முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசனகர்த்தா


காட்சி 1

மீனவன்: “ஏய் மீனே என் தூண்டில்ல மாட்டிக்கிட்டியா. நான் சாத்தான்லே. என் கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது”

மீன்: “ஐயோ என்ன விடுலே. நான் மீன். என்ன விடுலே”

மீனவன் தூண்டிலை இழுத்து படகில் போடுகிறான்.

மீன்: “நான் சாகிறேன். ஐயோ நான் துடிக்கிறேன். துள்ளுறேன்.”

மீனவன்: “ஹா ஹா நான் சாத்தான்லே. நீ சாவுறே. நான் அதை பார்க்குறேன்.”


மீன்: “ஹா நான் செத்துட்டேன்”

ஆண்டவன் தோன்றுகிறார்: “நான் ஆண்டவன்”

மீனவன்: “என்னை மன்னியுங்கள் ஆண்டவரே. நான் பாவம் பண்ணீட்டேன்”

ஆண்டவன்: “உன்னை மன்னிச்சிட்டேன். ஏன்னா நான் ஆண்டவன்”

மீனவன்: “நன்றி ஆண்டவரே. ஸ்தோத்திரம். என் பாவக்கறைகளை கழுவீட்டீங்க. நான் அடுத்த மீனுக்கு தூண்டில் போடப் போறேன். ஏன்னா நான் சாத்தான்.”

ஒரு மீன் பக்கத்து மீன்களிடம்: “வாயைத் திறக்காதீங்கடீ. இவங்கிட்ட பேசினோம் வாயை மூட மாட்டான். பேசி பேசி வாயில தண்ணீ ஏறி ஏற்கனவே ஒரு மீன் செத்து போச்சு.”

டைரக்டர்: “இவ்வளவு வசனம் வேணாம்யா. வாட் ஐ திங்க் இஸ் ஒன் ஷாட், ஜஸ்ட் ஒன் ஷாட் – அதில சீனை முடிச்சிடலாம். “மீன் தூண்டில் ஆண்டவன் ஸ்தோத்திரம்” தட்ஸ் இனப். அடுத்த கிளைமேக்ஸ் சீனை சொல்லு.”

காட்சி 2:
ஹீரோ துப்பாக்கியால் சுடுகிறான்: “நான் உன்ன சுட்டுட்டேன். குண்டு உன்னை நோக்கி வருது. இதோ வந்திருச்சு. உன் இதயத்தை துளைச்சிருச்சு. நீ சாக போறே. நீ வில்லன்லே நீ சாகப் போறே”

வில்லன்: “ப்ளீஸ் சீக்கிரம் சொல்லி முடிங்க. நான் செத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.”

காட்சி 3
காலியான திரையரங்கு. ஒரே ஒரு பார்வையாளன் அசந்து தூங்குகிறான்.
திரை ஒளிர திடீரென ஒருவர் தோன்றுகிறார்: “வணக்கம் நான் இப்படத்தின் வசனகர்த்தா. படம் முடிந்து விட்டது. நீங்கள் போகலாம்”

பார்வையாளன் கண்ணை திருமிக் கொண்டு: “நான் இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கின பார்வையாளன். எனக்கு தூங்கணும்”

வசனகர்த்தா: “இந்த படத்தில் வந்த முக்கியமான படிமங்கள், குறியீடுகளை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். உங்களைப் போன்ற பொறுப்பற்ற பார்வையாளர்களால் இந்த படம் ... உலகப்புகழ் பெற வேண்டிய... இந்த படம் தோற்று விட்டது. இனி நான் இப்படத்தில் புதைந்துள்ள ஆழமான உண்மைகளை விளக்க போகிறேன். அதாவது...”

பார்வையாளர்: “யோவ் தியேட்டர் ஓனர் புரொஜக்டரை ஆப் பண்ணுய்யா”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...