முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னய்யா சவுண்டு அது?


உதவியாளர்: “ஐயா உங்க பொறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தொண்டர் ஒருவர் இந்த வாழ்த்தட்டையை கொடுத்திட்டு போயிருக்கிறாரு”

தலைவர்: “என்னைப் பத்தி எதனாச்சும் புகழ்ந்து எழுதியிருக்குதா?”

உதவியாளர்: “ஒரு கேள்வி கேட்டிருக்காருங்க. எப்படி நீங்க மட்டும் இத்தன நாள் உயிரோட ஆரோக்கியமா திடமா இருக்கீங்கன்னு?


தலைவர்: ம்ம்ம் (பெருமூச்சு விடுகிறார்): அண்ணா போயிட்டார். ராமசந்திரன் போயிட்டான். ம்ம்ம் ... நான் இன்னும் இருக்கேன்.”

சின்னதம்பி கையில் பூச்செண்டுடன் வருகிறார்.

தலைவர்: “இவன் கிட்ட கேட்போம். யோவ், நம்ம தொண்டர் ஒரு கேள்வி கேட்டிருக்கார். அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறெ?”

சின்ன தம்பி அட்டையை வாங்கி பார்க்கிறார்.

சின்னதம்பி: “தெரியல. எனக்கு ஒவ்வொரு பொறந்த நாள் வரும் போதும் கோவமா வருது, ஆனா நீங்க சந்தோசமா இருக்கீங்க.”

தலைவர்: “நீ கடவுளை நம்புறியா?”

சின்னதம்பி: “கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும். ஆனா இப்போ கடவுள் நம்பிக்கையும் போச்சு.”

தலைவர்: “கடவுளை அதிகமா திட்டுறவன் அதிக நாள் இருப்பான். ஹா ஹா”

உதவியாளர்: “அதையே பதிலா எழுதட்டுமாங்க?”

தலைவர்: “எழுது எழுது. கூடவே கொஞ்சம் அடைமொழி எல்லாம் போட்டு பாட்டு மாதிரி எழுது” (சின்னதம்பியை பார்த்து) “தொண்டர் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே. என்ன நினைக்கிறே?”

எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது. பெரிய தம்பி: “நல்லவங்கள ஆண்டவன் சீக்கிரமா கூப்பிட்டிருவான். ஆனா கெட்டவங்கள...?”

தலைவர்: “யாருய்யா அது? என்ன சவுண்டு அது?”

உதவியாளர்: “எனக்கு ஒண்ணும் கேட்கலியே”

தலைவர் சின்னதம்பியிடம்: “உனக்கு கேட்டுச்சா?”

சின்னதம்பி: “நான் ஏதும் சொல்ல விரும்பல”

தலைவர்: “எல்லா ஓட்டையையும் மூடணும் சொன்னேன் இல்லியா. பண்ணுனியா நீ ?...” (சில கெட்டவார்த்தைகளை உதிர்க்கிறார்)

உதவியாளர்: “ஒரு ஜன்னல் விடாம மூடிட்டேன். காத்தே வர மாட்டேங்குது. ஏஸியை கூட மூடிட்டேன்”

பெரியதம்பி: “காது கூட ஓட்டை தான்”
தலைவர்: “யோவ் என்னய்யா சவுண்டு இது, நல்ல நாள் அதுவுமா.” (உதவியாளரை நோக்கி மேலும் சில கெட்டவார்த்தைகள் சொல்லுகிறார்)

பெரியதம்பி: “டி.வி, ரேடியோ, மக்களோட வாய்...”

தலைவர்: (சின்னதம்பியை நோக்கி): “அவனை கட்சியை விட்டு தூக்கிடு. அப்ப தான் அடங்குவான்”

சின்னதம்பி: “ஏற்கனவே தூக்கிட்டோமுங்க”

தலைவர்: “அப்பிடீன்னா நீ கட்சியே விட்டு போயிடு. அவன் கொஞ்ச நாள் உள்ளே வரட்டும். அப்போ தான் இந்த சத்தம் கேட்காம இருக்கும். எனக்கும் பொழுது போவும்” (பிறகு தனக்குள்ளே) “ராமசந்திரனுக்கு இந்த டெக்னிக்கெல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா இன்னும் உயிரோட இருந்திருப்பான்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...