பட்டேல் மற்றும் ரவி சாஸ்திரி. மேம்போக்காய் ரொம்ப பந்தாவாய் தெரிந்தாலும் இப்பட்டியலும் தவறான நோக்கம் கொண்டதே.
ராகவன் கம்யுத் எனும் தமிழக TNCA கிரிக்கெட் கிளப் ஒன்றின் செயலாளர். இதன் தலைவர் ஸ்ரீனிவாசன். மேலும் இவ்வூழல் குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதி முக்தலிடம் தனக்கு ஸ்ரீனிவாசனை தனிப்பட்ட முறையில் தெரியும் எனக் கூறியுள்ளார். அதாவது ஸ்ரீனிவாசன் ஒருவித்த்தில் ராகவனுக்கு முதலாளியை போன்றவர்.
ரவிசாஸ்திரி வாரியத்திடம் சம்பளம் வாங்கும் வர்ணனையாளர். அவர் சமீபமாக ஸ்ரீனிவாசனை மிகவும் புகழ்ந்து பேசி வருபவர். இவரும் ஸ்ரீனிவாசனின் வேலைக்கார்ர் தான்.
இறுதியாக ஜெய்நாராயண் பட்டேல் ஷிவ்லால் யாதவின் மச்சான்.
இப்படி குடும்பத்துக்குள்ளே மாமன் மச்சான் சேர்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விசாரிக்க போகிறார்களாம். இந்த பட்டியலை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்தது. இவ்வழக்கை வாரியம் நீர்த்துப் போக வைக்க எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது. தற்போது வந்துள்ள செய்திப்படி நீதிமன்றம் இக்குழுவை நிராகரித்துள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்றமும் போதுமானபடி கராறாய் இல்லை. நியாயப்படி நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ போல் ஒரு வெளி அமைப்பு தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இதனால் சில நட்த்திர வீர்ர்களின் பெயர் அடிபடும் என நீதிமன்றம் அறியும். அப்படி நடந்தால் அது ஐ.பி.எல் வணிகத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் பொருளாதார மதிப்பை பாதிக்கும். இதே போல் தான் சஞ்சய் தத்தின் தண்டனையிலும் நடந்த்து. தத்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், அல்லாவிட்டால் காசு நஷ்டமாகும் என பெயிலில் போக அனுமதித்தார்கள். இதையே ஒரு சாதாரண ஆள் கேட்டால் அனுமதிப்பார்களா? இல்லை. நம்மூரில் பணக்கார்ர்களுக்காக நீதி இப்படித் தான் வளைக்கபடுகிறது. அந்த 13 பேரின் பெயர்களையாவது நீதிமன்றம் வெளியிட வேண்டும். குறிப்பாய் சென்னை சூப்பர் கிங்ஸில் ஊழல் செய்த அந்த வீர்ர்கள் யார்? அவர்களை காப்பாற்ற முயல்வது யார்? இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நாங்கள் நம்பவில்லை. குறைந்த்து உண்மையாவது வெளியாகட்டும். நாங்கள் இவர்களின் முகங்களில் சாணி வாரி அடிக்கிறோம். எங்களால் அது மட்டுமே செய்ய முடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...