முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உம்மத்


சர்மிளா சய்யதின்உம்மத்நாவல் படிக்கும் போது இது என் பாணி எழுத்து என மனதில் சட்டென பட்டது. அவரது  பொறுமையாய் நிதானமாய் மனதின் போக்குகளை படம் பிடிக்கும்விதமாய் கதை சொல்லும் விதம் பிடித்திருக்கிறது. இவ்வகை நாவல்கள் இப்போது அருகி விட்டன.


ஒரு கதையை விறுவிறுப்பாய் வேகமாய் சொல்ல வேண்டும் எனும் வணிக பாணி இன்று இலக்கிய, இடைநிலை நாவல்களில் வேரூன்றி உள்ளது. பல நாவல்கள் ஒரு சின்ன நீண்ட கதையை போல் உள்ளன. சில நாவல்கள் சினிமா திரைக்கதை போல் உள்ளன. ஆனால் நாவல் என்பது மனதின் பல்வேறு விரியும் தன்மைகளை படம் பிடிக்கும் எழுத்துவகை. ஆக அது இயல்பாகவே முடுக்கி விட்ட பொம்மைக்கார் போல் ஓடாது. பொறுமையாய் சென்னை டிராபிக் போலத் தான் நகரும். ஆனால் நிச்சயம் அலுப்பு தட்டாது. ஒரு நல்ல நாவலுக்கு சாவகாசமான தளர் ஓட்டம் முக்கிய குணம். அப்போது தான் நின்று நிதானமாய் கவனித்து பதிவு பண்ண இயலும். ”உம்மத்சரியான வேகத்தில் எழுதப்பட்டுள்ளது பிடித்திருக்கிறது. இயல்பாகவே இப்படியான நாவல்கள் பேஸ்புக், இணைய பயனர்களின் அதிரடி பரபரப்பை தூண்டாது. ஆனால் நாவல் என்பது இணையத்தில் ஆவி பறக்க அள்ளித் தின்பவர்கள் மட்டுமே படிக்கிற வஸ்து அல்லவே! இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் வெளியே! எப்போதுமே வெளியே இருப்பவர்கள் தாம் என்னைப் பொறுத்தவரையில் முக்கியம்.
ஸ்ர்மிளா சய்யித் ஏற்கனவே கவிஞர் என்பதால் அவரது உரைநடைக்கு ஒரு தனி அழகு கூடியிருக்கிறது. அங்கங்கே வழுக்குத் தரை போல் தோன்றினாலும் பொதுவாக மனதை மீட்ட வைக்கும் மொழி அவருக்கு கை கூடியிருக்கிறது. அவரது நாவல் தொடர்ந்து மனதை பற்றி பேசுகிறது என்பது எனக்கு பிடித்த இன்னொரு விசயம். இன்று புற உலக நாவல்கள் அதிகமாகின்றன. அதில் தவறில்லை. இத்தகைய நாவல்கள் சிலவேளை வெறும் பத்திரிகை அறிக்கைகளின் தொகுப்பு போல் ஆகின்றன. ஈழப்போர் பற்றின அறிக்கை நாவல்களும் வரலாம். ஆனால் ஈழப்போரில் சம்மந்தப்பட்ட சில பெண்களின் மன வாழ்க்கையை பேசுவதும் முக்கியம் தான்.  
“உம்மத்” படிக்கும் போது அறுபதுகளில் இங்கு எழுதப்பட்ட நாவல்கள், மொழியாக்க ரஷ்ய நாவல்கள் நினைவு வருகின்றன. நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிற ஒரு நாவல் வகையை மீட்டு வருகிறார் ஸர்மிளா.

இன்னொரு சந்தர்பத்தில் “உம்மத்” பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...