முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கால்கள் நாவலுக்கு ஒரு கடிதம்

(இக்கடிதம் ஒரு நல்ல விமர்சனமாகவும் இருப்பதால் எழுதியவரின் அனுமதி பெற்று வெளியிடுகிறேன்)

அன்புள்ள அபிலாஷ்
வாழ்த்துக்கள்.உங்களுக்கு இளம் எழுத்தாளர் பரிசு கிடைத்ததற்கு மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களுடைய இன்றிரவு நிலவின் கீழ் நூலையும் படித்தேன் ,நல்ல முய்ற்சிகள்.இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி மேன்மேலும் படைப்புத் துறையிலும் எழுத்திலும் வெற்றிகளை ஈட்டுக.உங்கள் கால்கள் நாவலை எங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

கால்களில் கதை சொல்லும் முறையில் தொய்வில்லாமல் இவ்வளவு பக்கம் எழுதியது உங்கள் திறமையைக் காட்டுகிறது.மொழியின் ஆழமும் அதன் உவமை முதலிய நிறைந்த செழுமையான நடையும் கவரத்தக்கதாக உள்ளன.அதற்கும் மேலே அப்படைப்பில் வெளிப்படும் ஒரு அறிவு ததும்பும் வாழ்க்கைச் சூழல் அதற்கு  ஒரு உயர்ந்த தரத்தைத் தருகிறது.பாசாங்கில்லாத மெய்மை சார்ந்த பாத்திரப்படைப்பு உங்கள் புனைவுலகத்திற்கு வலுச் சேர்த்துள்ள ரசவாதம் வியப்பாக உள்ளதுஇபல விஷயங்களைப் பற்றிய அநாயாசமான பார்வைகளில் வெளிப்படும் முதிர்ச்சியான உதிர்ப்புகள் (அண்ணா குறள் பற்றியவை)இளைஞரான உங்களிடம் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது.இது பாராட்டிப் போற்றத்தக்கது.தமிழுக்குப் பெருமையும் வளமையும் சேர்ப்பது.அதற்காகத் தான் இந்தப் பரிசு.தொடர்க உங்கள் இலக்கியப்பணி.தமிழ்ப் பணி.
வாழ்க வளர்க வளமுடன்
அன்புடன்
கி.நாச்சிமுத்து

 -- 
Prof.Krishnaswamy Nachimuthu
Professor &Coordinator ,Department of Tamil,
Central University of Tamilnadu
Neelakkudi Campus.Kangalancherry,
Thiruvarur-610 101(Tamil Nadu)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.