Skip to main content

பெண் எழுத்தாளர்கள் போட்ட நோ பால்


பெண் எழுத்தாளர்கள்-ஜெ.மோ சர்ச்சையில் நியாயம் பெண்கள் பக்கமே என அறிவோம். ஆனாலும் இன்றைய ஊடக சூழலில் நியாயம் மட்டும் உங்கள் பக்கம் இருந்தால் போதாது – அதை சரியாய் சாதகமாய் பயன்படுத்த தெரிய வேண்டும். முன்பு போல் இருபது பேர் படிக்கிற சூழலில் அது எப்படியும் இருக்கலாம். ஆனால் முகநூலில் பல்லாயிரம் பேரும், நாளிதழ்கள் வழி லட்சக்கணக்கான பேரும் இந்த சர்ச்சையை கவனிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியமோ மார்க்ஸியமோ ஆணாதிக்கவாதமோ தெரியாது. ஒருவேளை இந்த சர்ச்சையின் போது தான் இதையெல்லாம் அறிகிறார்களாக இருக்கலாம். அதனால் இப்பிரச்சனையில் “நியாயம் யார் பக்கம்” எனத் தான் பொதுமக்கள் கேட்பார்கள்.


ஜெயமோகனை ஒரு பெண் வெறுப்பாளர் என கோருகிற பெண் எழுத்தாளர்கள் அறிக்கையை நேற்று படித்த போதே முக்கியமான தருணத்தில் கோல் அடித்து ஜெயமோகன் ஜெயித்து விடுவார் என நினைத்தேன். அப்படியே நிகழ்ந்தது. இனிமேல் இச்சண்டையை வெளியில் இருந்து பார்க்கும் பொது மக்களுக்கு இது ஜெ.மோவுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் இடையிலான ஒரு குழாயடி சண்டையாகவே தெரியும். அதுவும் ஜெ.மோ தனது இரண்டாவது மற்றும் மூன்றாம விளக்கங்களில் நிதானமாக பேசியிருப்பதால் அவர் நல்லவர் என்றும் பெண்கள் தான் நாகரிகமமில்லாமல் கத்துகிறார்கள் என்பது போன்ற ஒரு தவறான மனப்பதிவும் ஏற்படும்.

அறிக்கைகள் பொதுவாக எந்த பிரச்சனைக்கும் இறுதி ஆணி அடித்து சாம்பிராணி காட்டும். ஆனால் அறிக்கைகளை அரசியல் விளையாட்டில் ஒரு சாதுர்ய தந்திரமாகவும் பயன்படுத்தலாம். அவ்விசயத்தில் தான் இதை எழுதிய பெண் எழுத்தாளர்கள் சிலர் சொதப்பி விட்டார்கள்.

இந்த அறிக்கையை எப்படி எழுதியிருக்க வேண்டும் என்கிற கேள்வியை கேட்கும் முன் இதற்கு முன்னான ஜெ.மோ சர்ச்சைகளில் சாரு மற்றும் மனுஷ் நடந்து கொண்ட விதங்களை பாருங்கள். எப்போது சாருவுடன் மோதினாலும் ஜெ.மோ தோற்றுப் போவார். ஏனென்றால் சாரு அவரை மிக மோசமாய் பகடி பண்ணி விடுவார். ஜெ.மோவின் மோசமான வசைகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் சிரித்துக் கொண்டே அதை அவருக்கு எதிரான கிண்டலாக மாற்றி விடுவார். மனுஷ் ஜெ.மோவின் குற்றங்களை பட்டியலிடாமல் தன் தரப்பு நியாயங்களை தர்க்கரீதியாக பட்டியலிடுவார். இவ்விசயங்களில் ஜெ.மோ (பெண்கள் விசயத்தில் போல் அல்லாமல்) அடுத்தடுத்து விளக்கங்களும் பதிலடிகளும் தராமல் வாயை மூடிக் கொண்டார். ஏனென்றால் தான் என்ன கோல் அடிக்க முயன்றாலும் பந்து தன் கட்டுப்பாட்டில் இல்லை என அவர் அறிந்திருந்தார்.

