முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசனகர்த்தா


காட்சி 1

மீனவன்: “ஏய் மீனே என் தூண்டில்ல மாட்டிக்கிட்டியா. நான் சாத்தான்லே. என் கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது”

மீன்: “ஐயோ என்ன விடுலே. நான் மீன். என்ன விடுலே”

மீனவன் தூண்டிலை இழுத்து படகில் போடுகிறான்.

மீன்: “நான் சாகிறேன். ஐயோ நான் துடிக்கிறேன். துள்ளுறேன்.”

மீனவன்: “ஹா ஹா நான் சாத்தான்லே. நீ சாவுறே. நான் அதை பார்க்குறேன்.”


மீன்: “ஹா நான் செத்துட்டேன்”

ஆண்டவன் தோன்றுகிறார்: “நான் ஆண்டவன்”

மீனவன்: “என்னை மன்னியுங்கள் ஆண்டவரே. நான் பாவம் பண்ணீட்டேன்”

ஆண்டவன்: “உன்னை மன்னிச்சிட்டேன். ஏன்னா நான் ஆண்டவன்”

மீனவன்: “நன்றி ஆண்டவரே. ஸ்தோத்திரம். என் பாவக்கறைகளை கழுவீட்டீங்க. நான் அடுத்த மீனுக்கு தூண்டில் போடப் போறேன். ஏன்னா நான் சாத்தான்.”

ஒரு மீன் பக்கத்து மீன்களிடம்: “வாயைத் திறக்காதீங்கடீ. இவங்கிட்ட பேசினோம் வாயை மூட மாட்டான். பேசி பேசி வாயில தண்ணீ ஏறி ஏற்கனவே ஒரு மீன் செத்து போச்சு.”

டைரக்டர்: “இவ்வளவு வசனம் வேணாம்யா. வாட் ஐ திங்க் இஸ் ஒன் ஷாட், ஜஸ்ட் ஒன் ஷாட் – அதில சீனை முடிச்சிடலாம். “மீன் தூண்டில் ஆண்டவன் ஸ்தோத்திரம்” தட்ஸ் இனப். அடுத்த கிளைமேக்ஸ் சீனை சொல்லு.”

காட்சி 2:
ஹீரோ துப்பாக்கியால் சுடுகிறான்: “நான் உன்ன சுட்டுட்டேன். குண்டு உன்னை நோக்கி வருது. இதோ வந்திருச்சு. உன் இதயத்தை துளைச்சிருச்சு. நீ சாக போறே. நீ வில்லன்லே நீ சாகப் போறே”

வில்லன்: “ப்ளீஸ் சீக்கிரம் சொல்லி முடிங்க. நான் செத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்.”

காட்சி 3
காலியான திரையரங்கு. ஒரே ஒரு பார்வையாளன் அசந்து தூங்குகிறான்.
திரை ஒளிர திடீரென ஒருவர் தோன்றுகிறார்: “வணக்கம் நான் இப்படத்தின் வசனகர்த்தா. படம் முடிந்து விட்டது. நீங்கள் போகலாம்”

பார்வையாளன் கண்ணை திருமிக் கொண்டு: “நான் இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கின பார்வையாளன். எனக்கு தூங்கணும்”

வசனகர்த்தா: “இந்த படத்தில் வந்த முக்கியமான படிமங்கள், குறியீடுகளை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். உங்களைப் போன்ற பொறுப்பற்ற பார்வையாளர்களால் இந்த படம் ... உலகப்புகழ் பெற வேண்டிய... இந்த படம் தோற்று விட்டது. இனி நான் இப்படத்தில் புதைந்துள்ள ஆழமான உண்மைகளை விளக்க போகிறேன். அதாவது...”

பார்வையாளர்: “யோவ் தியேட்டர் ஓனர் புரொஜக்டரை ஆப் பண்ணுய்யா”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...