முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கையின் தொடர் வெற்றியும் இந்தியாவின் நிலையும்


இங்கிலாந்தில் இலங்கையின் தொடர்வெற்றி எதிர்பாராதது. அதற்கு ஒரு காரணம் சங்கக்காரார், மஹிளா போன்ற சீனியர்கள் தன்னலமின்றி அணிக்காக தொடர்ந்து உழைப்பது

இன்னொன்று இலங்கையின் ஒழுக்கம் மற்றும் உழைப்பு மற்றும் அணி உணர்வு

இதை வைத்து இந்தியாவும் வென்று விடுமோ என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இலங்கை ஒரு புது அணியாக சென்றது. இந்தியா அப்படி அல்ல - வீரர்கள் .பி.எல்லால களைத்து போயிருக்கிறார்கள் - இஷாந்த், ஷாமி போன்றோர் நல்ல ஆட்டநிலையில் இல்லை. வெளிநாடுகளில் அஷ்வினின் ரெக்கார்ட் ரொம்ப மோசம். பந்தும் சுழலாது. புவனேஷ்வர் மட்டுமே நன்றாக வீசக் கூடும்.


இன்னொரு முக்கிய விசயம் இந்தியாவுக்கு எதிராக இருக்கும். நாம் எப்போதும் சராசரியாக 90-120 ஓவர்களை ஒரு இன்னிங்ஸில் வீசுகிறோம். எதிரணி நன்றாக ஆடினால் 150 ஓவர்களுக்கு மேலே. நம் வேகவீச்சாளர்கள் ஆளுக்கு 20 ஓவர்கள் வீசினதும் களைத்து விடுவார்கள். மூன்று வேக வீச்சாளர்களால் உத்வேகமுடன் 60 ஓவர்கள் தான் வீச முடியும். தோனி மூன்று வேக வீச்சாளர்களுக்கு மேல் எடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பார். மிச்சமுள்ள 60-80 ஓவர்களை யார் வீசுவது? அஷ்வின்? விராத் கோலி, ரோஹித் ஷர்மா? நம் வேகவீச்சாளர்களை ஆளுக்கு 35 ஓவர்களுக்கு மேல் வீச சொன்னால் ஆர்வமின்றி குறைந்த வேகத்தில் வீசுவார்கள். அடுத்த டெஸ்டில் பலவீனமாகி இன்னும் மோசமாகி வீசுவார்கள். மூன்றாவது டெஸ்டில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்படும்.

இது அறிந்து தோனி வேகவீச்சாளர்களை அதிகம் வீச வைக்க மாட்டார். அதனால் அவர் ஜடேஜாவை தேர்வு செய்வார். பந்து சுழலவே செய்யாத இங்கிலாந்தில் அஷ்வினும் அவரும் 50 ஓவர்களுக்கு மேல் வீசினால் ஒரு விக்கெட்டுக்கு மேல் விழாது. அந்த குறிப்பிட்ட கட்டத்தில் எதிரணி சுலபமாக 200 ஓட்டங்கள் எடுக்கும். வேகவீச்சாளர்களை ஒழுங்காக ஆடினால் இங்கிலாந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 400க்கு மேல் எடுக்கலாம். 

தோனி இதை அறிவார்அவரது நோக்கம் எதிரணியை 300க்குள் சுருட்டுவது அல்ல. 500 இரண்டு நாட்களில் அடிக்க வைப்பது. அதன் பின் தம் மட்டையாட்டத்தால் டிரா பண்ணலாம் என நினைப்பார். ஐந்து டெஸ்டுகளில் 3 நாட்கள் நாம் மோசமாக மட்டையாடினால் 3-0 என்ற நிலையில் தொடரை இழப்போம். தோனியின் திட்டத்தின் சிக்கல் இது தான்.


இந்தியாவுக்கு தேவை நல்ல உடல்வலுவும் ஒழுங்கும் கொண்ட வேகவீச்சாளர்கள். களைக்காமல் 140 கி.மீ வேகத்தில் 35 ஓவர்கள் வீசுபவர்கள். அது இல்லாமல் நாம் வெளிநாடுகளில் மாங்கா அடி வாங்கிக் கொண்டே இருப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...