பெண் எழுத்தாளர்கள் தம் தரப்பு நியாயங்களை பொதுவில் வைப்பதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்களின் இலக்கிய பங்களிப்பை, அது ஏற்படுத்திய எதிர்வினைகளை பட்டியலிட்டு கடந்த இருபது வருடங்களில் இலக்கிய வளர்ச்சிக்கு அரசியல் விழிப்புணர்வுக்கும் தாம் என்னவெல்லாம் செய்தோம் என கூறியிருக்கலாம். பல பெண் கவிஞர்கள் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கவிதைகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளன. பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இருபதாண்டுகளின் முக்கியமான தமிழ் பெண் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை பட்டியலிட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் புதிதாய் எழுத அந்த ஆண் கவிஞர்கள் இதனோடு ஒப்பிடுகையில் சொற்பமாய் தான் சாதித்திருக்கிறார்கள் என கூறியிருக்கலாம். இந்த சர்ச்சையில் புதிதாய் பங்கேற்கும் வாசகர்களுக்கு பெண் எழுத்து குறித்து ஆர்வமும் அபிமானமும் இதனால் ஏற்பட்டிருக்கும். இவ்வளவு எழுதிய பின்னும் எங்களை மட்டம் தட்டலாமா என கேட்டிருக்கலாம். அது பொதுமக்களின் இரக்கத்தை பெண்கள் பக்கம் சாய்த்திருக்கும். ஜெயமோகன் தமிழுக்கு முக்கிய பங்களிப்பு அளித்த பெண்களை வணங்குகிறேன் என மறு அறிக்கை விட்டு ஆட்டத்தை முடித்திருப்பார். அவருக்கு வேறு வழியிருந்திருக்காது,

ஆனால் இப்போது ஜெ.மோவை ஒரு பெண் வெறுப்பாளர் என காட்ட நினைக்கும் இந்த அர்த்தமற்ற முயற்சி பெண்களை தான் மோசமான ஒளியில் காட்டுகிறது. நீ ஒரு பெயர் விளித்தால் நான் உன்னை இன்னொரு பெயரால் திட்டுவேன் என்கிற மட்டமான தந்திரமாக அது தோன்றுகிறது. மேலும் ஜெ.மோ போன்ற எழுத்தாளனை அப்படி “பெண் வெறுப்பாளன்” நீங்கள் எளிதில் முத்திரை குத்த முடியுமா? பெண் ஒடுக்குமுறையை நுணுக்கமாக சித்தரித்த அவரது சிறுகதைகளை அவரது எளிய வாசகன் கூட உங்களிடம் எடுத்த சொல்வான். இலக்கிய எழுத்தாளனுக்கும் ஆணாதிக்கமும் பெண்ணியமும் கலந்து கூட இருக்கும். இரண்டு பிரதிகளை ஒன்றுக்கொன்று முரணாய் காட்டுகிறபடி இருக்கும். புதுமைப்பித்தனை தலித் விரோதி என காட்டுவது போன்ற ஒரு தட்டையான தாக்குதலாக இது மாறி விட்டது. உங்கள் நோக்கமும் கோபமும் புரிகிறது. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் தவறானது. எறும்பை சம்மட்டியால் அடித்தால் பள்ளம் உண்டாகும்; ஆனால் எறும்பு தப்பித்து விடும்.

இன்றைய சமூக வலைதள காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு ஒற்றை நூல் பாலம். கரணம் தப்பினால் மரணம். இதோ நீங்கள் போட்ட பாலத்தில் ஜெ.மோ அடிமேல் அடிவைத்து தன்னம்பிக்கையாய் நடந்து போகிறார். உங்களை எங்கும் காணவில்லை. ஒரு பந்து ஏழு ரன்கள் என நிலைமை இருந்தது. நீங்கள் ஒரு நோபால் போட்டீர்கள். ஜெ.மோ இறங்கி சிக்ஸர் அடித்து விட்டார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...