முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உம்மத்


சர்மிளா சய்யதின்உம்மத்நாவல் படிக்கும் போது இது என் பாணி எழுத்து என மனதில் சட்டென பட்டது. அவரது  பொறுமையாய் நிதானமாய் மனதின் போக்குகளை படம் பிடிக்கும்விதமாய் கதை சொல்லும் விதம் பிடித்திருக்கிறது. இவ்வகை நாவல்கள் இப்போது அருகி விட்டன.


ஒரு கதையை விறுவிறுப்பாய் வேகமாய் சொல்ல வேண்டும் எனும் வணிக பாணி இன்று இலக்கிய, இடைநிலை நாவல்களில் வேரூன்றி உள்ளது. பல நாவல்கள் ஒரு சின்ன நீண்ட கதையை போல் உள்ளன. சில நாவல்கள் சினிமா திரைக்கதை போல் உள்ளன. ஆனால் நாவல் என்பது மனதின் பல்வேறு விரியும் தன்மைகளை படம் பிடிக்கும் எழுத்துவகை. ஆக அது இயல்பாகவே முடுக்கி விட்ட பொம்மைக்கார் போல் ஓடாது. பொறுமையாய் சென்னை டிராபிக் போலத் தான் நகரும். ஆனால் நிச்சயம் அலுப்பு தட்டாது. ஒரு நல்ல நாவலுக்கு சாவகாசமான தளர் ஓட்டம் முக்கிய குணம். அப்போது தான் நின்று நிதானமாய் கவனித்து பதிவு பண்ண இயலும். ”உம்மத்சரியான வேகத்தில் எழுதப்பட்டுள்ளது பிடித்திருக்கிறது. இயல்பாகவே இப்படியான நாவல்கள் பேஸ்புக், இணைய பயனர்களின் அதிரடி பரபரப்பை தூண்டாது. ஆனால் நாவல் என்பது இணையத்தில் ஆவி பறக்க அள்ளித் தின்பவர்கள் மட்டுமே படிக்கிற வஸ்து அல்லவே! இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் வெளியே! எப்போதுமே வெளியே இருப்பவர்கள் தாம் என்னைப் பொறுத்தவரையில் முக்கியம்.
ஸ்ர்மிளா சய்யித் ஏற்கனவே கவிஞர் என்பதால் அவரது உரைநடைக்கு ஒரு தனி அழகு கூடியிருக்கிறது. அங்கங்கே வழுக்குத் தரை போல் தோன்றினாலும் பொதுவாக மனதை மீட்ட வைக்கும் மொழி அவருக்கு கை கூடியிருக்கிறது. அவரது நாவல் தொடர்ந்து மனதை பற்றி பேசுகிறது என்பது எனக்கு பிடித்த இன்னொரு விசயம். இன்று புற உலக நாவல்கள் அதிகமாகின்றன. அதில் தவறில்லை. இத்தகைய நாவல்கள் சிலவேளை வெறும் பத்திரிகை அறிக்கைகளின் தொகுப்பு போல் ஆகின்றன. ஈழப்போர் பற்றின அறிக்கை நாவல்களும் வரலாம். ஆனால் ஈழப்போரில் சம்மந்தப்பட்ட சில பெண்களின் மன வாழ்க்கையை பேசுவதும் முக்கியம் தான்.  
“உம்மத்” படிக்கும் போது அறுபதுகளில் இங்கு எழுதப்பட்ட நாவல்கள், மொழியாக்க ரஷ்ய நாவல்கள் நினைவு வருகின்றன. நாம் மெல்ல மெல்ல இழந்து வருகிற ஒரு நாவல் வகையை மீட்டு வருகிறார் ஸர்மிளா.

இன்னொரு சந்தர்பத்தில் “உம்மத்” பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...